ஒரு பெரிய விஷயத்தில் மூழ்கும் போது பிறவற்றின் மீது சலிப்பு கொண்டு அவற்றை கைவிடுவது, சோர்ந்து போவது, மனக் குழப்பத்தில் மூழ்குவது என்று தேங்கி போவது எனக்கும் பிரச்சனையாக இருக்கிறது.
டாடாவில் உற்பத்தி தளத்தில் உழைத்தேன். அதில் நிறைய பலன்கள் கிடைத்தன, பலர் அதை அங்கீகரிக்க ஆரம்பித்தனர். உண்மையில் டாடாவில் உற்பத்தி தளத்தில் என்னை அடித்துக் கொள்ள யாரும் இருக்கவில்லை. வர்த்தக பிரிவில் வந்த பிறகுதான் எனது சரிவு ஆரம்பமானது.
ஷாங்காயில் முதல் கட்டத்தில் வேலை செய்ய ஆரம்பித்தேன். ஷாங்காயில் ஏற்றுமதி ஆர்டர் பிடித்து விட்டேன். ஆனால், அதை செயல்படுத்துவதில் உரசல், மோதல் ஆரம்பமானது. அவனது பொறியில் விழுந்தேன். அதுதான் நான் எனக்கு நானே வைத்துக் கொண்ட ஆப்பு.
அதன் பிறகு மெங்னு ரிட்டர்ன், ஷௌவாங் ஆர்டர் பிரச்சனை என்று இழுத்தடித்தது. அதை எல்லாம் பிடித்து தந்தது நிங் ருய் சிய என்ற அடக்கமும் தெளிவும் என்னிடம் இருக்கவில்லை. இரண்டு பக்கமும் கைவிடப்பட்டு வறுப்பில் வாடி வதங்கி போனேன். அந்த நேரம் குழந்தை பிறப்பு என்று தேங்கி போனேன். அதன் பிறகு எதுவும் பிக் அப் ஆகவில்லை. இரண்டாம் தர ஊழியனாக நாற்காலியை தேய்த்து விட்டு வெளியே வந்தேன்.
பி.எல்.சி-யில் என்னை மதிப்புள்ள ஒரு சக்தியாக எடுத்துக் கொண்டாலும் என்னால் அந்த முதலாளித்துவ கலாச்சாரத்துக்குள் பொருந்த முடியாமல் ஒரு misfit ஆகத்தான் இருந்தேன். டாடாவில் பழகிய நடைமுறைகள் அங்கு செல்லுபடியாகவில்லை. இதற்கு நடுவில் shenanigan-களில் சிக்கி, என்று திசை மாறிப் போனேன். பணத்தை இடது, வலது என்று வாரி இறைத்தேன். அசட்டுத்தனமான தன்னம்பிக்கையுடன் சுற்றித் திரிந்து கொண்டிருந்தேன்.
அதன் பிறகு இங்கு வந்து சேர்ந்து லெதர் லிங்க். கடைசி வரை உழைக்கத்தான் செய்தேன். உளமார உழைத்தேன். ஓடி ஓடி உழைத்தேன். வெளியில் நடக்கும் செயல்பாடுகளில் நொந்து போய் வெளியேறினேன். அதில் என்னால் முடிந்ததை செய்தேன். அதில் இன்னும் உழைத்திருக்க முடியுமா என்று கேட்டால் முடியும்தான். ஒரு முதலாளித்துவ ஒழுங்குடன், தொழில்முறை செயல்பாட்டுடன் உழைத்திருக்க முடியுமா என்றால் முடியும்தான். ஒரு முறையில் தோல்வி என்றவுடன் துவண்டு போய் கைவிட்டு விட்டேன்.
ஆனால், பல மாற்றங்களை தொடர்ந்து செய்யத்தான் செய்தேன். ஆன்லைன் மாடல் ஒத்து வரவில்லை என்று சொன்னதும் ஆஃப்லைன் கொடுக்க முன் வந்தேன். சீன மொழி கற்றுக் கொடுத்தல், மொழிபெயர்ப்பு, பத்திரிகைகளுக்கு எழுதுதல், தமிழ்க் கணினி திட்டம் என்று பல்வேறு வழிகளில் ஜல்லி அடித்து நிறுவனத்தை நகர்த்திச் சென்று கொண்டிருந்தேன்.
சரியாக 2002 பொருளாதார தேக்கத்தின் போது தொடங்கி 2005-ல் மறுபடியும் பிக் அப் ஆகும் போது சூடு பிடித்து, 2008-ல் மூக்கடிக்க விழுந்தேன். புறநிலையை புரிந்து கொள்ளாமல் ஒரு கற்பனாவாத தொழில் முயற்சி அது. அது போன்றுதான் இப்போதும் நடக்கிறதா?
எனக்கு முறையான ஒரு அலுவலக வேலை முறை தேவைப்படுகிறது. காலை முதல் மாலை வரை வேலை செய்ய வேண்டும். அதற்கு ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.
பிப்ரவரி மாதம் டெஹ்ரா டூன் போய் ஒரு வாரம் பாரதியுடன் தங்கினேன். அவளுடன் சேர்ந்து பாடம் படித்தேன். அதன் பிறகு அவள் இங்கு வந்த பிறகு ஜூன் மாதம் 2 நாட்கள் துஷாரிகா அங்கு வரச் சொன்னாள். அதன் பிறகு ஒரு சில நாட்கள் பாரதி என்னுடன் சேர்ந்து வேலை செய்ய வர ஆரம்பித்தாள். அதை பின்னர் துஷாரிகா வெட்டி விட்டாள்.
மெட்ரோ ரயில் திட்டம் பற்றிய ஆய்வு செய்யலாம் என்று சொல்லியிருந்தேன்.
இந்த வருடம் நாகர்கோவிலுக்கு போகவே இல்லை.
அனுபவை ஒரு முறை கூட பார்க்கவில்லை, பேசவில்லை, எழுதவில்லை. பாரதியை இங்கிருந்து அனுப்பி வைக்கும் போது ஒரு முறை, டெஹ்ராடூனில் ஒரு வாரம், அதன் பிறகு இங்கு திரும்பி வந்த பிறகு ஒரு முறை, பிறந்த நாளை ஒட்டி 2 நாட்கள், அதன் பிறகு சில முறைகள், கடைசியில் இங்கிலாந்துக்கு போவதற்கு முன்பு ஒரு முறை சந்தித்தேன். அங்கு போன பிறகு வாட்ஸ்-ஆப்-ல் உரையாடிக் கொண்டிருக்கிறேன்.
அவ்தேஜ் ஜூன் மாதம் அறிமுகமானான். மனதுக்கு மிக நெருக்கமான பையனாக தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறான். அவனது வாழ்க்கை சிறக்கட்டும். இந்த ஆண்டு அவனை சந்திக்க முயற்சிக்க வேண்டும்.
டாடாவில் உற்பத்தி தளத்தில் உழைத்தேன். அதில் நிறைய பலன்கள் கிடைத்தன, பலர் அதை அங்கீகரிக்க ஆரம்பித்தனர். உண்மையில் டாடாவில் உற்பத்தி தளத்தில் என்னை அடித்துக் கொள்ள யாரும் இருக்கவில்லை. வர்த்தக பிரிவில் வந்த பிறகுதான் எனது சரிவு ஆரம்பமானது.
ஷாங்காயில் முதல் கட்டத்தில் வேலை செய்ய ஆரம்பித்தேன். ஷாங்காயில் ஏற்றுமதி ஆர்டர் பிடித்து விட்டேன். ஆனால், அதை செயல்படுத்துவதில் உரசல், மோதல் ஆரம்பமானது. அவனது பொறியில் விழுந்தேன். அதுதான் நான் எனக்கு நானே வைத்துக் கொண்ட ஆப்பு.
அதன் பிறகு மெங்னு ரிட்டர்ன், ஷௌவாங் ஆர்டர் பிரச்சனை என்று இழுத்தடித்தது. அதை எல்லாம் பிடித்து தந்தது நிங் ருய் சிய என்ற அடக்கமும் தெளிவும் என்னிடம் இருக்கவில்லை. இரண்டு பக்கமும் கைவிடப்பட்டு வறுப்பில் வாடி வதங்கி போனேன். அந்த நேரம் குழந்தை பிறப்பு என்று தேங்கி போனேன். அதன் பிறகு எதுவும் பிக் அப் ஆகவில்லை. இரண்டாம் தர ஊழியனாக நாற்காலியை தேய்த்து விட்டு வெளியே வந்தேன்.
பி.எல்.சி-யில் என்னை மதிப்புள்ள ஒரு சக்தியாக எடுத்துக் கொண்டாலும் என்னால் அந்த முதலாளித்துவ கலாச்சாரத்துக்குள் பொருந்த முடியாமல் ஒரு misfit ஆகத்தான் இருந்தேன். டாடாவில் பழகிய நடைமுறைகள் அங்கு செல்லுபடியாகவில்லை. இதற்கு நடுவில் shenanigan-களில் சிக்கி, என்று திசை மாறிப் போனேன். பணத்தை இடது, வலது என்று வாரி இறைத்தேன். அசட்டுத்தனமான தன்னம்பிக்கையுடன் சுற்றித் திரிந்து கொண்டிருந்தேன்.
அதன் பிறகு இங்கு வந்து சேர்ந்து லெதர் லிங்க். கடைசி வரை உழைக்கத்தான் செய்தேன். உளமார உழைத்தேன். ஓடி ஓடி உழைத்தேன். வெளியில் நடக்கும் செயல்பாடுகளில் நொந்து போய் வெளியேறினேன். அதில் என்னால் முடிந்ததை செய்தேன். அதில் இன்னும் உழைத்திருக்க முடியுமா என்று கேட்டால் முடியும்தான். ஒரு முதலாளித்துவ ஒழுங்குடன், தொழில்முறை செயல்பாட்டுடன் உழைத்திருக்க முடியுமா என்றால் முடியும்தான். ஒரு முறையில் தோல்வி என்றவுடன் துவண்டு போய் கைவிட்டு விட்டேன்.
ஆனால், பல மாற்றங்களை தொடர்ந்து செய்யத்தான் செய்தேன். ஆன்லைன் மாடல் ஒத்து வரவில்லை என்று சொன்னதும் ஆஃப்லைன் கொடுக்க முன் வந்தேன். சீன மொழி கற்றுக் கொடுத்தல், மொழிபெயர்ப்பு, பத்திரிகைகளுக்கு எழுதுதல், தமிழ்க் கணினி திட்டம் என்று பல்வேறு வழிகளில் ஜல்லி அடித்து நிறுவனத்தை நகர்த்திச் சென்று கொண்டிருந்தேன்.
சரியாக 2002 பொருளாதார தேக்கத்தின் போது தொடங்கி 2005-ல் மறுபடியும் பிக் அப் ஆகும் போது சூடு பிடித்து, 2008-ல் மூக்கடிக்க விழுந்தேன். புறநிலையை புரிந்து கொள்ளாமல் ஒரு கற்பனாவாத தொழில் முயற்சி அது. அது போன்றுதான் இப்போதும் நடக்கிறதா?
எனக்கு முறையான ஒரு அலுவலக வேலை முறை தேவைப்படுகிறது. காலை முதல் மாலை வரை வேலை செய்ய வேண்டும். அதற்கு ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.
பிப்ரவரி மாதம் டெஹ்ரா டூன் போய் ஒரு வாரம் பாரதியுடன் தங்கினேன். அவளுடன் சேர்ந்து பாடம் படித்தேன். அதன் பிறகு அவள் இங்கு வந்த பிறகு ஜூன் மாதம் 2 நாட்கள் துஷாரிகா அங்கு வரச் சொன்னாள். அதன் பிறகு ஒரு சில நாட்கள் பாரதி என்னுடன் சேர்ந்து வேலை செய்ய வர ஆரம்பித்தாள். அதை பின்னர் துஷாரிகா வெட்டி விட்டாள்.
மெட்ரோ ரயில் திட்டம் பற்றிய ஆய்வு செய்யலாம் என்று சொல்லியிருந்தேன்.
இந்த வருடம் நாகர்கோவிலுக்கு போகவே இல்லை.
அனுபவை ஒரு முறை கூட பார்க்கவில்லை, பேசவில்லை, எழுதவில்லை. பாரதியை இங்கிருந்து அனுப்பி வைக்கும் போது ஒரு முறை, டெஹ்ராடூனில் ஒரு வாரம், அதன் பிறகு இங்கு திரும்பி வந்த பிறகு ஒரு முறை, பிறந்த நாளை ஒட்டி 2 நாட்கள், அதன் பிறகு சில முறைகள், கடைசியில் இங்கிலாந்துக்கு போவதற்கு முன்பு ஒரு முறை சந்தித்தேன். அங்கு போன பிறகு வாட்ஸ்-ஆப்-ல் உரையாடிக் கொண்டிருக்கிறேன்.
அவ்தேஜ் ஜூன் மாதம் அறிமுகமானான். மனதுக்கு மிக நெருக்கமான பையனாக தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறான். அவனது வாழ்க்கை சிறக்கட்டும். இந்த ஆண்டு அவனை சந்திக்க முயற்சிக்க வேண்டும்.