Showing posts with label moon. Show all posts
Showing posts with label moon. Show all posts

Thursday, August 13, 2009

"காட்டில் எரியும் வட்டநிலா!"

"காட்டில் எரியும் வட்டநிலா!"

Image
பனிபொழியும் இரவுநேரம்

பாதையிலாக் காட்டுவனம்
தென்றலொன்றைத் துணையாக்கித்

தனிமரமாய் நடந்திருந்தேன்

ஆருமற்ற காட்டினிலே
வேறுசத்தம் கேட்கவில்லை

பறவைகளும் உறங்கியாச்சு

இரவுமங்கே அடர்ந்தாச்சு


காற்றலையின் சிலுசிலுப்பில்

கனிமரங்கள் இலையசைய
கிளைகளது விரிப்பினிலே
பால்நிலவின் தரிசனம்


முழுநிலவாய் ஒளிர்ந்தங்கு

பால்நிலவாய்ப் பொழிந்திருக்க

பாதைசற்றுத் தெளிவாக

நன்றியுடன் தலைநிமிர்ந்தேன்

நிலவங்கு அழுவதுபோல்

எனக்குள்ளே பிரமைதட்ட

துணுக்குற்று அதைப் பார்த்தேன்

என்மீது சிறுதூறல்


யாருமில்லாக் காட்டினிலே

எவர்க்காகப் பொழிகி்றது

வட்டநிலா வடிவழகைக்
கண்டிடவோ் ஆளில்லை


அழகினையே ரசித்திடவோ

அக்கம்பக்கம் எவருமில்லை

தண்ணொளியைப் பருகிடவோ
எவராலும் இயலவில்லை


தனிக்காட்டில் எரிகின்ற

தங்கநிலா துயரதனை

எவரறிவார் ஏதறிவார்

எவருக்குத்தான் இதுபுரியும்


எரிகின்ற வண்ணநிலா
எத்தனையோ நாட்டினிலே

அவரையெண்ணி மனம் கசிந்தேன்

நலம்வாழப் பிரார்த்தித்தேன்!


எரிகின்ற நிலாக்கள் இனி

வளமாகும் நிலை வேண்டும்

சுவரில்லாச் சித்திரங்கள்
தம்துணையைச் சேரவேண்டும்!


என்மனத்தை அறிந்தவனாய்

மனமுருகன் சிரித்திட்டான்

சுவருண்டு துணையுண்டு

நேரம்வரும் பொறு என்றான்!

ஓம்!ஓம்! என்பதுபோல்

மணியோசை காதில்விழ

பால்நிலாவைத் துணைகொண்டு

வேகமாக நடக்கலானேன்!


முருகனருள் முன்னிற்கும்!


அனைவருக்கும் ஆடிக் கிருத்திகை வாழ்த்துகள்!


Image
சிந்தாமணியே திருமால்மருகா
வந்தார்க்கு உயர்வாழ்வு கொடுத்தருள்வாய்
நொந்தாழ் வினையேன் முகம்நோக்கி வரம்

தந்து எனையாள் முருகா! தணிகாசலனே!



இதை இன்று 16 முறை சொன்னால் நல்ல பலன் தருவான் மனமுருகன்!
*********************************

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP