சிறை.
நாட்டிற்காக ஓயாது உழைத்தவர்களுக்கு சற்று ஓய்வு
கொடுத்த இடம் சிறை.
மெத்தப் படித்தவர்கள், இடையூறின்றி எழுத இடம் கொடுத்ததும் சிறைதான்.
சிறை.
நாட்டிற்காக ஓயாது உழைத்தவர்களுக்கு சற்று ஓய்வு
கொடுத்த இடம் சிறை.
மெத்தப் படித்தவர்கள், இடையூறின்றி எழுத இடம் கொடுத்ததும் சிறைதான்.
நடு இரவு.
உடையார் பாளையம் ஜமீன் ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்திருந்தது.
நடு இரவிலும், கையில் வாளேந்தி, விருந்தினர் அறையை நோக்கிச்
செல்கிறார் ஜமீன்தார்.
அறை வாசலில் நின்றிருந்த காவலர்களுக்கு, அமைதி காக்கும்படி சாடை காட்டிவிட்டு, மெல்ல அறையைத் திறந்து உள்ளே
செல்கிறார்.
மங்கிய விளக்கொளியில், ஓர் உருவம், முழுவதுமாய் போர்த்திக்கொண்டு
படுத்திருப்பது தெரிகிறது.
அருகில் சென்றவர், வாளை ஓங்கி, முழு பலத்துடன் வெட்டுகிறார்.