
1. ரொமான்ஸ் லுக்குனு சொல்லி காதல் காட்சிகள்ல கேவலமா ஒரு பார்வை பாப்பிங்களே அது புடிக்காது..
2. பன்ச் டயலாக் பேசறன்னு 'வாழ்க்கை ஒரு வட்டம், சதுரம், முக்கோணம்' அப்படின்னு எல்லாம் உளர்றது சுத்தமா புடிக்காது..
3. காமெடி பண்றேன்னு 'வாங்க்னா, போங்கனா' அப்படின்னு வாயை கோணலா வச்சுட்டு பேசுவீங்களே... அது கேவலமா இருக்குது..
4. பாடல் காட்சிகள்ல உங்க லிப் மூமெண்ட் ரொம்ப கேவலம்.. பாட்டுக்கு சிங்க் ஆகாம வாயசைப்பது....... முடியல..
5. நெஞ்சினிலே, சுக்ரன் படங்கள்ல அட்வைஸ் மழை பொழியுமே, தாங்க முடியல சாமி.. அந்த படத்துக்கு அப்புறம் எங்க ஊர் தியேட்டர் ஆபரேட்டர் ஒருத்தர் கோமாவில் கிடக்கிறார் தெரியுமா..
6. போக்கிரி படத்துல கூர்க்காவா வந்து 'காக்கி சட்டை' படத்தோட கதையை காமெடி பண்ணுனீங்களே அது ரொம்ப கொடுமை..
7. டேன்ஸ் ஆடறேன்னு கோட்டர் அடுச்ச குரங்கு மாதிரி குதிப்பிங்களே அது அத விட கொடுமை.. நீங்க ஆடறது டேன்ஸ் னா அந்த காலத்துல கமல் ஆடுனாரே அது பேரு என்னங்க..
8. எல்லா பங்க்சனுக்கும் எருமை சாணிய மூஞ்சில அப்புன மாதிரியே வருவீங்களே.. அது பாக்க சகிக்கலை..
9. பிரஸ் மீட்ல 'சைலென்ஸ்' ன்னு கத்துனீங்களே அத பார்த்து எங்க ஊர்ல பல பேருக்கு காய்ச்சல் வந்துடுச்சு..
10. காசு கொடுத்து டாக்டர் பட்டம் வாங்கிட்டு அதை பெருமையா வேற போட்டுடீங்களே அது சுத்தமா புடிக்கலை..
11. வில்லு படத்துல பாரதியார் கெட்டப்புல வந்தீங்களே.. நல்ல வேளை பாரதியார் சின்ன வயசுல இறந்துட்டார்..
இப்படி உங்க கிட்ட பிடிக்காதது இன்னும் நிறைய இருக்கு...
டிஸ்கி 1: இது யாரோட பதிவுக்கும் எதிர் பதிவோ, நேர் பதிவோ, சைடு பதிவோ இல்லை..
டிஸ்கி 2: இதை எழுத திருப்பூர் அரசாங்க கடை எண் 2000 க்கு பக்கத்தில் இருக்கும் எந்த பதிவரும் தூண்டவில்லை..
தூண்டவில்லை..
விஜயிடம் ஆண் ரசிகர்களுக்கு பிடிக்காத 11 விஷயங்கள்..(அன்பு)
கொஞ்சம் சிரிப்பு! கொஞ்சம் தத்துவம்! கவிதை!(பார்ட்-7)
நகைச்சுவை:-
காலேஜ் பகவத் கீதை:-
எதை நீ படித்தாய் மறப்பதற்கு;
எதை நீ கவனித்தாய் அது புரியாமல் இருப்பதற்கு;
என்று நீ காலேஜ் ஒழுங்காக வந்தாய்
அட்டண்டென்ஸ் சார்ட்டேஜ் அடிக்காமல் இருப்பதற்கு;
எந்த பிகர் இன்று உன்னுடையதோ
அது நாளை மற்றொருவராகிறது
மற்றொரு நாள் அது வேறொருவராகிவிடும்...
******************************************************************************************************
அசின் அங்கு வந்தாளா?
வரலையா?
ஒன்னுமில்லை
சாம்பார்ல ஏன்டி உப்பு போடலை கேட்டேன்.
உடனே கோவிச்சிட்டிக்கிட்டு "அண்ணன்" வீட்டுக்கு போரேன் கிளம்பிட்டா.
வந்தா அனுப்பிவிடுங்க................
******************************************************************************************************
நோயாளி:காதில ஏதோ ரயில் ஓடுற மாதிரி சத்தம் கேட்குது டாக்டர்..
டாக்டர்: செக் பண்ணினேன் அது எல்லாம் ஒன்னும் இல்லையே..
நோயாளி:ஒரு வேளை ஏதாவது ஸ்டேஷன்ல நின்றிருக்குமோ?
டாக்டர்:???
******************************************************************************************************
ஒரு பொண்ணு வாந்தி எடுத்தால் யாரு அந்த 'பரதேசி நாய்' என்று கேட்பார்கள்
ஒரு பையன் வாந்தி எடுத்தால் 'பரதேசி கொஞ்சாமாத்தான் குடிக்கிறது'
யாரு வாந்தி எடுத்தாலும் திட்டு வாங்குவது பையன்கள் தான்
******************************************************************************************************
சர்தார் புதுசா ஒரு வண்ணத் தொலைக்காட்சி வாங்கினார்.
வீட்டிற்கு வந்தவுடனே அதை தண்ணிரில் போட்டார்..
ஏன் தெரியுமா..?
வண்ணம் போகுமா என்று பார்க்கத்தான்..
******************************************************************************************************
கவிதை:-
அழகுதான்
அவள் போட்ட கோலத்தை விட
அதை சுற்றி உள்ள அவளின் பாத சுவடுகள்..
******************************************************************************************************
நான் உன்னை பார்க்க வருகிறேன்
ஆனால் ஏனோ.,
நான் போகும் வரை இமைகளை நீ திறப்பதே இல்லை,
வருத்தத்துடன் 'நிலா'
******************************************************************************************************
நான் விரும்பிய அனைத்தும்
தொலைவில் தான் உள்ளது
அன்று நிலவு
இன்று நீ
******************************************************************************************************
நிலவையும் விண்ணையும் பிரிப்பது
அமாவாசை
என்னையும் அவளையும் பிரிப்பது
அவள் அம்மா ஆசை
******************************************************************************************************
ஒரு துளி ரத்தம் கூட சிந்தவில்லை
ஆனாலும் வலிக்கின்றது
மனதுக்கு பிடித்தவர்களின்
மௌனம்..
******************************************************************************************************
என்னை மறந்து நீ உன் வீட்டில் ஹாயாக...
உன்னை நினைத்து நான் ரோட்டில் நாயாக...
******************************************************************************************************
அவள் முத்தமிட்ட கன்னத்தில்
யாரும் முத்தமிட கூடாது என்று
என்று எனக்கு நானே அமைத்து கொண்ட
முள்வேலி 'தாடி'
******************************************************************************************************
தத்துவம்:
ஒருவரை கூட காதலிக்காத பெண் இருக்கலாம்
ஒருவரை மட்டும் காதலித்த பெண் இருக்க முடியாது..
******************************************************************************************************
விடியும் வரை தெரியவில்லை கண்டது கனவு என்று.
வாழ்க்கையும் அதே மாதிரி தான்
முடியும் வரை தெரிவதில்லை வாழ்வது எப்படி என்று.,,
******************************************************************************************************
1988-ல் தெண்டுல்கர் பத்தாம் வகுப்பில் தேக்கம் அடைந்தார்...
இன்று பத்தாம் வகுப்பு முதல் பாடமே 'தெண்டுல்கர்'
தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள்..
******************************************************************************************************
முள் இருக்கும் பயத்தில் சென்றால் கால்கள் தான் புண்ணாகும்
பெண் இருக்கும் பயத்தில் சென்றால் வாழ்க்கையே பஞ்சராகி விடும்..
******************************************************************************************************
என்னதான் நாம வேலை வெட்டியில்லாம இருந்தாலும்
நமக்கு நாமே போன் பண்ணும் போது பிஸியா தான் இருப்போம்
******************************************************************************************************
கொஞ்சம் சிரிப்பு! கொஞ்சம் தத்துவம்! கவிதை!(பார்ட்-6)
நகைச்சுவை:-
ஒருவர்:எனக்கு காதலிக்கவே பயமாக இருக்கு,
மற்றொருவர்: ஏன்?
ஒருவர்:கீதையில சொல்லியிருக்கே'எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது'அதான்..
***********************************************************************************************************************
என் மனைவி அருவி மாதிரி
ஏன்டா?
அவ!எந்த நேரமும் கொட்டிக்கிட்டே(சாப்பிட்டிக்கிட்டே) இருப்பா..
****************************************************************************************
என் கணவரை சந்தோஷப்படுத்துறதுதான் என் நோக்கமே!
நிஜமாக சொல்ற?
பின்னே..இன்னிக்கு காலையில கூட
சாம்பார் ரொம்ப அருமையாக இருக்கு..என்று
சொல்லி அவரை சந்தோஷப்படுத்தினே..
****************************************************************************************
ஜலதோஷம் தாங்க முடியலை டாக்டர்
அதுக்கு எதுக்கு ஆபரேஷன் தியேட்டருக்கு வந்தீங்க?
ஆவி பிடிக்கலாமேன்னு தான்
****************************************************************************************
டாக்டர்:மீன் முட்டை சாப்பிடுவதை நீங்க உடனே நிறுத்திடனும்..
நோயாளி:மீன் முட்டையை நான் கண்ணால் கூட பார்த்ததில்லை டாக்டர்..
டாக்டர்:????
****************************************************************************************
டாக்டர்:நான் கொடுத்த தூக்க மாத்திரை நன்றாக வேலை செய்யுதா?
நோயாளி:தெரியலை டாக்டர்! மாத்திரை சாப்பிட்ட உடனே நான் நல்லா தூங்கிட்டேன்..
****************************************************************************************
ஒருவர்:என்னப்பா..உன் மகன் சிகரெட் அடிக்கிறானே..அவனை தட்டி கேட்க மாட்டியா..
மற்றொருவர்:கேட்டேன்..தர மாட்டேங்கிறான்..
****************************************************************************************
மனைவி:ஒரு மணி நேரமா எதையோ தேடிக்கிட்டு இருக்கிங்களே..பேசாம கண்ணாடி போட்டு தேட வேண்டியதுதானா..
கணவர்: அதைத்தான் தேடிக்கிட்டு இருக்கேன்..
****************************************************************************************
மகன்:அப்பா..நானும் அம்மாவும் கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடுகிறோம்.நான் எங்கு ஒளிந்து கொள்ள.
அப்பா:சமையலறையில் ஒளிஞ்சுக்க...உங்க அம்மா அங்க வரமாட்டா..
****************************************************************************************
அப்பா:உன் வயசுல அப்துல் கலாம் ரொம்ப படிச்சாரு தெரியுமா?
மகன்:அவர் உஙக் வயசில ஜனாதிபதியாக இருக்கார்..நீங்களும் இருக்கீங்களே..
****************************************************************************************
மனைவி:எதிர்வீட்டுக்காரன் மனைவி எங்கேயோ ஓடிப்போயிட்டாலாம்..
கணவன்:அவன் நல்ல மனசுக்கு எல்லாமே நல்லபடியாக நடக்கும்..
மனைவி:...???
***************************************************************************************
கவிதை:-
'மலடி'
என்று பட்டம் சூட்டி
அழைத்தார்கள் அவளை
வாசலில் வந்து அழைத்தான்
பிச்சைக்காரன்
'அம்மா' என்று
**************************************************************************************
ஒரு நாள் கொல்லும்
'மரணம்'
ஒவ்வொரு நாளும் கொல்லும்
'மவுனம்'
*******************************************************************************************
உன்னை என் இதயம் என்று சொல்ல மாட்டேன்
ஏனென்றால் உன்னை துடிக்க விட்டு
நான் உயிர் வாழ பிடிக்கவில்லை..
****************************************************************************************
தத்துவம்:-
1.என்னதான் கூகுள் மிகப்பெரிய தேடுதல் தளமாக இருந்தாலும் கோவிலில் காணாமல் போன செருப்பை கண்டுபிடித்து தருமா?
2.தூக்க மாத்திரை போட்டா தூக்கம் வரும்.ஆனால் தலைவலி மாத்திரை போட்டா தலைவலி வருமா?
3.நாமாளா எடுத்தா அது மொட்டை அதுவா விழுந்தா அது சொட்டை..
4.என்னதான் பேச்சாளராக இருந்தாலும் கோமா 'ஸ்டேஜ்'ல அவரால பேச முடியுமா?..
5.போலிஸ் ஸ்டேஷனுக்கு போன் பண்ணினா போலிஸ் வரும்.ரயில்வே ஸ்டேஷனுக்கு போன் பண்ணினா ரயில் வருமா?
6.பஸ் மீது நாம ஏறீனாலும் பஸ் நம்ம மீது ஏறீனாலும் டிக்கெட் வாங்கறது நாமதான்...
7.படித்த பெண்ணை வேலைக்கு சேர்க்க கூடாது.பெருக்க சொன்னா கால்குலேட்டரை தூக்கிட்டு வருது.
8.குற்றாலத்தில் எந்த நியூஸ் சொன்னாலும் நம்ப மாட்டாங்க..ஏன் தெரியுமா?அது எல்லாமே 'பால்ஸ் நியூஸ்'
9.தண்ணீரை 'தண்ணி' சொல்லுவோம்.பன்னீரை 'பன்னி'னு சொல்லலாமா?..
10.எல்லாரும் சிரிக்கும் போது ஒருவன் சிந்தித்தால் அவன் காதலிப்பவன்
எல்லாரும் சிந்திக்கும் போது ஒருவன் சிரித்தால் அவன் காதலித்தவன்
விஜய்யின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்த சில யோசனைகள்.

விஜய்யின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்த சில யோசனைகள்.
யோசனை1: திருச்சி பிரஸ்மீட்டிங்கில் நான் கலந்துகொள்ளவே இல்லை. என்னைப் போலவே தோற்றம் கொண்ட ஒரு நபரை வைத்து குறிப்பிட்ட சிலர் செய்த சதி இது.அதேபோல் வில்லு என்ற திரைப்படத்தில் நான் நடிக்கவே இல்லை,அதுவும் போலிதான் என அறிக்கை ஒன்றைவிட்டால் ரசிகர்கள் உங்களை நம்பி விடுவார்கள்.
யோசனை2: இனிமேல் ரிலீஸாகும் உங்கள் படங்களுக்கு கதை என்று ஒன்று இருந்தால் அதை ஒரு பிட் நோட்டீஸில் பிரிண்டு செய்து தியேட்டர் வாசலில் படம் பார்க்க வருபவர்களுக்கு விநியோகிக்கலாம்.
யோசனை3: இனிமேல் ரீலீசாகும் உங்களின் படங்கள் ஓடும் திரையரங்களில் படம் முடிந்தவுடன், இந்த படத்தின் கதையைச் கண்டுபிடிப்பவருக்கு ஒரு “காண்டாசா கார்” பரிசு என போட்டி வைக்கலாம். கவலையே வேண்டாம் அதை மட்டும் யாராலும் கண்டுபிடிக்க இயலாது
யோசனை4: டிக்கெட் கவுண்டரில் டிக்கெட் கொடுக்கும் போது கூடவே ஒரு சாரிடான் மாத்திரை,ஒரு பிரஸர் மாத்திரை மற்றும் ஒரு வாட்டர் பாக்கெட் சேர்த்து ஒரு பையில் போட்டு, 3டி படங்களுக்கு டிக்கெட்டுடன் கண்ணாடி கொடுப்பது போல கொடுக்கலாம்.
யோசனை5: திரையரங்கில் ஒவ்வொரு வகுப்புகளுக்கும் தனித்தனியே கைடுகளை(Guide) நியமித்து ஒவ்வொரு சீன் முடிந்த பின்னும் அதில் என்ன வந்தது என்பதை படம் பார்ப்பவர்களுக்கு விளக்கிச் சொல்லலாம்.
யோசனை6: திரையரங்க வாயிலில் ஆம்புலன்சுடன் கூடிய மருத்துவக்குழுவை தயார் நிலையில் வைத்து படம் பார்த்துவிட்டு வெளியே வரும் முதியவர்கள்,இதயபலகீனமுள்ளவர்கள் ஆகியவர்களுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சையளிக்கலாம். இப்படி செய்தால் அவ்ர்கள் இனி உங்கள் படத்திற்கு நம்பி வருவார்கள்.
யோசனை7: உங்கள் படங்களில் தற்போது காமெடி மிகக்குறைந்து, நீங்கள் சீரியஸாக பேசும் வசனங்கள் மற்றும் பஞ்ச் டைலாக்குகளுக்கு மக்கள் சிரிக்க ஆரம்பித்து விடுகின்றனர்.அதனால் நல்ல காமெடி சீன் வைப்பது சிறந்தது.
யோசனை8: குறிப்பாக நீங்கள் டாக்டர் பட்டம் வாங்கியதை காமெடி சீனாக படத்திலே வைத்தால் அதைப் பார்ப்பவர்கள் விழுந்து,விழுந்து சிரிப்பார்கள். அதுமட்டுமின்றி சிறந்த காமெடிக்கான பிலிம்பேர் அவார்ட்டையும் அந்த சீனுக்கு வாங்கிவிடலாம்
யோசனை9: டைட்டில் போடும் போது அதில் வரும் இளைய தளபதியை சிலர் தவறாக "இளைய தலைவலி" என படித்துவிடுகிறார்கள்.எனவே வேறு பட்டத்திற்கு முயற்சி செய்யலாம்.மசாலா புயல் பேரரசுவிடம் கன்சல்ட் செய்தால் அவர் நிச்சயம் ஐடியா கொடுப்பார்.
யோசனை10: குருவி,வில்லு போன்ற பேரடிகளை மறக்க கொஞ்ச நாளைக்கு வடிவேலு குரூப்பில் சேர்ந்து சிங்கமுத்து,முத்துக்காளை ஆகியோரைப் போல காமெடி வேடங்களில் நடிக்கலாம்.காமெடிக்காக நீங்கள் முயற்சி பண்ண வேண்டாம். நீங்கள் சாதாரணமாக நடித்தாலே மக்கள் சிரிப்பார்கள்.
யோசனை 11: உங்களைக் காமெடி செய்து வீடியோ வெளியிடும் அஜீத் ரசிகர்களுக்கு பதிலடியாக நீங்கள் உடனே ஒரு சாஃப்ட்வேர் குழுவை அமைத்து பதிலுக்கு பதில் வீடியோ விடலாம். கவனமாக இருக்கவும் அந்தக் குழுவில் அஜீத் ரசிகர்கள் இருந்தால் உங்களைத் தாளித்துவிடுவார்கள்
பின்குறிப்பு: இனிமேல் எந்த மாதிரி படங்களை ரீமேக் செய்யலாம்:
மகேஷ்பாபு போன்றவர்களின் தெலுங்கு படங்களை ரீமேக் செய்தால் இனி போனியாகாது.
* மலையாளத்தில் வெற்றி கண்ட ஷகிலா படங்களை ரீமேக் செய்து நடிக்கலாம்
* எம்ஜியார் நடித்த “ரிக் ஷாக்காரன்” படத்தை "திரிஷாக்காரன்" என்ற பெயரில் ரீமேக்
செய்யலாம். மெரினா பீச்சில் திரிஷாவோடு "கடலோரம் வாங்குனேன் காப்பு, வில்லுக்கு
வச்சிட்டாய்ங்கே ஆப்பு" என அருமையான டூயட் போட்டு அசத்திவிடலாம்
* பழைய ராமராஜன் படங்களை ரீமேக் செய்து "எங்க ஊரு எருமக்காரன்" என்ற பெயரில்
நடிக்கலாம்.
அறிவிப்பு: அன்பு நெஞ்சங்களே! இது வெறும் காமெடிக்கான பதிவுதானன்றி யார் மீதும் காண்டு காட்டும் பதிவு அல்ல.தயவு செய்து இதை வெறும் காமெடியாக மட்டுமே எடுத்துக்கொண்டு சிரித்துவிட்டு விட்டுவிடவும்..இவை அனைத்தும் என்னுடைய இ-மெயிலில் வந்தவையே...
கொஞ்சம் சிரிப்பு! கொஞ்சம் தத்துவம்! கவிதை!(பார்ட்-5)
நகைச்சுவை:-
புத்தகத்தில் படிச்சும் புரியவில்லை;
தொலைக்காட்சியில் பார்த்தும் நம்பவில்லை;
ஆசிரியர் சொல்லியும் நம்பவில்லை;
ஆனால் உன்னைப் பார்த்தபின்பு தான் புரிந்து கொண்டேன்,
வால் இல்லாமலும் குரங்கு இருக்கும் என்று...
************************************************************************
NATPU எனக்கு ரொம்ப பிடிக்கும்'
ஏனென்றால்:-
N-நமீதா
A-அசின்
T-திரிஷா
P-பூஜா
u-ஊர்மிளா
****************************************************************************
மரணம் கூட சுகம் தான்
எப்போது தெரியுமா?
நமீதாவின் மடியில் உயிர் பிரியும் போது!!!
(BY NDF- Namitha Development Force)
JAi Namith
******************************************************************************
வாரணம் ஆயிரம் டையலாக்:-
படத்தின் பெயர்: காரணம் ஆயிரம்
ஹாய் சார்,ஐ யாம் கிருஷ்ணன்,இதை நான் சொல்லியே ஆகணும்,
கொஷ்டின் பேப்பர் அவ்ளோ கஷ்டம்,இங்க எவனும் இவ்ளோ கஷ்டமா ஒரு பேப்பரா பார்த்திருக்க மாட்டாங்க..
**************************************************************************************
லேடி 1:-உங்க கூந்தல் இவ்வளவு அழகாக இருக்கே எப்படி?
லேடி 2:-காலையில ஷாம்பூ மாலையில சோப்பு போடுவேன்..
லேடி 1:-அப்ப நைட்டுல?
லேடி 2:-கழட்டி ஆணியில போட்டிருவேன்!!
*********************************************************************************************
தத்துவம்:-
யார் கூட இருந்தா நன்றாக இருப்போம் என நினைப்பது பொண்ணுங்க மனசு,
யார் கூட இருந்தாலும் நன்றாக இருக்கட்டும் என நினைப்பது பஸங்க மனசு,
*****************************************************************************
மண்ணில் மங்கை(பெண்கள்) இருக்கும் வரை
மனிதன் கண்ணில் கங்கை(கண்ணீர்) இருக்கும்..
********************************************************************************
வாழ்க்கையில் பிரச்சனை யாரால் வருகிறது தெரியுமா?
அப்பா?
அம்மா?
நண்பர்கள்?
உறவினர்கள்?
காதலி?
இவங்க யாராலும் கிடையாது..
100% ஈகோ தான் காரணம்..
********************************************************************************************
அழகை எதிர்பார்க்கும் பெண்களிடம் அன்பை காட்டாதே!!
உன்னிடம் அன்பை காட்டும் பெண்களிடம் அழகை எதிர்பார்க்காதே!!
***********************************************************************************************
இனிப்பு இல்லாத காபியை குடிக்க முடியாது
நல்ல பிகர் இல்லாத பள்ளியில் படிக்க முடியாது!!
(பிகர் இல்லாத ஒரே காரணத்தால் நன்றாக படிக்காதோர் சங்கம்)
***********************************************************************************************
கவிதை:-
தாஜ்மஹால் தொலைவில் இருந்து பார்த்தால்
ஒரு 'கோவில்'
அதில் வாழ நினைத்தால் அது
ஒரு 'கல்லறை'
அது போலவே "காதலும்"
*********************************************************************************************
கடவுள் கொடுத்த பரிசு
நண்பர்கள்
பரிசாக வந்த கடவுள்
அம்மா
*************************************************************************************************
இன்று நீ
தலை குனிந்து பார்
நாளை பலர் உன்னை
தலை நிமிர்ந்து பார்க்கச் செய்வேன்
இப்படிக்கு
'புத்தகம்'
*************************************************************************************************
அனுமதி கேட்கவும் இல்லை
அனுமதி வாங்கவும் இல்லை
பிடிவாதமாக ஒரு முத்தம்
கன்னத்தில்
கொசுக்கடி
***************************************************************************************
நீங்கள் ஒரு தமிழனா???? பரிசோதிக்க இங்கே க்ளிக் பண்ணவும்.........
கீழ் உள்ளவைகளின்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்...!
1. எந்தப் பொருள் வாங்கினாலும், ரொம்ப நாளைக்கு அதைச் சுத்தி இருக்கற ஜவ்வுபேப்பரைக் கிழிக்கவே மாட்டீங்க..!
2. உங்க சமையலில் உப்பு, புளி, மிளகாய் சேராமல் எந்த உணவும் இருக்காது..!
3. உங்களுக்கு வந்த அன்பளிப்புப் பொருட்களில், பால்குக்கரும், அஜந்தா
கடிகாரமும் நிச்சயம் இடம் பிடிச்சிருக்கும்..!
பேரு வந்ததை அடுத்தவங்க தலையில் [அன்பளிப்பாதான்]
திட்டம் போட்டுகிட்டு இருப்பாங்க..!
4. வெளிநாட்டுக்குப் போயிட்டு வந்தீங்கன்னா, ஒரு சைஸ்
சூட்கேஸோடதான் ஊருக்குத் திரும்புவீங்க..!
5. எந்த நிகழ்ச்சிக்குப் போனாலும் 1 மணி நேரம் தாமதமாப் போவீங்க.
அதுதான் சரியா இருக்கும்ன்னு மனசார நம்புவீங்க...!
6. மளிகைப் பொருட்களின்பாலிதீன் உறைகளை பத்திரமா வைப்பீங்க..
பின்னாடி உதவும்ங்கற தொலைநோக்குப்பார்வையோடு...!
7. உங்களுக்கு வரும் கடிதங்களில் எல்லா ஸ்டாம்பிலும் சீல் பார்ப்பீங்க.
சீல் விழாம இருந்தா, அந்த கவனமா பிரிச்சு எடுத்து எங்கேயாவது வச்சுட்டு,
அப்புறம் சுத்தமா மறந்துடுவீங்க.
8. சினிமா தியேட்டரோ,விரைவுப் பேருந்தோ..இருபக்க கை வைக்கும்
இடத்துக்கும் சொந்தம் கொண்டாடுவீங்க..!
9. ரெட்டைப் பிள்ளைகள் இருந்தா, ஒரே மாதிரிட்ரெஸ் தச்சுக் கொடுப்பீங்க. ரைமிங்கா பேர் வைப்பீங்க..[ரமேஷ், மகேஷ்.அமிர்தா,சுகிர்தா..]
10. ஏ.சி.திரையரங்குன்னா முட்டை போண்டா எடுத்துட்டுப் போய் நாறடிப்பீங்க..
ஏ.சி.கோச்சுன்னா,கருவாட்டுக் குழம்பை கீழே ஊற்றி கப்படிக்கவைப்பீங்க.!
11. விமானமோ,ரயிலோ, பஸ்ஸோ... ஒரு கும்பல் வந்து
ஏத்திவிடணும்ன்னு எதிர்பார்ப்பீங்க....!
12. புதுசா கார் வாங்கினா,அதுக்கு மணப்பெண்அலங்காரம் பண்ணிதான்
எடுத்துட்டு வருவீங்க.!கொஞ்ச நாளைக்கு சீட்.பேப்பரைக் கிழிக்கவே மாட்டீங்க..
நம்பர் எழுதறீங்களோஇல்லையோ.. கொலைகார முனிதுணைன்னு
ஸ்டிக்கர் ஒட்டமறக்கவே மாட்டீங்க...!
13.. செல் போனோ, டி.வி.ரிமோட்டோ.. லாமினேஷன் செஞ்சாதான்
உங்களுக்கு நிம்மதி..!
14. அடுத்தபிள்ளைகளைப் பாரு..எவ்வளவு சாமர்த்தியமாஇருக்காங்கன்னு.. என்று உங்க பெற்றோர் சொல்லாம இருக்கவேமாட்டாங்க.. அடுத்த
பெற்றோரைப் பாருங்க..எவ்வளவு ஜாலியா செலவழிக்கறாங்கன்னு
நீங்க நெனைப்பீங்க..ஆனா சொல்ல மாட்டீங்க..!
15. உங்க வீட்டு ஃபிரிட்ஜ்ல, சின்னச் சின்னக் கிண்ணங்களில், 3 மாசமா
தயாரிச்ச குழம்பு, கறி வகையறா இருக்கும்..!
16. உங்க சமையலறை அலமாரியில் காப்பித்தூளுக்கு இலவசமா வந்த பெட் ஜாடி
குறைஞ்சது ரெண்டு மூணு இருக்கும்..!
17. அதிகமா உபயோகிக்கப்படாத பொருள் உங்ககிட்ட அவசியம் நாலைஞ்சு
இருக்கும். [உ-ம்.பிரஷர். குக்கர்,காப்பி மேக்கர்,வாக்குவம் கிளீனர்,பிரெட் டோஸ்ட்டர், மைக்ரோ வேவ் அவன்,கேஸ் அடுப்புல க்ரில் இப்படி..]
18.பொங்கல், தீபாவளின்னாவீட்டுல சந்தோஷமா விழுந்து கெடக்க மாட்டீங்க.. தண்ணியைப் போட்டுட்டு,தகராறுபண்ணி,போலீஸ்-ஸ்டேஷன்ல குத்தவச்சுருப்பீங்க..!
19. கல்யாணத்துக்கு ஊர் பூரா பத்திரிகை வச்சு கலெக்ஷன் பார்ப்பீங்க..
20. இந்த விவரம் உங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கும்...
உடனே உங்க நண்பர்களுக்கு அனுப்பணும்ன்னு கை பரபரக்கும்..
கொஞ்சம் சிரிப்பு! கொஞ்சம் தத்துவம்! கவிதை!(பார்ட்-4)

நகைச்சுவை:-
அசின்:-பதிவை படிக்கிற பையன் பாரேன்டி..
சிம்ரன்:- சூப்பரா இருக்கான்டி..
சினேகா:-அவன் என்னை பார்க்கத்தான் வருகிறான்..
நமிதா:-முதல்ல அவன் என் ஆளு தெரிஞ்சுக்கோங்க..
பாவனா:-அவன் என் மாமா பையன் தெரியுமா?..
பறவை முனியம்மா:-அடி சிறுக்கிங்களா,,அவன் என் புருஷன்டீ..
(சும்மா தமாசு..)
*************************************************************************************
ராமு:-டேய்,நாளைக்கு நான் சினிமாவுக்கு போரேன்..வர்ரியா?
சோமு:-முடிஞ்சா வரேன்டா..
ராமு:-முடிஞ்ச பிறகு ஏன்டா வர்ர..படம் ஆரம்பிக்கும் போதே வந்துவிடு..
*************************************************************************************
ஆசிரியர்:-மணல் அரிப்பை தடுக்க என்ன செய்ய வேண்டும்?
மாணவன்:-மணலுக்கு சொரிந்து விட்டு நைசில் பவுடர் போட வேண்டும்..
*************************************************************************************
ஆசிரியர்:-'சூரியன் மேற்கே மறையும்'இது நிகழ்காலமா,எதிர்காலமா,கடந்தகாலமா?
மாணவன்:-அது 'சாயங்காலம்'
ஆசிரியர்:-????
*************************************************************************************
காற்றில் அவள் துப்பட்டா பறந்து வந்து என் மீது விழுந்தது..
எனக்கு பயங்கர சந்தோசம்..
சைக்கிள் துடைக்க துணி கிடைத்து விட்டது என்று..
*************************************************************************************
பசங்க மனசு மொபைல் மாதிரி..
பொண்ணுங்க மனசு தண்ணீர் மாதிரி..
தண்ணீர்ல மொபைல் விழுந்தாலும் மொபைல்ல தண்ணீத் விழ்ந்தாலும் ஆபத்து மொபைலுக்குத்தான்..
*************************************************************************************
காதலன்:-அன்பே..நான் சாப்பிடும் போதெல்லாம் உன் நினைவுதான்!..
காதலி:-அப்படியா?..எனக்கு கை கழுவும் போதெல்லாம் உன் நினைவுதான்.
*************************************************************************************
பிரிந்த காதல் சேரும் போது 'கண்ணீர் மட்டும் பேசும்..
பிரிந்த நட்பு சேரும் போது 'பீர்,சிக்கன் பிரியாணி,குவாட்டர்,கூட பேசும்..
*************************************************************************************
ராமு:-பஸ் ஸ்டாப்ல நின்னு மேலையே பார்த்து கிட்டு இருக்கீங்களே என்ன விஷயம்?
சோமு:-மதுரைக்கு போகின்ற பஸ் மூன்று மணிக்கு மேல வரும் என்று சொன்னார்கள் அதான்..
*************************************************************************************
கவிதை:-
வெளியே வந்த பிறகு உள்ளே செல்ல முடியாது.
''கருவறை''
உள்ளே சென்ற பிறகு வெளியே வர முடியாது.
''கல்லறை''
*************************************************************************************
சத்தம் போடாமல் சாகின்ற உயிர் எது தெரியுமா?
''இதயம்''
நேசித்துப் பாருங்கள் தெரியும்..
*************************************************************************************
நெருப்பு மட்டும் அல்ல;
சிரிப்பும் காயப்படுத்தும்
காதலித்துப்பாருங்கள்..
தெரியும்..
*************************************************************************************
தத்துவம்:-
பசங்களுக்கு பிடிச்சது பொண்ணுங்களை கொஞ்சுவது,
பொண்ணுங்களுக்கு பிடிச்சது பசங்க கெஞ்சுவது:,
************************************************************************************
காதலும் நட்பும் சந்தித்த போது காதல் கேட்டது:
நான் வந்துவிட்டபின் நீ எதற்கு என்று?
நட்பு சொன்னது:-நீ விட்டு சென்ற கண்ணீரை துடைக்க..
*************************************************************************************
கொஞ்சம் சிரிப்பு! கொஞ்சம் தத்துவம்! கவிதை!(பார்ட்-3)

நகைச்சுவை:-
அப்பா:என்னடா பரிட்சை எழுதினாயே பாஸ் பண்ணியா?
மகன்:என்னை மாதிரி பசங்க எல்லாம் எழுதினா பாஸ் ஆகமாட்டாங்க..
எழுத எழுதத்தான் பாஸ் ஆவாங்க..
பிகரோட கடற்கரை மணலில் வீடு கட்டி விளையாடியதின் அருமை
பிகரோட அண்ணன் வீடு கட்டி அடிக்கும் போதுதான் தெரியும்..
காதலி:ஏங்க வீட்டோட மாப்பிள்ளையாக இருப்பீங்களா என்று என் அப்பா கேட்டார்
காதலன்:உங்க அப்பா-விற்காக இல்லாவிட்டாலும் உன் தங்கைச்சிக்காகவது இருக்கேன்டா செல்லம்..
நர்ஸ்:பத்து நிமிஷம் லேட்டா வந்திருந்தா நோயாளியை காப்பாத்திருக்கலாம்
உறவினர்கள்:எப்படி?
நர்ஸ்:டாக்டர் வீட்டுக்கு போயிருப்பாரு!!
மாணவன்:சார்,இங்க பாருங்க என் தலையிலே எறும்பு ஊருது
ஆசிரியர்:அதை ஏன்டா என்கிட்டே சொல்றே?
மாணவன்:நீங்க தான சொன்னீங்க என் தலையிலே எதுவுமே ஏறாது என்று!!
ஆசிரியர்:காந்தி ஜெயந்தி குறிப்பு வரைக:-
மாணவன்:காந்தி ஒரு மிகச்சிறந்த மனிதர்.
ஜெயந்தி ஒரு சூப்பர் பிகர்.
ஒரு நாள் காந்தி ஜெயந்தியிடம் தன் காதலை சொன்னார்.
அந்த நாள் காந்தி ஜெயந்தியாக கொண்டாடப்படிகிறது.
ஆசிரியர்:ஏன்டா என் மேல சைக்கிள்ல மோதின?
மாணவன்:பிரேக் பிடிக்கலை சார்.
ஆசிரியர்:இதோ பிரேக் பிடிக்குதே!
மாணவன்:இல்லைச சார் நான் தான் பிரேக் பிடிக்கலை
அப்பா:என்னம்மா தினமும் மூன்று மணி நேரம் போன்ல பேசுவாய்.
இன்னைக்கு ஒரு மணி நேரத்திலே வைச்சுட்டே.
மகள்:ராங் ரம்பர் அப்பா அதான்!
அவள் என்னை திரும்பி பார்த்தாள்
நானும் அவளை பார்த்தேன்.
அவள் மறுபடியும் பார்த்தாள்
நானும் பார்த்தேன்
இரண்டு பேருக்குமே பரிட்சையிலே பதில் தெரியலை..
டீ.ஆர்.பஞ்ச் வசனங்கள்:
நாம அடிச்சா மொட்டை
அதுவா விழுந்தா அது சொட்டை
யானை மேலே நாம உக்கார்ந்த சவாரி
யானை நம்ம மேலே உக்கார்ந்த ஒப்பாரி
கவிதைகள்:-
கண்ணீர் விட்டுக் கொண்டே இருப்பேன்
நீ அணைக்கும் வரை
இப்படிக்கு
மெழுகுவர்த்தி
இந்த உலகத்தில் பல இதயங்கள் துடித்தாலும்
உனக்காக மட்டுமே துடிக்கும் ஒரே இதயம்
உன் இதயம் மட்டுமே!!
அவள் என்னைப் பார்த்து சிரித்தாள்
கன்னத்தில் குழி விழுந்தது.
நான் அவளைப் பார்த்து சிரித்தேன்.
என் வாழ்க்கையிலேயே குழி விழுந்தது..
காதலுக்கு கண் இல்லை-அன்று
காதலிக்க உண்மையான பெண்ணில்லை இன்று
கொஞ்சம் சிரிப்பு!கொஞ்சம் தத்துவம்!கவிதை! (பார்ட்-2)

நகைச்சுவை:
காதலி:என்கிட்ட உங்களுக்கு ரொம்ப பிடிச்சது எது?
என்னோட அழகான முகமா?
அன்பான மனமா?
பணிவான குணமா?
காதலன்:உன்னோட இந்த காமெடி தான்!!!
முதியவர்:சார் என்னோட அறுபதாம் கல்யாணத்திற்கு போலிஸ் பாதுகாப்பு வேண்டும்..
போலிஸ் அதிகாரி:யாருக்கு நீங்க பயப்படுறீங்க?
முதியவர்:என்னோட 59 பொண்டாட்டிகளுக்கும் தான்!!
கடற்படை தலைவன்:கரை தெரியுது.கரை தெரியுது.
சர்தார்:சர்ப்-எக்ஸெல் போடுங்க.அந்த கரை இந்த கரை எல்லா கரையும் போயிடும்..
கொசு:அம்மா நான் சினிமாக்கு போறேன்.
அம்மா கொசு:வேண்டாம் யார் கையிலயாவது சிக்கி சின்னாபின்னமாகிடப்போற..
கொசு:பயப்படதீங்க அம்மா.நான் அஜித் படத்துக்கு தான் போறேன்.
அம்மா கொசு:அதுக்கு நீ யார் கையில் ஆவது சிக்கி உயிரையே விட்டு
விடலாம்.
தத்துவம்:
வாழ்க்கையில் தோல்வி மட்டும் தொடர்ந்து வந்தால்.....
தோற்றுக் கொண்டிருக்கிறோம் என்று அர்த்தமில்லை......
தோல்வியை தாண்டி சென்று கொண்டிருக்கிறோம்....
(ஏகன் படம் வெளியான பிறகு அஜித் கூறிய தத்துவங்கள்)
(எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு)
இன்னிக்கு இருக்கிற மீன் நாளைக்கு கருவாடாக மாறலாம்...
இன்னிக்கு இருக்கிற மீன் குழம்பு நாளைக்கு கருவாட்டு குழம்பாக மாறமுடியுமா..?
அவளை காண்பதற்கு நான் பட்ட கஷ்டங்கள் கோடி..
அவளை கண்ட பின் நான் பட்ட நஷ்டங்கள் தாடி...
கவிதை:
பலருக்கு விருப்பம் உண்டு
உன்னை அடைய
எனக்கு மட்டுமே உரிமை உண்டு
உன்னை காக்க
'மலரே'
இப்படிக்கு
'முள்'
உங்களுக்கு பிடித்திருந்தாலும் பிடிக்காவிட்டாலும் பின்னூட்டம் இடுங்கள்
கொஞ்சம் சிரிப்பு! கொஞ்சம் தத்துவம்!! கவிதை
நகைச்சுவை
காதலிக்கிட்டேயும் மனைவிகிட்டேயும் எதை மறைக்க வேண்டும்?
காதலிக்கிட்ட மனைவியையும் மனைவிகிட்ட காதலியையும் மறைக்க வேண்டும்!!
அம்மா:என்னடி உன் புருஷன் தினமும் இப்படி குடிச்சுட்டு வராரே நல்லாவா இருக்கு
மகள் :தெரியலை அம்மா நான் இன்னும் டேஸ்ட் பண்ணி பார்க்கலை!!
ராமு:ஹோட்டல்ல சாப்பிட்டு பார்க்கிறேன்.கையில காசு இல்லை
சோமு:அய்யோ!!அப்புறம்
ராமு:அப்புறம் என்ன பாக்கெட்டிலிருந்து எடுத்து கொடுத்தேன்!!
அமெரிக்காவில் திருடனை கண்டுபிடிக்கிற மெஷின் கண்டுபிடித்து இருக்கிறார்களாம்.
அந்த மெஷின் இங்கிலாந்துல 30 நிமிஷத்துல 70 திருடர்களை கண்டுபிடிச்சுருக்கு.
பிரான்ஸில் 30 நிமிஷத்துல 100 திருடர்களை கண்டுபிடிச்சுருக்கு.
இந்தியாவில் 15 நிமிஷத்துல அந்த மெஷினையே காணோம்!!
நாமெல்லாம் யாரு..??
டாக்டர்:உங்க கிட்னி பெயில் ஆயிடுச்சு
சர்தார்:என்ன கொடுமை டாக்டர் இது..?நான் என் கிட்னியை படிக்க வைக்கவே இல்லை!!அது எப்படி பெயில் ஆகும்!!
ஆசிரியர்: உலகத்தை முதலில் சுற்றி வந்தது யாரு?
மாணவன்:விடுங்க டீச்சர்.ஊர் சுத்துற பையல பத்தி நமக்கு என்ன பேச்சு!!
ஆசிரியர்:ஏன் இவ்வளவு லேட்?
மாணவி:ஒரு பையன் என்னை பாலோ பண்ணிக்கிட்டே வந்தான் டீச்சர்
ஆசிரியர்:அதனால என்ன
மாணவி:அவன் ரொம்ப மெதுவாக நடந்து வந்தான் டீச்சர்!
கண்ணு கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் பண்ணி என்ன பயன்?
குருவி செத்த பிறகு வில்லு விட்டு என்ன பயன் ??
மிக உயரமாக தாவக்கூடிய மிருகங்கள்:
பூனை :3.7மீ
நாய் : 4 மீ
கழுதை :6 மீ
குரங்கு :14.9 மீ
விஜய் : வானம் 35000 கி.மீ
வடிவேல் : நான் தான் பெரிய காமெடியன்
விவேக் : இல்லை நான் தான் உன்னை விட பெரிய காமெடியன்
கருணாஸ்: மெதுவாக பேசுடா மச்சான் பக்கத்துல அஜித் இருக்கார்!!
கவிதை
உனக்காக நான் துடிக்கிறேன்
ஆனால் நீ
என்னை தவிர யார் யாரையோ நினைக்கிறாய்
இப்படிக்கு
'இதயம்'
தத்துவம்
என்ன தான் பொண்ணுங்க கலரா இருந்தாலும் அவங்க நிழல் கருப்பாகத் தான் இருக்கும்!
என்ன தான் பசங்க கருப்பாக இருந்தாலும் அவங்க மனசு வெள்ளையாகத் தான் இருக்கும்!
வாய் விட்டு சிரிங்க!!!

கடவுள்:என்ன வரம் வேண்டும் கேள்.
பையன்:எனக்கு ஒன்றும் வேண்டாம்.என் அம்மாவிற்கு மட்டும் ஒரு நல்ல அழகான பொண்ணு மருமகளா வரவேண்டும்.
கடவுள்:!!!!
மனைவி:எதுக்கு அடிக்கடி கிச்சன் ரூமுக்கு போயிட்டு வர்றிங்க.
கணவன்:டாக்டர் தான் அடிக்கடி சுகர் இருக்கான்னு செக்கப் பண்ணச் சொன்னார்!!!
ஒசாமா பின்லேடனுக்கு ''பயம்'' என்றால் என்னவென்று தெரியாது.
ஏன்???
ஏன்னா பின்லேடனுக்கு தமிழ் தெரியாது.
நடிகர் பார்த்திபன்:என்ன காலையில குரங்கு கூட வாக்கிங்கா?
நடிகர் வடிவேலு:ஹலோ இது குரங்கு இல்லை.நாய்
நடிகர் பார்த்திபன்:நான் நாய்கிட்ட கேட்டேன்.
நடிகர் வடிவேலு:அப்ப சரி!!!
ஆசிரியர்:நீங்கள் எல்லாரும் நன்றாக படித்து நாட்டுக்கு நல்ல பேர் வாங்கித் தரணும்.
மாணவன்:ஏன் டீச்சர் 'இந்தியா'என்கிற பேர் நல்லா இல்லையா...
ஆசிரியர்:???????//
ப்யூட்டி பார்லர் முன்பு எழுதியிருந்த வாசகம்:
இங்கிருந்து வெளியே செல்லும் பெண்களைப் பார்த்து விசில் அடிக்காதீர்கள்!!
அவள் ஒரு வேளை உன் பாட்டீயாக கூட இருக்கலாம்!!!
பையன்:டிரஸ் சூப்பர்!
லேடி:தேங்ஸ்
பையன்:லிப்ஸ்டிக் சூப்பர்!
லேடி:தேங்ஸ்
பையன்:மேக்கப் சூப்பர்! வெரி நைஸ்!
லேடி:தேங்ஸ் டா
பையன்:அப்புறம் ஏன்டீ அசிங்கமா இருக்க?!!!!
பிளாஷ் நியூஸ்:சென்னை மெரினா பீச்ல மீன் சாப்பிட்ட 3 பேர் மண்டைய போட்டுட்டாங்களாம்.
அய்யோ அப்புறம்?
அப்புறம் என்ன அந்த மீன் மண்டைய நாய் தூக்கிட்டு போயிடுச்சு.
ஆப்பிள் அழுது கொண்டு இருக்கிறது
வாழைப்பழம்:ஏன் அழுகிறாய்?
ஆப்பிள்:எல்லாரும் என்னை கட் பண்ணி சாப்பிடுறாங்க!!
வாழைப்பழம்:நீ பரவாயில்லை.என்னை எல்லாரும் என்னோட டிரஸ்ஸ அவிழ்த்துவிட்டு சாப்பிடுறாங்க!!
சர்தார் 1:நம்ம ரெண்டு பேரும் பில்டிங்க்கு பாம் வைக்க கார்ல போறோம்
சர்தார் 2:போற வழியிலே பாம் வெடிச்சுட்டா??
சர்தார் 1:கவலைப்படாதே!! என்கிட்ட இன்னொரு பாம் இருக்கு!!
உறக்கமில்லாமல் சுத்துகிறேன்
நீ நிம்மதியாக உறங்குவாய் என்று
இப்படிக்கு
உஷா பேன்
நீங்கள் ஒரு தமிழனா???? பரிசோதிக்க இங்கே க்ளிக் பண்ணவும்.........
கீழ் உள்ளவைகளின்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்...!
1. எந்தப் பொருள் வாங்கினாலும், ரொம்ப நாளைக்கு அதைச் சுத்தி இருக்கற ஜவ்வுபேப்பரைக் கிழிக்கவே மாட்டீங்க..!
2. உங்க சமையலில் உப்பு, புளி, மிளகாய் சேராமல் எந்த உணவும் இருக்காது..!
3. உங்களுக்கு வந்த அன்பளிப்புப் பொருட்களில், பால்குக்கரும், அஜந்தா
கடிகாரமும் நிச்சயம் இடம் பிடிச்சிருக்கும்..!
பேரு வந்ததை அடுத்தவங்க தலையில் [அன்பளிப்பாதான்]
திட்டம் போட்டுகிட்டு இருப்பாங்க..!
4. வெளிநாட்டுக்குப் போயிட்டு வந்தீங்கன்னா, ஒரு சைஸ்
சூட்கேஸோடதான் ஊருக்குத் திரும்புவீங்க..!
5. எந்த நிகழ்ச்சிக்குப் போனாலும் 1 மணி நேரம் தாமதமாப் போவீங்க.
அதுதான் சரியா இருக்கும்ன்னு மனசார நம்புவீங்க...!
6. மளிகைப் பொருட்களின்பாலிதீன் உறைகளை பத்திரமா வைப்பீங்க..
பின்னாடி உதவும்ங்கற தொலைநோக்குப்பார்வையோடு...!
7. உங்களுக்கு வரும் கடிதங்களில் எல்லா ஸ்டாம்பிலும் சீல் பார்ப்பீங்க.
சீல் விழாம இருந்தா, அந்த கவனமா பிரிச்சு எடுத்து எங்கேயாவது வச்சுட்டு,
அப்புறம் சுத்தமா மறந்துடுவீங்க.
8. சினிமா தியேட்டரோ,விரைவுப் பேருந்தோ..இருபக்க கை வைக்கும்
இடத்துக்கும் சொந்தம் கொண்டாடுவீங்க..!
9. ரெட்டைப் பிள்ளைகள் இருந்தா, ஒரே மாதிரிட்ரெஸ் தச்சுக் கொடுப்பீங்க. ரைமிங்கா பேர் வைப்பீங்க..[ரமேஷ், மகேஷ்.அமிர்தா,சுகிர்தா..]
10. ஏ.சி.திரையரங்குன்னா முட்டை போண்டா எடுத்துட்டுப் போய் நாறடிப்பீங்க..
ஏ.சி.கோச்சுன்னா,கருவாட்டுக் குழம்பை கீழே ஊற்றி கப்படிக்கவைப்பீங்க.!
11. விமானமோ,ரயிலோ, பஸ்ஸோ... ஒரு கும்பல் வந்து
ஏத்திவிடணும்ன்னு எதிர்பார்ப்பீங்க....!
12. புதுசா கார் வாங்கினா,அதுக்கு மணப்பெண்அலங்காரம் பண்ணிதான்
எடுத்துட்டு வருவீங்க.!கொஞ்ச நாளைக்கு சீட்.பேப்பரைக் கிழிக்கவே மாட்டீங்க..
நம்பர் எழுதறீங்களோஇல்லையோ.. கொலைகார முனிதுணைன்னு
ஸ்டிக்கர் ஒட்டமறக்கவே மாட்டீங்க...!
13.. செல் போனோ, டி.வி.ரிமோட்டோ.. லாமினேஷன் செஞ்சாதான்
உங்களுக்கு நிம்மதி..!
14. அடுத்தபிள்ளைகளைப் பாரு..எவ்வளவு சாமர்த்தியமாஇருக்காங்கன்னு.. என்று உங்க பெற்றோர் சொல்லாம இருக்கவேமாட்டாங்க.. அடுத்த
பெற்றோரைப் பாருங்க..எவ்வளவு ஜாலியா செலவழிக்கறாங்கன்னு
நீங்க நெனைப்பீங்க..ஆனா சொல்ல மாட்டீங்க..!
15. உங்க வீட்டு ஃபிரிட்ஜ்ல, சின்னச் சின்னக் கிண்ணங்களில், 3 மாசமா
தயாரிச்ச குழம்பு, கறி வகையறா இருக்கும்..!
16. உங்க சமையலறை அலமாரியில் காப்பித்தூளுக்கு இலவசமா வந்த பெட் ஜாடி
குறைஞ்சது ரெண்டு மூணு இருக்கும்..!
17. அதிகமா உபயோகிக்கப்படாத பொருள் உங்ககிட்ட அவசியம் நாலைஞ்சு
இருக்கும். [உ-ம்.பிரஷர். குக்கர்,காப்பி மேக்கர்,வாக்குவம் கிளீனர்,பிரெட் டோஸ்ட்டர், மைக்ரோ வேவ் அவன்,கேஸ் அடுப்புல க்ரில் இப்படி..]
18.பொங்கல், தீபாவளின்னாவீட்டுல சந்தோஷமா விழுந்து கெடக்க மாட்டீங்க.. தண்ணியைப் போட்டுட்டு,தகராறுபண்ணி,போலீஸ்-ஸ்டேஷன்ல குத்தவச்சுருப்பீங்க..!
19. கல்யாணத்துக்கு ஊர் பூரா பத்திரிகை வச்சு கலெக்ஷன் பார்ப்பீங்க..
20. இந்த விவரம் உங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கும்...
உடனே உங்க நண்பர்களுக்கு அனுப்பணும்ன்னு கை பரபரக்கும்..








