Image

நம்மை நம்பாதவரை நாம்‌ எப்படி நம்புவது? – அண்ணா

நம்மை, உன்னிடம்‌ நம்பிக்கை யற்றவருடன்‌ இராதே, அவருடைய தலைமையிலே பணியாற்றாதே, ஓடு, ஓடு என்றுதானே கூறுகிறது. பொருந்தாத்‌ திருமணம்‌ என்று கேள்வியுற்றதும்‌, வெட்கப்‌ பட்டோம்‌ – அதற்குப்‌ பெரியார்‌ தந்த அறிக்கை நமக்கு வேதனையை எட்டியது. இதோ விரட்டப்படுகிறோம்‌, நாம்‌ கட்டிய கோட்டையிலிருந்து, நாம்‌ பாடுபட்ட. களத்திலிருந்து தந்தை மக்களை விரட்டியடிக்கிறார்‌, புதிய வார்சு தேடிக்‌ கொண்டு. இக்கற்றவர்களாகி, திகைப்புரண்டவர்களாகி, பாடுபட்டதின்‌ பலனைப்‌ பறிகொடுத்து விட்டு, குடிபுகுந்த குமரி.கோலோச்ச முற்படுவது கண்டு, குமுறி, குன்றி, கோவெனக்‌ கதறிக்‌…

Image

புதிய அனிபெசண்ட்‌ புறப்படுகிறார் – அண்ணா

அம்மையும்‌ ஆச்சாரியார்‌ போலவே உண்மையில்‌ பாக்கியசாலிதான்‌.. இல்லையானால்‌ பெரியார்‌, “*என்‌ ஆயுள்வரையும்‌, கூடுமான அளவு என்‌ ஆயுளுக்குப்‌ பின்னும்‌, ஒழுங்காக இயக்கத்தை நடத்தும்‌ தகுதி, இந்த மணியம்மைக்கு உண்டு என்று கூறுவாரா??? “பத்தாவதுவரை படித்துமிருக்கிறது”” என்று இரண்டாவது தூதுகோஷ்டியிடம்‌ பெரியார்‌, கூறினாராம்‌. அவர்‌ நலத்திலும்‌, இயக்க நலத்திலும்‌, உண்மையான பற்றும்‌, கவலையும்‌, இயக்கம்‌ இருபது முப்பது பேர்கொண்ட அளவாகயிருந்த காலம்‌ முதற்‌ கொண்டு பாடுபட்டு வந்த, எதிரிகளிடம்‌ அடி உதை பட்டு வந்த யாருக்கும்‌ கிடையாதது, இந்த…

Image

வளர்ப்புப்‌ பெண்தான்‌ மனைவி? – அண்ணா

அவர்‌ பாக்கியசாலி! உண்மையிலேயே: உழைத்து  உருக்குலைந்து போய்‌ இவர்‌ தவிர வேறு ஒரு தலைவரே கிடையாது. என்று மனமார நம்பி, செக்குமாடென  உழைத்துவரும்‌ நாம்‌ பெறவில்லை. அந்த பாக்கியத்தை! அன்பர்‌ ஆச்சாரியார்‌ பெற்றார்‌! (கோவை மாநாட்டிலே கேட்டேன்‌, என்ன பேச்சு உமக்குள்‌ என்று; கேட்டது தவறு என்றனர்‌ பலர்‌.) ஆச்சாரியாருடன்‌ கலந்து பேசிய பிறகும்‌, இயக்கத்‌ தோழர்களில்‌ யாரிடமும்‌ இதுபற்றி மூச்சுவிடாமல்‌, மிக மிக:ரகசியமாக, இந்தத்‌ திருமண ஏற்பாட்டடினுக்கான காரியத்தைத்‌ துவக்கினார்‌. எப்படியோ உண்மை தலைகாட்டிற்று; உளம்‌…

Image

முகத்திலே கரி பூசிவிட்டார் – அண்ணா

பெரியாருக்கு, மகனோ, மகளோ இல்லை – மணி  அம்மையாரின்‌ ஆரம்ப காலத்‌ தொண்டு போன்ற தொண்டு புரிய ஆனால்‌ அண்ணன்‌ உண்டு, அவர்களுக்கு திருமகள்‌ இருவர்‌, புத்திரர்கள்‌ மூவர்‌ – தமக்கை உண்டு – அவர்களுக்குக்‌ குமாரிகள்‌ மூவர்‌, குமாரர்கள்‌ இருவர்‌ – அனைவரும்‌, வேலூரிலிருந்து வேற்றுக்‌ குடும்பத்தப்‌ பெண்வந்து சேருமுன்பு பெரியாருக்குப் பணிவிடை செய்வதிலோ, இயக்கப்‌ பணி புரிவதிலோ  ஈடுபடாமலிருந்தவர்கள்‌ அல்ல. சில மாநாடுகளில்‌ தோழியர்கள்‌ காந்தி பி.ஏ., மிராண்டா பி.ஏ., என்னும்‌ இருவரும்‌ கலந்துகொண்டது…

Image

பூனா வெடிகுண்டு – நாமக்கல் கவிஞர்

விந்தையில் விந்தை! காந்தியின் மேலும் வெடிகுண்டை யாரோ வீசினராம்! ஹிந்தும தத்தில் வந்தவர் யாரும் இப்படி யும்செய ஒப்புவரோ! நிந்தையில் நிந்தை இதைவிட வேறும் இந்திய நாட்டிற்கு வந்திடுமோ! இந்தவி பத்தில் காந்தியைக் காத்தது எந்தப் பொருளதைச் சிந்தை செய்வோம். சத்தியம் மெய்யே, சாந்தமும் மெய்யே சாதித் துயர்ந்திட்ட சாதுக்கள்மெய் நித்தமும் நின்று நம்மை நிறுத்து நீதி செலுத்திடும் ஜோதியும்மெய் பொய்த்திடும் பொய்யே போனது ஐயம் புண்ணியம் என்பதும் உண்மைஅதை உத்தமர் காந்தியின் மெய்த்தவ வாழ்வினில் உண்டு…

Image

காந்தியை பூனா பார்ப்பனர்கள் கொன்றே விடுவார்கள் – 1931 ல் பெரியார்

மராட்டா பார்ப்பனர் பூனாவில் உள்ள பார்ப்பனர்கள் உயர்திரு திலகரைப் போலவே படு வருணாஸ்ரம தர்மிகள் என்பதும் அவர்கள் பெரிதும் திரு திலகர் கொள்கைகளைப் பின்பற்றுகின்றவர்கள் என்பதும் யாவரும் அறிந்ததேயாகும். உயர்திரு காந்திக்கும், பூனா பார்ப்பனர்களுக்கும் ஒரே ஒரு விஷயத்தில்தான் முக்கியமான அபிப்பிராயபேதம் உண்டு. அது என்னவென்றால் திரு காந்தி தீண்டாமை ஒழிக்கப்படவேண்டும் என்று (வாயில் மாத்திரம்) பேசி வருவதைப் பற்றியதாகும்.அவர் காரியத்தில் ஆரம்பித்தால் திரு காந்தியை பூனா பார்ப்பனர்கள் கொன்றே விடுவார்கள். அப்படிப்பட்ட மராட்டா பார்ப்பனர்கள் இன்று…

இரத்த வெறிபிடித்த ஆர்.எஸ்.எஸ்

நெருக்கடி நிலையின்போது இந்திரா காந்தி செய்‌tத உருப்படியான காரியம்‌ ஏதாவது ஒன்று உண்டென்றால்‌, அது ஆர்‌.எஸ்‌.எஸ்‌., ஆனந்தமார்க்‌கம்‌ போன்ற மதவெறிபிடித்த இடங்கங்களுக்குத் தடை விதித்‌ததுதான்‌! உலகம்‌ போற்றி உத்தமர்‌ காந்தியின்‌ உயிர்போக்கிய கோட்சேயை வளர்த்து ஆளாக்கி விட்ட இந்த ஆர்‌.எஸ்‌. எஸ்‌. மீண்டும்‌ அலிகாரில்‌ தன்‌ கைவரிசையைக்‌ காட்டியுள்ளது. அதன்‌ விளைவாக முப்பது பேர்‌ கொல்‌லப்பட்டிருக்கிறார்கள்‌. நூற்‌றுக்‌ கணக்கானோர்‌ படுகாயமடைந்திருக்கிறார்கள்‌. ஐந்து இலட்ச ரூபாய்க்கு மேற்பட்ட பொருட்கள்‌ நாசமாக்கப்பட்‌டுள்ளன. செப்டம்பர் 12 ஆம் தேதி “புரா” என்றழைக்கப்பட்ட…

Image

விம்மலும் விலகலும் – மு.கருணாநிதி

இதயத்தில் ஈட்டி எறிந்தது போல பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் செய்துள்ள முடிவுகள் என்னைத் தாக்கின. இயகத் தோழர்கட்குத்தான் எத்தனை அவமானம்! எத்தனை அபாண்டம் அவர்கள் மேல் சுமத்தப்படுவது ? நெஞ்சு பொறுக்கவில்லையே ! ….. கடமையுணர்ச்சி காரணமாய் அனைவரும் செய்திடும் முடிவே என்னையும் இழுக்கிறது. பெரியார் நம் வேண்டுகோளுக்கு மதிப்புத்தராவிடில் அவர்தம் தலைமையை ஏற்காது, அவர் கீழிருந்து பணியாற்றும் பொறுப்பிலிருந்து விலகிக்கொள்கிறேன். விம்மலுடன் ! .. வேதனையுடன் !… வெற்றி நம் பக்கம் என்ற உறுதியுடன் !…

Image

பெரியாரும் நாமும் இனி ஒன்றுபடமுடியாது

புரட்சிக் கவிஞர் கருத்துரை பெரியாரின் நோக்கம் மணியை மணப்பது. சொத்துக்கு அந்தப்பேர்வழியை வாரிசாக்குவது மட்டுமல்ல, தமக்குப் பின் திராவிடர் கழகம் என்பதொன்று இருத்தல் கூடாது. அதன் சொத்து யாவும் தாம் விரும்பும் இடத்திற் சேர்ந்துவிட வேண்டும் என்பவையும்தான் அவர் நோக்கம். இதைத் தற்காலிகமாக மறைக்க பல் சொல்வேலை நடத்துவார். நம்புதல் தீமை பயக்கும். பெரியார் இந்த எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ள முதலில் நம்மை அச்சுறுத்த எண்ணுகிறார். அதற்குத்தான் காங்கிரஸில் உள்ள பிரபல பார்ப்பனர்களைக் கண்டு பேசுவதும் அவர்கள்…