"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Sunday, June 08, 2008

இல்லாது போனவற்றின் வலி

இல்லாது போனவற்றின் வலி.


Image


ஊர்ந்து உரசும் மூச்சொலி
மெல்லக் கீறுகிறது செவிப்பறையின் சவ்வுகளை

அசைவுறும் மௌனத்தின் அடிக்கால்களனைத்தும்
நீந்திப் பாய்கிறது தேடுபுலன்கள்
மையப்புள்ளியின் ஆதாரத்தில் சுழலும் விசைபோல

ஒவ்வொரு நிழலின் முதுகுப்புறத்தினின்றும்
செவியில் விழுமொரு நிசப்தம் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது

செவியின் தவிப்பில் விழியிலேறிப் பயணிக்கிறது
உடலெங்குமொரு பிடிபடாதவொரு அசௌகரியம்

ஒன்றாகிக் கிடந்த புறவெளியின் கோலமொன்றிலிருந்து
ஒரு கணம் விலகியெழுந்து விரைத்துயர்ந்து
இமையா விழி வீசிய அரவத்தின் பிரம்மாண்டம் கண்டதன்
அநிச்சையான விலகலின் போது
வதையுண்டு அடங்கிக் கொண்டிருந்தது ஒரு உயிர்

ஒரு கணசெலவில் காலத்தினுள் தேய்ந்து போன
உயிர் வதையறிந்த படபடப்படங்கி
பொத்தென்று விழுந்து நிமிர்ந்த அந்த அற்பப் பறவை
அணைத்துக் கிடந்தது மீதமிருந்த வாழ்க்கையை
இல்லாது போனதையெண்ணி வலியுறும் வகையறியாது

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்