Showing posts with label AR Rahman. Show all posts
Showing posts with label AR Rahman. Show all posts

Friday, March 02, 2007

கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா

Image
கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா நான்
கண்ணாடி பொருள் போலடா
அந்த நதியின் கரையை நான் கேட்டேன்
அந்த காற்றை நிறுத்தியும் கேட்டேன்
வான் வெளியைக் கேட்டேன் விடையே இல்லை
இறுதியில் உன்னைக் கண்டேன்
இருதயப் பூவில் கண்டேன்
(கண்ணாமூச்சி ஏனடா)

என் மனம் உனக்கொரு விளையாட்டுப் பொம்மையா?
எனக்கென உணர்ச்சிகள் தனியாக இல்லையா?
நெஞ்சில் அலை உறங்காது
உன் இதழ் கொண்டு வாய் மூட வா என் கண்ணா
உன் இமை கொண்டு விழி மூட வா
உன் உடல் தான் என் உடையல்லவா
பாற்கடலில் ஆடிய பின்னும்
உன் வண்ணம் மாறவில்லை இன்னும்
என் நெஞ்சில் கூடியே நிறம் மாற வா
என்னுயிரில் நீ வந்து சேர்க
உதடுகள் ஈரமாக வாழ்க
கலந்திட வா
(கண்ணாமூச்சி ஏனடா)

வான் மழை விழும் போது மலை கொண்டு காத்தாய்
கண் மழை விழும் போது எதிலென்னைக் காப்பாய்
பூவின் கண்ணீரை இரசிப்பாய்
நான் என்ன பெண்ணில்லையா என் கண்ணா அதை
நீ காணக் கண்ணில்லையா
உன் கனவுகளில் நானில்லையா
தினம் ஊசலாடுதென் மனசு அட ஊமையல்ல என் கொலுசு
என் உள் மூச்சிலே உயிர் வீங்குதே
என்னுயிர் துடிக்காமலே காப்பது உன் தீண்டலே
உயிர் தர வா
(கண்ணாமூச்சி ஏனடா)


திரைப்படம்: கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
இயற்றியவர்: வைரமுத்து
இசையமைப்பாளர்: ஏ.ஆர்.ரஹ்மான்

சித்ரா மட்டும் பாடியது, சித்ராவும் ஜேசுதாஸும் பாடியது.

Saturday, December 09, 2006

2. அலைபாயுதே கண்ணா

மிகப் பிரபலமான அலைபாயுதே கண்ணா...பாடலைக் கேட்க, இங்கே சொடுக்கவும் - இது திரைப்படப் பாடல்; ஏ.ஆர்.ரகுமான் இசையில்
Image
மற்ற கலைஞர்கள் பாடிடும் பாடல் சுட்டிகளும்,
நாதஸ்வரம் மற்றும் இன்ன பிற இசைக்கருவிகளிலும் "அலை பாயுதே" பாடலைக் கேட்க வேண்டுமா?
பதிவின் இறுதியில் சுட்டிகள் உள்ளன!



அலைபாயுதே கண்ணா என் மனம் மிக அலைபாயுதே
உன் ஆனந்த மோகன வேணு கானம் அதில்

(அலைபாயுதே)

நிலை பெயராது சிலை போலவே நின்று
நேரம் ஆவதறியாமலே மிக வினோதமான முரளீதரா என் மனம்

(அலைபாயுதே)

தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரியுதே - உன்
திக்கை நோக்கி என் இரு புருவம் நெரியுதே
கனிந்த உன் வேணு கானம் காற்றில் வருகுதே
கண்கள் சொருகி ஒரு விதமாய் மருகுதே


கதித்த மனத்தில் உருத்தி பதத்தை
எனக்கு அளித்து மகிழ்த்தவா - ஒரு
தனித்த வனத்தில் அணைத்து எனக்கு

உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா

கரைகடல் அலையினில் கதிரவன் ஒளியென
இணையறு கழல் எனக்கு அளித்தவா
கதறி மனமுருக நான் அழைக்கவோ
இதர மாதருடன் நீ களிக்கவோ


இது தகுமோ இது முறையோ
இது தருமம் தானோ
குழலூதிடும் பொழுது ஆடிடும் குழைகள் போலவே
மனதில் வேதனை மிகவொடு

(அலைபாயுதே)



Nadaswaram = Sheik Chinna Moulana Sahib
Nadaswaram = Thiruvizha Jaishankar
Saxaphone = Kadri Gopalnath
Violin = Ganesh-Kumaresh Violin
Jaladharangam = Ananyampatti S Dhandapani
Mandolin = U Srinivas

Chitra
Maharajapuram Santhanam
Sudha Raghunathan
KJ Yesudas
Bombay Sisters

நன்றி: MusicIndiaOnline.com; karanatik.com

Image

பாடல்: அலை பாயுதே
பாடியவர்: ஹரிணி, கல்யாணி மேனன், நெய்வேலி ராமலக்ஷ்மி
எழுதியவர்: ஊத்துக்காடு வேங்கட கவி

ராகம்: கானடா
தாளம்: ஆதி
படம்: அலை பாயுதே

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP