கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா

கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா நான்
கண்ணாடி பொருள் போலடா
அந்த நதியின் கரையை நான் கேட்டேன்
அந்த காற்றை நிறுத்தியும் கேட்டேன்
வான் வெளியைக் கேட்டேன் விடையே இல்லை
இறுதியில் உன்னைக் கண்டேன்
இருதயப் பூவில் கண்டேன்
(கண்ணாமூச்சி ஏனடா)
என் மனம் உனக்கொரு விளையாட்டுப் பொம்மையா?
எனக்கென உணர்ச்சிகள் தனியாக இல்லையா?
நெஞ்சில் அலை உறங்காது
உன் இதழ் கொண்டு வாய் மூட வா என் கண்ணா
உன் இமை கொண்டு விழி மூட வா
உன் உடல் தான் என் உடையல்லவா
பாற்கடலில் ஆடிய பின்னும்
உன் வண்ணம் மாறவில்லை இன்னும்
என் நெஞ்சில் கூடியே நிறம் மாற வா
என்னுயிரில் நீ வந்து சேர்க
உதடுகள் ஈரமாக வாழ்க
கலந்திட வா
(கண்ணாமூச்சி ஏனடா)
வான் மழை விழும் போது மலை கொண்டு காத்தாய்
கண் மழை விழும் போது எதிலென்னைக் காப்பாய்
பூவின் கண்ணீரை இரசிப்பாய்
நான் என்ன பெண்ணில்லையா என் கண்ணா அதை
நீ காணக் கண்ணில்லையா
உன் கனவுகளில் நானில்லையா
தினம் ஊசலாடுதென் மனசு அட ஊமையல்ல என் கொலுசு
என் உள் மூச்சிலே உயிர் வீங்குதே
என்னுயிர் துடிக்காமலே காப்பது உன் தீண்டலே
உயிர் தர வா
(கண்ணாமூச்சி ஏனடா)
திரைப்படம்: கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
இயற்றியவர்: வைரமுத்து
இசையமைப்பாளர்: ஏ.ஆர்.ரஹ்மான்
சித்ரா மட்டும் பாடியது, சித்ராவும் ஜேசுதாஸும் பாடியது.


