Showing posts with label thiratti.com. Show all posts
Showing posts with label thiratti.com. Show all posts

Monday, August 03, 2009

வினாடி- வினா (திரட்டி.காம் நட்சத்திர ஸ்பெஷல்)

1. தெலுங்கு கீதாஞ்சலியின் தமிழ்வடிவமான இதயத்தைத் திருடாதே யில் அனைத்துப்பாடல்களையும் தெலுங்கின் மூலவடிவத்திற்கு சற்றும் குறைவில்லாமல் உணர்வுப்பூர்வமாகப் பாடிய பாடகர் மனோ, பின்னாளில் முக்காலா முக்காபுலா, அழகிய லைலா என ஹைபிட்ச் பாடல்களில் ஒரு கலக்கு கலக்கியவர். இவர் தமிழில் பாடிய முதல் பாடல்/படம் எது? அந்தப் படத்தின் இசையமைப்பாளர் யார்?


2. இவர் ஒரு முன்னாள் இந்திய மித வேகப்பந்து வீச்சாளர். உலகக்கோப்பை ஒரு நாள் போட்டிகளில் ஹேட்ரிக் சாதனை செய்தவர். அதிரடியாக முன்வரிசை ஆட்டக்காரராக இங்கிலாந்து அணிக்கெதிரான ஒரு நாள் போட்டி ஒன்றில் களம் இறங்கி ஆட்டமிழக்காமல் சதமடித்து அணிக்கு வெற்றி வாய்ப்பைப் பெற்றுத்தந்தவர்.இவர் பெயரைக் கேட்டவுடன் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள்ஆனந்த பரவசமடைந்து மலரும் நினைவுகளில் மூழ்குவார்கள்.யாரிந்த கிரிக்கெட் வீரர்?

3. இது உலகின் மிகப்பெரியத் தீவுகளில் ஒன்று. சுயாட்சி அதிகாரம் படைத்த தீவாக இருந்த போதிலும் அரசியலமைப்புச் சட்டம், வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் ஆகியன ஸ்கேண்டிநேவிய நாடு ஒன்றின் வசம் உள்ளது(Suzerainty). கொலைக்குற்றவாளி என நார்வே நாட்டைவிட்டுத் துரத்தப்பட்டவரால் கிபி 10 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட இந்தத் தீவின் பெயர் என்ன?

4. இவர் பாரத ரத்னா விருது பெற்றவர். மகாத்மா காந்திக்கு நெருக்கமாக இருந்த இவர் பாகிஸ்தான் - இந்தியப் பிரிவினையை எதிர்த்தவர். இருந்த போதிலும் பிரிவினைக்குப்பின்னர் பாகிஸ்தானி ஆன பின்னர் “இந்தியாவின் நண்பனாகவே “ அடையாளம் காணப்பட்டவர்.
Image
வாழ்நாளில் பெரும்பான்மையான நாட்களை(கிட்டத்தட்ட 52 வருடங்கள்) சிறையிலோ நாடு கடத்தப்பட்டோ கழித்த இவர் இறந்த போது இந்திய அரசாங்கம் இவருக்காக 5 நாட்கள் துக்கம் அனுசரித்தது. இந்திய வரலாற்றுப் புத்தகங்களில் நல்லதொரு இடத்தைப் பிடித்திருக்கும் இந்த நபர் யார்?

5. ஆல்பிரட் நோபலுக்கும் இந்திய அரசியலுக்கும் நேரிடையான சம்பந்தம் கிடையாது. இரும்பு மற்றும் எஃகு தொழிற்சாலையாக இருந்த உலகின் மிகவும் பழமையான நிறுவனங்களில் ஒன்றை ஆயுதத் தயாரிப்பு தொழிற்சாலையாக மாற்றிய போது , இந்த நிறுவனத்தின் பெயர்தான் இந்திய அரசியலில் ஒரு கலக்கு கலக்கப் போகின்றது என அவருக்கு கண்டிப்பாக தெரிந்திருக்காது, மழைவிட்டாலும் தூவானம் விடாது என கால் நூற்றாண்டிற்குப்பின்னரும் இந்திய அரசியல் அரங்கில் வலம் வரும் இந்த சுவிடீஷ் நிறுவனத்தின் பெயர் என்ன?

6. பன்னாட்டு கிரிக்கெட் ஆட்டங்களில் பங்கு பெறும், தென்னமெரிக்கா கண்டத்தைச் சேர்ந்த நாடு எது? இந்த நாடு நேரிடையாகப் பங்கேற்காமல் கூட்டாக அணியை போட்டிகளுக்கு அனுப்பும் நாடுகளுள் ஒன்று. இந்த தென்னமெரிக்கா நாட்டின் பெயர் என்ன? இதே போல் ஒரு தனிக்குடியரசு நாடு, மற்றொரு நாட்டின் ஒரு பகுதியோடு இணைந்து கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கின்றது. அந்த அணியின் பெயர் என்ன?

7. உலகின் பெரும்பாலான நாடுகள் ஒரே தலைநகரத்தைக் கொண்டிருக்கையில் விதிவிலக்குகளாக , சில நாடுகள் நிர்வாக வசதிக்காக இரண்டு தலை நகரங்களைக் ஏற்படுத்தி வைத்திருக்கும். இதைத் தூக்கி சாப்பிடும் விதமாக ஒரு நாடு மூன்று தலைநகரங்களைக் கொண்டிருக்கின்றது. நிர்வாகத்திற்கு ஒன்று, நீதித்துறைக்கு ஒன்று, சட்டம் இயற்றலுக்கு(பாராளுமன்றம்) ஒன்று என மூன்றுத் தலைநகரங்களை வைத்திருக்கும் நாடு எது?

8. கேள்வி எண் மூன்றில் இருக்கும் நாடு போல இந்தியாவின் மேற்பார்வையில் தனிச் சுதந்திர நாடாக இருந்த ஒன்று பின்பு இந்தியாவின் மாநிலமாக மாறியது. அந்த மாநிலத்தின் பெயர் என்ன?

9. மகாபாரதக் கதைகளில் கௌரவப் படையினரில் உயிருடன் எஞ்சிய மூவர்களில் இருவர் கிருபாச்சாரியா, கிரீடவர்மா. மூன்றாமவர் யார்?

10. கடைசியாகக் கிரிக்கெட் பற்றிய மற்றும் ஒரு கேள்வி. ஒரு நாள் போட்டிகளின் வீச்சு மிக அதிகமாக கோலேச்சிய 90 கள் மற்றும் 2000 ஆம் ஆண்டுகளில் 71 டெஸ்ட் ஆட்டங்கள் ஆடி 4000 ஓட்டங்களுக்கும் மேல் எடுத்த ஒரு ஆட்டக்காரர் தன் வாழ்நாளில் பன்னாட்டு ஒரு நாள் போட்டி ஒன்று கூட ஆடவில்லை.
Image
இது போல சுவாரசியமான சாதனைகளை எல்லாம் இங்கிலாந்து ஆட்டக்காரர்கள் தான் வைத்திருப்பார்கள்? யாரிந்த இங்கிலாந்து ஆட்டக்காரர்?