பழம்பாறை (அறிவியல் சிறுகதை)

Image

( 1 ) கவனி, என் குரலைக் கவனி. என் குரல் என்பது உண்மையில் குரல் அல்ல, அது இன்னொன்று. ஒரு மூளை இன்னொரு மூளையை தொடர்பு கொள்வதற்கான எல்லா வழிமுறைகளிலும் இதை அறியமுடியும். ஒரு மூளையின் மிகச்சிறந்த அல்லது மிக இயல்பான வழிமுறை எதுவோ அதன் வழியாக இது தன்னை தொடர்புறுத்தத் தொடங்கும். இதை…

மெய்போலுமே மெய்போலுமே

Image

2019-இல் நான் வல்லினத்தில் ‘தையும் பொய்யும்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினேன். பிறகு 2021-இல் மலேசிய தமிழ்ச்சூழலில் நடந்த சில அதீத செயல்பாடுகள் காரணமாக அக்கட்டுரையை மீள் பார்வைக்குக் கொண்டுவந்தேன். அக்கட்டுரையின் மைய கருத்து, பொதுவாக தைப்புத்தாண்டு எனும் கருத்தைப் பரப்பும் தரப்பினர் தங்கள் முதன்மை ஆதாரமாக முன்வைக்கும் ‘மறைமலையடிகளின் தலைமையில் 1921ஆம் ஆண்டு,…

மேன்மகன் மூர்த்தி

Image

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் 21-12-25 ஞாயிறு அன்று நடைபெற்ற ‘வல்லினம் விருது’ வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றேன்.  ஆசிரியராக இருந்து பின்னர் தேர்வுத்துறை அதிகாரியாகப் பணியாற்றிய காலத்தில் மலேசியத் தமிழ்ப் பள்ளிப் பாடத்திலும் தேர்வுமுறைகளிலும் மாற்றங்களைக் கொண்டு வந்ததோடு நவீன இலக்கிய விழிப்பைக் கல்விக்குள் உண்டாக்கிய பி. எம். மூர்த்தி அவர்கள் இவ்வாண்டு விருதுக்குரியவர்.…

ஜார்ஜ்புஷ்ஷும் வட்டப்பேரும்

Image

வாசலுக்குள் நுழைந்து அரசமரத்தைக் கடந்து செல்ல, கிளையில் இருந்து குதித்து வந்து மண்டைஓடு கூவினான், “லேய் வாத்து, நேத்து ஏம்பில வரல?”  “ஊர்ல இல்லல. நேத்துதான் வந்தேன்”, என் பதிலை அவன் கவனித்ததாக தெரியவில்லை.  “ஏறிச்சாடி விளாட வாரியா?”, மண்டைஓடு புதிதாக ஒரு விளையாட்டை கண்டுபிடித்துவிட்ட உற்சாகத்தில் இருந்தான்.  அவன் கண்கள் இரண்டும் விரிந்து வட்டமாக,…

தி. அலியாஸ் தைப்பின் உதடுகள்

Image

எங்கள் கட்டுப்பாட்டாளர் அலுவலகத்துக்கு அந்த அழைப்பு திடீரெனதான் வந்தது எனலாம். “பிரபல கவிஞர் தி. அலியாஸ் தைப்பின் உதடுகளை விளம்பரப்படுத்தலாமென்று இருக்கிறேன்.” எங்கள் அலுவலகத்தில் ஒருவருக்குக் கூட தி. அலியாஸ் தைப் யாரெனத் தெரிந்திருக்கவில்லை. மேலும், அவரைத் தெரிந்து வைத்திருப்பது ஒரு தொலைப்பேசி எண்கள் அடைவு நிறுவனத்திற்கு அவ்வளவு முக்கிய பணியுமில்லை. விளம்பரம் தொடர்பான தகவல்களைச்…

பாவமன்னிப்பு

Image

“சென்று வாருங்கள் திருப்பலி நிறைவேறிற்று” என்று பாதிரியார் தாமஸ், பிராத்தனையில் கூடியிருந்த மக்களைப் பார்த்துச் சொல்ல, இறைவனுக்கு நன்றி கூறி மணலில் அமர்ந்திருந்த மக்கள் எழுந்தனர். கடற்கரை காற்றில் பறந்த அவரவர் ஆடைகளைக் கவனமாகப் பிடித்தபடி கலைந்து சென்றனர். கூட்டத்தில் இருந்த தேநீர் கடைக்காரர், “சாமி!” என்று தாமஸை நோக்கிக் கத்தினார். ஆலயத்திற்குள் செல்ல எத்தனித்த…

குரோதம்

Image

சீடேக் நீண்ட காலமாகப் பொறுமையாக இருந்துவிட்டான். ஏழு ஆண்டுகளுக்கும் மேலாகவே பொறுமை காக்கவும், கோபத்தை அடக்கவும், பழிவாங்கும் எண்ணம் எழாமல் இருக்கவும் தன்னைத் தானே பழக்கிக்கொண்டிருந்தான். ஆனால் இன்று அவன் தனக்குள் எழுப்பியிருந்த அந்தத் தடுப்புச் சுவரில் கசிவு ஏற்படும் நிலை நெருங்கிக்கொண்டிருந்தது. அவனுக்குள் கொந்தளித்த வெறுப்பு – நீண்ட காலமாக அழுகி, சீழ்படிந்த வெறுப்பு…

கல்முகன்

Image

“உங்கள் இறுகிய முகம் அழகானது!” என்றேன் நான். “கல்முகன்! அப்படித்தான் எல்லோரும் என்னை அழைக்க விரும்புகின்றனர்” என்றார் பஸ்டர் கீட்டன். “அதுதான் உங்கள் பிரியமான புனைப்பெயர் என நீங்கள் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தீர்கள்” என்றேன். “உண்மை!” என ஆங்கிலத்தில் சொல்லி அருகே மேஜையிலிருந்த தொப்பியை தட்டி எடுத்து தலையில் பொருத்தி அப்பெயரை விரும்பியவர் போல் தொப்பியை…

பசுமை இல்லம்

Image

இந்தச் சிறிய நிறுவனத்தின் மேல் தளத்தில், இடமோ வலமோ சன்னல்கள் இல்லாத சுவரை ஒட்டி வளைந்து செல்லும் பதினைந்து படிகளில் ஏறிச் சென்றால் சாம்பல் நிற கதவின் முன் சென்று நிறுத்தும்.  அந்தக் கதவைத் திறந்து சென்றால், சட்டென நிறுவனத்தின் பரபரப்புகளிலிருந்தும், பெருநகரின் கூச்சல் குழப்பங்களிலிருந்தும் வெகுதூரம் விளகியிருக்கும்   அகண்ட மொட்டை மாடி, எங்களை இன்னொரு…

படகு

Image

சில நாட்களாகவே நான் மிகாலை கவனித்துக் கொண்டுதான் இருக்கின்றேன். அறை சுவரில் மாட்டியுள்ள சீன லூனார் நாள்காட்டி தாள்களை ஒவ்வொரு முறையும் நான் கிழித்ததை வைத்துப் பார்த்தால் ஏறக்குறைய 2 மாதங்களாக என்னுடைய பார்வை முழுவதும் மிகால் மேல்தான் பதிந்துள்ளது. ஒவ்வொரு முறையும் நாள்காட்டி தாள்களின் எண்ணிக்கை குறைய குறைய நான் மிகாலை நேருக்கு நேர்…

அவனை எனக்குத் தெரியும்

Image

தண்டவாளங்களுக்கு இடையில் அமைந்த சிட்னி நகரின் மத்திய ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்தேன். எனக்கான அடுத்த ரயிலுக்கு 18 நிமிடங்கள் காத்திருக்க வேண்டும் என்று நேரத்திரை காண்பித்தது. இரும்புகளில் வழுக்கிவரும் ரயில்களின் ஓசை, விட்டு விட்டு ஒலித்தது. அடுத்தடுத்த ரயில்களின் வருகையை அறிவிப்பவரின் குரல் சுருதி பிசகாத மந்திரமாய் கேட்டது. நான் அருகிலிருந்த நீண்ட இரும்புக் கதிரையில்…

மண்கதை

Image

கனத்த மூச்சுடன், அம்மா இனி இல்லை என்பதைத் தம்பி என்னிடம் சொன்னான்.1 நானும் தம்பியும் தாத்தாவின் குடிசைக்குப் பக்கத்தில் உள்ள இடத்தில் குடிசையின் நிழல் நீளமாக விழும் மாலை நேரம் வரை எங்களை மறந்து மண்ணில்2 ஆர்வமாக விளையாடிய நாட்கள் இன்றும் நினைவிருக்கிறது.  நானும் தம்பியும் உள்ளே படுத்திருந்த தாத்தாவை முற்றிலும் கவனிக்கவில்லை. தாத்தாவுக்கு அடிக்கடி…

சாதகம்

Image

கட்டிலில் பாதி அளவே இருந்தாள். சுருக்கங்களை நீவி விட்டால் நீண்டு விடுவாளோ என்று தோன்றியது. ”நல்லாக்றீங்களா?” என்றதற்கு, எங்கோ பார்த்து ”ஆங் நல்லத்தான இருக்குறேன் போ” என்று சிரித்தாள். பொன்னாத்தா கிழவிக்கு வயது தொன்னூற்று ஒன்று. நடமாடிக்கொண்டுதான் இருக்கிறாள். அம்மா என்னிடம் கூறிய கணக்குப் படி பார்த்தால் எந்தத் தடையமும் தெரியவில்லை. நான் ஊருக்கு வந்து…

கூத்தன் மலை

Image

1 மலைச்சரிவில் ஒரு மின்மினி பேருவகையும் பெருமழையும் அருகிவிட்டிருந்த அந்த வறண்ட நிலம் அன்று விழாக்கோலம் கொண்டிருந்தது. ஒருவார காலமாய் களைகட்டிய கட்டுங்கடங்காத கொண்டாட்டங்களும் கொந்தளிப்புகளும் உச்சம் ஒன்றை எட்டிவிடும் மும்முரத்தில் இருந்தது. ஏழாம் நாளான அன்றைய இரவில் நடக்கவிருந்தது மிக முக்கியமான இணைவு. ஊரின் முதன்மை வீரன் என அறிவிக்கப்பட்டு, ஒரு வருடகாலமாய் போற்றப்பட்டு…

நிலத்தைச் சுமந்தலைபவரின் கதைகள்

Image

‘எம் நிலத்துக்கான, எம் வளத்துக்கான, எம் ஆநிரைகளுக்குத் தேவையான அரசியலில் இருந்து என் எழுத்துத் தொடங்குகிறது,’ என்று வெற்றிச்செல்வன் இராசேந்திரன் குறிப்பிட்டாலும், அவர் எழுத்துகள் அரசியல் சீற்றமற்றவை. கழிவிரக்கம் கொள்ளாதவை. காடு மேடுகளையும் வெய்யில் மழையையும் இலகுவாகக் கடந்து செல்லும் இடையர்களின் வாழ்க்கைபோலவே அவரது எழுத்தும் இலகுவானது. காட்டாற்றின் போக்கிலே ஓடிக்கொண்டிருந்தாலும் கரையொதுங்கும் தருணத்திற்காக அலட்டிக்கொள்ளாது…

நான்காவது கொலை

Image

‘உங்களுடைய பொருளை நேரில் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்’ என்று அன்பான அழைப்பில் ஒரு கடிதம் சுங்கப் பகுதியிலிருந்து வந்திருந்தது. இலங்கையின் சுங்கப் பகுதியிலிருந்து இப்படி ஒரு அன்பான கடிதம், தமிழ் எழுத்தாளருக்கு வருவதாக இருந்தால், அந்தக் கடிதத்தின் எடையை நீங்கள் கற்பனை செய்தே பார்க்க முடியாது. தலையிலும் மனதிலும் சட்டென அந்தப் பாரம் ஏறி விடும். ‘அப்படியென்ன பெரிய…

தெலுங்கு நாட்டுபுறக் கதைகளை

Image

ஒரு ஊரில் ஒரு கிழவி இருந்தாள். அந்தக் கிழவி தினமும் காலையிலே வீட்டு முற்றத்தைச் சுத்தமாகப் பெருக்கிச் சாணம் தெளித்து அழகாகக் கோலம் இடுவாள். ஒருநாள் வீட்டு முற்றத்தில் பெருக்கிக் கொண்டிருந்தபோது, ​வெள்ளையாகக் கோழி முட்டை ஒன்று பளபளனு மின்னுவதைக் கண்டாள். கிழவி அதை எடுத்து வந்து அடை போடலாம் என்று அடுப்பில் வைத்தாள். தோசைக்கல்…

புதுமைப்பித்தனின் பசித்த மனிதர்கள்

Image

பசித்திருக்கும் மனிதனை அகக்கண்கொண்டே பார்த்துணரமுடியும். எல்லா சாமான்ய மனிதர்களுக்கும் இந்த அகப்பார்வை அமைவதில்லை. பசியால் இருக்கும் மனிதர்களுக்குத்தான் பசியோடு இருக்கும் சக மனிதனைக் கண்டுணரும் நுண்ணியம் வாய்க்கும். கருணை உள்ளங்கொண்டவர்களாலும் அவர்களை எளிதில் அடையாளம் காணமுடியும்.  இவர்களில் துல்லிதமாய் உணர்பவன் படைப்பாளன் மட்டுமே. ஏனெனில் அவன் தன்னைச் சுற்றிவாழும் சமூகத்திடமிருந்தே கதையை உருவி எடுக்குகிறான். மனிதர்களின்…

வல்லினம் முகாம் 2025

Image

முதல் பகுதி: சிறுகதையின் வரலாறு சாலினி வருடந்தோறும் வல்லினம் விருது விழாவுக்கு முன் நடத்தப்படும் வல்லினம் முகாமில் 2021ஆம் ஆண்டு தொடங்கி ஒவ்வொரு முறையும் பங்கெடுத்து வந்திருக்கிறேன். இம்முறையும் 21 டிசம்பர் முதல் 22 டிசம்பர் என 2 நாட்களுக்கு  எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களால் வழிநடத்தப்பட்ட வல்லினம் இலக்கிய முகாமில் கலந்துகொண்டேன். இதற்கு முன்…

கௌசல்யா கவிதைகள்

Image

ஒரு நல்ல மரணத்தை வேண்டுகின்ற நாளில் சாத்தான் கொஞ்சம் மனமிறங்கியிருக்கலாம்.அன்பற்று வறண்டு கிடக்கும் சரீரத்தில் ஒரு தேநீரை நிரப்பி பிழைத்திருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது. *** எனக்கு உன் குறைகள் உறைக்கிறது அப்படியானால் நான் உன்னை இழக்க தயாராகி கொண்டிருக்கிறேன். நான் அன்பின் கரங்களை ஏந்தியபோது எந்த வெறுப்பையெல்லாம் என்மீது உமிழ்ந்தாயோ அதையெல்லாம் திரும்பச்செய் நான்…

பெருமாள்முருகனின் படைப்புலகம் (உரையாடல் பதிவு)

Image

“காலங்காலமாகப் பெருமை பெற்று நிலைத்திருக்கும் ஒரு மதமும், தலைமுறை தலைமுறையாகத் தொடரும் சாதியும் ஒரு  எளியவனின் எழுத்துக்களால் சிதறுண்டு போகும் என்றால் அந்த மதத்தின் அடிப்படையையும் அந்தச் சாதி அமைப்பின் கட்டுமானத்தையும் காலம் உலுக்கி வீழ்த்தும்.” மாதொருபாகன் சர்ச்சையின் போது கவிஞர் சுகுமாரன் எழுதிய ‘எழுத்தை யார் ஆள்வது?’ எனும் கட்டுரையின்  உள்ளடக்கத்தை வைத்து பெருமாள்…