அண்மைய எழுத்து

Image
December 31, 2025

ஆவிக்கு ஒரு ரோஜா (பகுதி 1) : ஏ.வி.மணிகண்டன்

நாம் நடந்து கொண்டிருக்கும் நிலம் பண்பாடு எனில் காலடிக்கு கீழிருக்கும் நிலத்தின் ஆழத்து கொதிநிலை லாவாவைப் போன்றது பண்பாட்டால் அழுத்தி கீழிருத்தி வைக்கப்பட்டிருக்கும் அகவெளி. குகைகள் அதற்குச் செல்லும் வழிகள். அத்தகைய குகை ஆழங்களின் ஓவியங்களே கோத்திக் என்பது.
Image
December 31, 2025

அகழ் அறிவிப்பு : இரண்டு தொடர்கள்

அகழ் இணையதளத்தில் புத்தாண்டு முதல் புகைப்படக் கலைஞர் ஏ.வி.மணிகண்டனின் புதிய, நான்கு பகுதி குறுந்தொடர் வெளியாகிறது. "ஆவிக்கு ஒரு ரோஜா" என்பது தலைப்பு. வாரம் ஒரு கட்டுரையாக நான்கு பகுதிகள்.
Image
December 27, 2025

மலை என, மாரி என – வாயில்

சங்கக் கவித்திரட்டில் அதிக எண்ணிக்கையிலான பாடல்களைப் பாடியவர் கபிலரே. அளவு அதிகம் என்பதல்ல, அழகும் அதிகம் என்பதே அவர் சிறப்பு.
Image
December 25, 2025

கவிதை, மெய்ஞானம், காதல், அற்புதங்கள்

எனக்கு 21 வயதில் திருநெல்வேலியில் பாதி இடிபாடுகளோடு இருந்த சிந்துபூந்துறை பழைய கம்யூனிஸ்ட் கட்சிக் கட்டடத்தில் நடந்த நூல் அறிமுகக் கூட்டத்தில் கோணங்கியுடன் சேர்ந்து எஸ். ராமகிருஷ்ணன் அறிமுகமானார். தாவரங்களின் உரையாடல் சிறுகதைத் தொகுப்பை காலை வெளியிட்டு மிகவும் தீவிரமான உரையாடல்
Image
December 22, 2025

அமரசிறி : கருணாகரன்

01 உளநல மருத்துவர் மேகதாஸ் ஒரு புதன்கிழமை என்னை அழைத்திருந்தார். அவரிடம் சென்றபோது இளைய மருத்துவ அணியினருக்கு உளநிலை விரிவுரை நடந்து கொண்டிருந்தது. அது முடியட்டும் என்று அங்கேயிருந்த புத்தக அடுக்கிலிருந்து புத்தகங்களை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். மாணவர்களில் சிலர் பாடங்களைக்
Image
December 18, 2025

தையலும் இல்லாள்; மையலும் இல்லாள்

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தூங்கிக் கொண்டிருப்பவர்களை எழுப்பி விரட்டிக் கொண்டிருக்கும் போலீஸ் மெல்ல அந்த நீல குர்தா பெண்ணை நெருங்கினாள். அந்தப் பெண்ணின் முகத்தில் பல நாட்களின் களைப்பு தேங்கியிருக்கிறது. இருந்தாலும் அவளை எழுப்பித்தான் ஆகவேண்டும். அவளது கசங்காத உடையைப் பார்க்கும்போது
Image
December 15, 2025

கனலும் நீலமும்: தீக்குடுக்கை நாவல் – ஒரு வாசிப்பனுபவம்

நாவலின் தலைப்பான “தீக்குடுக்கை”, இரண்டு தளங்களில் இயங்குகிறது. நாவலின் முதல் அத்தியாயத்தில், வானிலிருந்து வீசப்படும் குண்டுகளைத் தளபதி தீக்குடுக்கை என்று அழைக்கிறார். அழிவின் வடிவமாக அது அறிமுகமாகிறது. ஆனால் நாவலின் முடிவில் அதன் பொருள், நெருப்பை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு
Image
December 13, 2025

சிலுவை இறக்கம்: துயரொழி காவியம்

பிரமாண்டமாகவே விரிந்திருக்கும் இயற்கையின் வினோதங்கள் எல்லையற்றவை. சொல்லி மாளாத அழகுடையவை. பார்த்துத் தீராத அழகொளிர் காட்சி அது. அப்படியான அழகிய – வசீகர இயற்கையின் பின்னணியில் அல்லது அவ்வாறான பேரெழில் இயற்கைக்குள், நாம் பார்த்துக் கொண்டிருக்கப் பகிரங்கமாகவே நிகழ்கின்றது இலங்கையில், மலையக
Image
December 10, 2025

நாய் : செசார் அய்ரா

பேருந்தின் ஜன்னலோரம் அமர்ந்தபடி, வெளியே பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென அருகே ஒரு நாய் சத்தமாகக் குரைக்கத் தொடங்கியது. அது எங்கே இருக்கிறது எனப் பார்க்க முயன்றேன். சில பயணிகளும் அவ்வாறே பார்த்தனர். பேருந்தில் கூட்டம் வழியவில்லை: எல்லா இருக்கைகளும் நிரம்பி இருந்ததால்,
Image
December 7, 2025

ஆனந்த் குமார் கவிதைகள்

ஒரு சந்தேகம் அம்மா அகத்தேஉறங்குகிறாள் குழந்தை வெளியேவிளையாடுகிறான் கதவை சரியாக தாழிடாமல்இவளோசோபாவிலேயே கண்ணயர்ந்துவிட்டாள் சரியான நேரம் பார்த்துவீட்டிற்குள் புகுந்துவிட்டதுஅந்த காற்று யாரும் கவனிக்கவில்லை எனினும்கத்தையிலிருந்து வெளி நீண்டிருந்தஒற்றைக்காகிதம் மட்டும்பார்த்து விட்டது கொஞ்ச நேரம் பதட்டமாகிஎல்லோரையும் அழைத்ததுபின் அதுவும்அமைதியாகிவிட்டது எதுவும் தொலையவில்லையாரும் வந்துபோனதடையமுமில்லைவிழித்துப்
Image
December 7, 2025

ந.பெரியசாமி கவிதைகள்

பெருந்தன்மை இன்று ஏனோகுனிந்தவள் மறந்தாள்நெஞ்சில் கை வைக்ககண்களில் அமுதூறும் அழகைகாண நினைத்திருப்பாள். OOO அபிப்ராயம் மழைக்குப் பின்முளைவிட்ட காளான்இகழ்ச்சியாகத்தான் சொல்கிறீர்கள்அதனாலென்னஅவைகள் தனித்துவமிக்கவைஉங்களின் அறியாமைக்காகபரிதாபம் கொள்கிறேன். OOO உள் மாற்றம் தட்டானாகிறேன்நினைத்த கணத்தில்பறந்திடுவதில்லை. உடல் சிறுத்துஇறக்கைகள் முளைத்துபறப்பதற்குகற்றுக்கொள்ளதேவைப்படுவதுகாலம் மட்டும்தானா? OOO அழிவு ஊரில்
Image
December 4, 2025

இடத்திலிருந்து இருப்புக்கு

மனித அனுபவம் என்பது சிந்தித்து,பிரதிபலித்து உருவாவதில்லை. மாறாக அது சிந்தனைக்கு முந்தைய உணர்வுச் செயல்பாடு. ஓர் அடிப்படை ஒழுங்கமைவு. மனித உடல் புறவுலகத்துடன் கொண்டிருக்கும் புலனியக்கம் சார்ந்த பற்றுதலே நம் அடிப்படை அனுபவத்தை நிர்ணயிக்கிறது. உலகுடனான நம் உறவு சிந்தனையை மட்டும்
Image
December 3, 2025

நர்மதாவின் சிரிப்பு – 2 : சுரேஷ்குமார இந்திரஜித்

திருநெல்வேலியில் உள்ள பிள்ளையார் கோயில் மூன்றாவது தெருவில் உள்ள நர்மதாவின் வீட்டைச் சம்பத் கண்டுபிடித்துவிட்டார். தெரு அகலமாக இருந்தது. வீட்டிற்குச் சற்றுத் தள்ளிக் காரை நிறுத்தினார். காரிலிருந்து இறங்கினார். வீட்டின் முன் நின்றார். தன்னை எதிர்பார்த்திராத அவள் எப்படி உணர்வாள் என்பதைச்
Image
November 29, 2025

அசையாத விண்மீனுக்கும் அப்பால் ரைனெர் மரியா ரில்க்க எனும் கலைஞன்

St. Romanus மலைக்கோட்டை தேவாலயம். பனிபடர்ந்த மலையுச்சிகள். மலைச்சரிவில் சிறிய கல்வீடுகள். 16 ஆம் நூற்றாண்டுத் தேவாலயத்தின் கல்லறை முன், ஒரு கொத்து செம்பட்டு ரோஜாமலர்களுடன் நான். காற்றெங்கும் இலைகள் உதிர்ந்தவண்ணம் இருக்கின்றன. உதிர்வின் மென்மையை நான் மனதுள் வரைந்து வரைந்து
Image
November 27, 2025

கலையின் கதை- சியாம்

‘நான் மனிதன்’ என்ற மறுமலர்ச்சி காலகட்டத்து அகங்காரமும் பேரியற்கையை கண்டு வியக்கும் கற்பனாவாத உன்னதமும் சென்ற நூற்றாண்டில் நமது கைவசம் இல்லை. எதனுடனும் நமது இருப்பை முடிச்சிட இயலாதபோதுதான் நாம் கலையிலும் சிக்கலான அறிதல்களை கைவிடுகிறோம். நவீனக் கலையை ஒருவிதத்தில் கேள்விகள்

திரட்டு

சேகரம்

Go toTop

Stay informed with curated content and the latest headlines, all delivered straight to your inbox. Subscribe now to stay ahead and never miss a beat!

Skip to content ↓