தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், செப்டம்பர் 27, 2018

ச்சீ இந்த ஜூஸ் புளிக்கும்


Image

இப்பதிவின் முந்தைய தொடர்ச்சி கீழே சொடுக்குக...

ண்பர்களே இவைகளை எல்லாம் கடந்து நாம் இந்த நாட்டில் லைசென்ஸ் வாங்கி விட்டோம் என்றால் அது மிகப்பெரிய சாதனைதான் நம்நாட்டில் கல்லூரிப் படிப்பை முடித்து சான்றிதழ் வாங்கியவன் நிலையே என்றால் அது மிகையாகாது இதற்கான கால அளவுகள் ஒரு வருடத்தையும் தாண்டலாம் செலவுகள் எமராத் திர்ஹாம்ஸ் நான்காயிரத்திலிருந்து ஆறாயிரம்வரை ஆகலாம் அதையும் கடந்தும் போகலாம்.

திங்கள், செப்டம்பர் 24, 2018

பதினெட்டாம்படி கருப்பர் துணை



Image

U.A.E Emirates Driving Company (Government) 2000-ல் தொடங்கியது இதில் தான் பழகி டிரைவிங் லைசென்ஸ் எடுக்க முடியும் முன்பு பாக்கிஸ்தானியர்கள் வாடகை கார் வைத்து சாலைகளில் பழகிக் கொடுப்பார்கள் பிறகு போலீஸ் டெஸ்ட்டில் பாஸானால் ? லைசென்ஸ் கிடைக்கும் இதில் விபத்துக்கள் அதிகமாகிக் கொண்டே வருவதால் அரசாங்கமே இதைப் பழகிக் கொடுக்கும் நிலையை பிரகடணப்படுத்தினார்கள் சட்ட திட்டங்கள் கடுமையாக வகுக்கப்பட்டு அபுதாபி நகரின் வெளிப்புறத்தில் ஏக்கர் கணக்கில் ஒரு சிட்டியை உருவாக்கினார்கள்.

வெள்ளி, செப்டம்பர் 21, 2018

கேப்பையில் டால்டா


Image

தமிழ் திரைப்படங்களில்... கதைக்காக கசாநாயகனா ? சாநாயகனுக்காக கதையா ? என்பது இதுவரை விளங்கவில்லை கசாநாயகன் ஒரு போலீஸ் அதிகாரி என்றால் காவல்துறை மிகமிக கண்ணியமாக, நியாயமாக, காவலர்கள் மிகப்பெரிய வீரர்களாக, பொதுமக்கள் கசாநாயகனை கண்டால் மரியாதை கொடுக்கிறார்கள் ரௌடிகள் பயப்படுகிறார்கள் நல்லவனாக சித்தரிக்கப்படுகிறது.

திங்கள், செப்டம்பர் 17, 2018

பழனியாண்டி


Image

இப்பதிவின் தொடர்பான முந்தைய பதிவுகளை படிக்க கீழே சொடுக்குக...

என் இனிய இந்தியா 1983 மே மாதம் அப்பொழுது எனது அகவை பதினைந்து பழனி முருகன் கோவிலில் எல்லோரும் வணங்குகின்றார்களே என்று நானும் வரிசையில் போய் கருவறையருகில் நிற்கிறேன் யாரையும் கை கூப்பி வணங்க விடாத அர்ச்சகர்கள் தள்ளிக்கொண்டே இருக்கின்றார்கள் இல்லாவிட்டால் யார்தான் இடத்தை காலி செய்வார்கள் நிற்க அதற்குத்தக பலன் என்று நிற்பார்களே...

சனி, செப்டம்பர் 15, 2018

தன்வினை


Image

இப்பதிவின் தொடர்பான முந்தைய பதிவுகளை படிக்க கீழே சொடுக்குக...

முன்குறிப்பு – இதைப் படிக்கப்போகும் சில நண்பர்களுக்கு என்மீது மனவருத்தம் நேரிடலாம் நான் என் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவத்தை தங்களுடன் பகிர்ந்து கொள்ளத்தான் எழுதுகின்றேனே தவிர வேறு நோக்கமில்லை இது மட்டுமல்ல 1983-ஆம் ஆண்டு பழனி முருகன் கோவில் கருவறையருகில் எனக்கும், கோவில் அரச்சகருக்கும் நடந்த வாக்கு வாதத்தையும் எழுதப்போகிறேன் அன்று எனது அகவை பதினைந்து அதன் பிறகு இறைவழிபாடு தேவையில்லை என்பதை உணர்ந்து இறைபக்தியை மனதார ஏற்றுக்கொண்டு மனசாட்சிக்கு பயந்து இந்த நொடிவரை நியாயமாக வாழ்ந்து மேலும் கடைசிவரை வாழ முயற்சிப்பவன் நான் நன்றி.

செவ்வாய், செப்டம்பர் 11, 2018

சுலைமாணி


Image

இப்பதிவின் தொடர்பான முந்தைய பதிவுகளை படிக்க கீழே சொடுக்குக...

மன்ஸூர் அவாத்திடம் தனியாக பேச்சு வார்த்தை நடத்தி மருத்துவர் குழுவை வரவழைத்து என்னை மீண்டும் அதே இடத்துக்கு கொண்டு வந்து விட்டார் இதற்கான லஞ்சம் அவாத் கேட்கும் போதெல்லாம் சுலைமாணி.

சனி, செப்டம்பர் 08, 2018

ஆச்சாரி


Image

இப்பதிவின் தொடர்பான முந்தைய பதிவை படிக்க கீழே சொடுக்குக...

சூடான் நாட்டைச் சேர்ந்த அவாத் என்ற மனநோயாளி முரடன் அவனை எப்பொழுதுமே அவன் கேட்காமலேயே சுலைமாணி கொடுத்து சரி செய்து இருப்பேன் எனது செலவு இல்லையே எல்லாம் அரசாங்க பணம் அப்பொழுதான் நாம் காலம் தள்ள முடியும். அரபு மொழியில் பால் கலக்காத வரட்டீயைத்தான் சுலைமாணி என்பார்கள்.

புதன், செப்டம்பர் 05, 2018

மனிதமூளை


Image

னிதனின் மூளை மென்மையானது என்று படித்து இருக்கிறேன், கேள்விப்பட்டு இருக்கிறேன் ஆனால் எனது அனுபவத்தில் தவறென்றே கருத தோன்றுகிறது காரணம் நான் இருபது ஆண்டுகளாக அரேபியர்களுடனும், அரேபியப் பெண்களிடமும் மட்டுமல்ல, அரபுமொழி பேசும் அனைத்து நாட்டவர்களிடமும் பழகி வேலை செய்து இருக்கிறேன் ஆயினும் நான் இதுவரை மனநல மருத்துவமனைக்கோ, மனநல மருத்துவரையோ காணப் போனதில்லை. உலகத்திலேயே மிகக் கொடுமையானது என்ன தெரியுமா ? முட்டாள்களோடு இணைந்து வேலை செய்வதுதான். But one thing Indians will make more money and send to India.

ஞாயிறு, செப்டம்பர் 02, 2018

காலமது கூடியது


Image

நினைவுகள் பின்னோக்கியதே
கனவுகள் நனவாகியதால்
கனவுகள் நனவானது
மனது மகிழ்வானது