Showing posts with label sanskrit. Show all posts
Showing posts with label sanskrit. Show all posts

Monday, June 24, 2013

MSV & இளையராஜா - "கூட்டாப் போட்ட பாட்டு"

* இன்று திரையிசைச் சக்கரவர்த்தி MSV அவர்களின் பிறந்தநாள்! (Jun24)

"பணியுமாம் என்றும் பெருமை - சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து"   - இந்தக் குறளுக்கு - எழுத்து அசை, சீர் தளை, அடி தொடை -ன்னு முழுக்க முழுக்க எடுத்துக்காட்டு = MSV; பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா!

* கண்ணனின் தாசன், கண்ணதாசனுக்கும் இன்றே பிறந்தநாள்! (Jun24)
Happy Birthday Kannadasa!

Image
Photo Credit: Sabesan, MSVtimes
Image
என்னவொரு ஒற்றுமை! MSV & Kannadasan!
"எலே பணிவுள்ள விஸ்வநாதா, நீ விஜய"வாடா"-வைக் கூட, விஜய"வாங்க" -ன்னு தான் சொல்லுவியா?" -ன்னு MSVயை ஓட்டிய கவிஞர்:)

இந்த நாளில், lemme re-publish a post from 2008!
Sick & In Hosp. Dont have energy to write a new post; So...pardon for the re-post;


எம்.எஸ்.வி-இளையராஜாவைச் சேர்த்து வைத்த கண்ணன் பாட்டு!

"மெல்லத் திறந்தது கதவு-ன்னு ஒரு படம் வந்துச்சி! அதுல யாரு மீஜீக் போட்டாங்க?-ன்னு சொல்லுங்க பார்ப்போம்!
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி - இசை ஞானி இளையராஜா = ரெண்டு பேரும் சேர்ந்து!"

"ஆ...இப்படி ஒரு உலக அதிசயம் நம்ம தமிழ்ச் சினிமாவிலா?"

"ஆமா! ஆமா!"

"அட, என்ன தான் குரு-சிஷ்யன் உறவு ரெண்டு பேருக்கும் இருந்துச்சி-ன்னாலும், இவிங்கள இப்படிச் சேர்த்து வச்சது யாருப்பா?"
Image
"சாட்சாத், நம்ம கண்ணபிரான் தான்!"

"யாரு? கேயாரெஸ் கேயாரெஸ்-ன்னு கூப்புடறாங்களே? அவனா?"

"அடச்சே! அவன் பொடிப் பையன்! படம் வந்தப்போ அவனுக்குப் பத்து வயசு கூட இருக்காது! நான் சொல்லுறது ஒரிஜினல் கண்ணன், பரந்தாமன்!
சண்டை வேணாம்-னு தூது போவாரே? ஆனா, போயி தூண்டிட்டு வந்து சூப்பராச் சண்டை போடுவாரே! அவரே தான்!":)

"அடங் கொக்க மக்கா! கண்ணனா சேர்த்து வச்சாரு? எத வச்சி சொல்லுற நீயி?"

"மெல்லிசை மன்னரு, "குழலூதும் கண்ணனுக்குக் குயில் பாடும் பாட்டு கேக்குதா?"-ன்னு இசை அமைக்க...
இளையராஜா, "பாவன குரு-பவன-புரா"-ன்னு இன்னொரு கண்ணன் பாட்டுக்கு அதே படத்தில் இசை அமைச்சாரு!"

"சூப்பரு! கண்ணன் லீலையே லீலை! மேல தகவலைச் சொல்லு மக்கா!"

"சரி, இதன் பின்னணி என்னான்னு சொல்லுறேன்! மத்த கதையெல்லாம் எம்.எஸ்.வி-யின் சிஷ்யப் பிள்ளையான எங்க ஜிரா வந்து சொல்லுவாரு!"


Imageஇளையராஜாவின் கொடி பறக்க ஆரம்பித்து விட்டது!

வெகு ஜனக் கலைஞர்-னா அது ராஜா தான்! புதுசு புதுசா இசை!
கிராமத்து இசையும் கொடுப்பாரு! அதே சமயத்தில் தமிழ் சினிமா இது வரை பார்த்திராத மெட்டுகளையும் அள்ளித் தருவாரு!

*இளையராஜா வீட்டு இட்லி சட்டியும் இசை அமைக்கும்!
*தோசைத் தட்டும் தோடி பாடும்!
- அப்படி, இப்படி-ன்னு ஒரே புகழ்மாலை தான்!:)

எந்த ஒரு மகோன்னதமான இசையமைப்பாளருக்கும், ஆறுமுகத்தால், முதலில் ஏறுமுகம், பின்னர் இறங்குமுகம்-னு இருக்கும்-ல?
எல்லாமே அவன் திருவிளையாடல் தானே? மெல்லிசை மன்னருக்கு அப்போது இறங்கு முகம்!
அவரால் சூப்பர் ஹிட்களைத் தொடர்ச்சியாகத் தர முடியாத காலகட்டம்! MSV இசை out-of-date என்றெல்லாம் பேசப்பட்ட காலகட்டம்!
Image
Photo Credit: Subha Photo & Ragasudha

ராஜா-ராஜாதி ராஜன் இந்த ராஜா! ராஜா-தூக்காதே வேறு எங்கும் கூஜா!
இப்படி எல்லாம் ஒரு இசை அமைப்பாளரைப் பாடல் வரிகளில் கொஞ்சம் ஓவராகவே கொண்டாடி,
கட்-அவுட் வைத்த கதையைத் தமிழ் சினிமா எப்போதும் கண்டதில்லை!

இத்தனைக்கும் ராஜா, எம்.எஸ்.வி மீது மதிப்பு வைத்திருப்பவர் தான்!
ஆனால் தொழில்-னு வந்துட்டா குருவாவது? சிஷ்யராவது?? என்கிற நிலைமை!

பஞ்சு அருணாச்சலம் மூலமாகக் கச்சேரியைத் துவங்கிய ராஜா..
எம்.எஸ்.வி-யின் ஆஸ்தான இயக்குனர்களை எல்லாம் கூட வலை வீசிப் பிடித்து விட்டார்! ஸ்ரீதர், கே.பாலாஜி என்று பழைய ஆட்களும் கூட கட்சி மாறிய நேரம்!
போதாக்குறைக்கு, எம்.எஸ்.வி சொந்தப் படம் எடுத்து அதனால் பணப் பிரச்சனை!

அப்போது ராஜா, தன் படங்களின் பின்னணி இசைக்கு மட்டும் எம்.எஸ்.வி அவர்களை இசை அமைக்கச் சொல்லி நிலைமையை ஓரளவு சரி செய்ய உதவியதாகச் சொல்லுவார்கள்!
ஆனால் இப்படிச் செய்யப்பட்ட இசையமைப்பு பரவலாக வெளிப்படுத்தப் படவில்லை!:(

* அந்தச் சமயத்தில் வந்த படம் தான் = மெல்லத் திறந்தது கதவு!
* ராஜா-MSV ஒற்றுமைக்காக = மெல்லத் திறந்தது கதவு!



Image

இளையராஜாவும்-எம்.எஸ்.வியும் இணைந்து இசை அமைக்கிறார்கள் என்று பயங்கரமாக விளம்பரப் படுத்தப்பட்டது!
*ஏற்கனவே கிருஷ்ண கானம் Album-இல் = MSV இசையமைப்பில், ராஜா பாடி இருப்பாரு;
*தாய் மூகாம்பிகை படத்திலோ = ராஜா இசையமைப்பில், MSV பாடி இருப்பாரு;

ஆனால், இருவரும் "இசை அமைப்பிலேயே" ஒன்றிணைவது??
= மெல்லத் திறந்தது கதவு!


முதல் பாட்டே கண்ணன் பாட்டு!
குழலூதும் கண்ணனுக்குக் குயில் பாடும் பாட்டு கேட்குதா?

அதுக்குப் பின்னாடியே இன்னொரு கண்ணன் பாட்டு! ஆனா meaning தான் புரியலை!
பாவன குரு-பவன-புரா...

எம்.எஸ்.வி = பாடல்களுக்கு இசை அமைப்பாரு!
பின்னணி-க்கு = இளையராஜா இசை அமைப்பாரு! (opening/interlude)

இப்படி ஒரு Gentleman Agreement போட்டுகிட்டாங்க!
பாடல்கள் அத்தனையும் இனிமை! எல்லாப் பாடல்களும் ஹிட் தான்!
And you have all of them: Susheelamma, Janaki, Chitra, SP Sailaja, Sasirekha:)

* தில் தில் தில் மனதில் - SPB/சுசீலாம்மா
* வா வெண்ணிலா உன்னைத் தானே - SPB/ஜானகி
* ஊரு சனம் தூங்கிருச்சி - ஜானகி
* சக்கர கட்டிக்கு சிக்குற குட்டிக்கு - சசிரேகா & குழுவினர்
* இன்னும் ரெண்டு பாட்டு...யாராச்சும் கொமென்ட்டுல சொல்லுங்க!:)

கண்ணன் பாட்டுல, இன்னிக்கி அந்த ஒற்றுமைப் பாட்டு(க்கள்)!


1) முதலில் MSV இசை, ராஜா பின்னணி!
* குழலூதும் கண்ணனுக்கு - Note the துள்ளல் instrument beats in prelude/ interludes - typical Raja style; whereas humble single beat melody ("chak chak") - throught the song in MSV style:)

குழலூதும் கண்ணனுக்குக், குயில் பாடும் பாட்டு கேட்குதா?
குக்கூ குக்கூ குக்கூ!
என் குரலோடு மச்சான், உங்க குழலோசை போட்டி போடுதா?
குக்கூ குக்கூ குக்கூ!


இலையோடு பூவும், தலையாட்டும் பாரு!
இலையோடு பூவும் காயும், தலையாட்டும் பாரு பாரு!
(குழலூதும்)

மலைக்காத்து வீசுற போது, மல்லிகைப் பூ பாடாதா?
மழைமேகம் கூடுற போது, வண்ண மயில் ஆடாதா?


என் மேனி தேனரும்பு! என் பாட்டு பூங்கரும்பு!!
மச்சான் நான் மெட்டெடுப்பேன்! உன்னைத் தான் கட்டிவைப்பேன்!


சுகமாகத் தாளம் தட்டிப் பாடட்டுமா?
உனக்காச்சு எனக்காச்சு, சரி ஜோடி நாமாச்சு,கேளைய்யா!

(குழலூதும்)
Image
கண்ணா உன் வாலிப நெஞ்சை என் பாட்டு உசுப்புறதா?
கற்கண்டு சக்கரை எல்லாம் இப்பத் தான் கசக்குறதா?


வந்தாச்சு சித்திரை தான்! போயாச்சு நித்திரை தான்!
பூவான பெண்ணைத் தொட்டா, ராவானா ஏங்குது தான்!


மெதுவாகத் தூது சொல்லிப் பாடட்டுமா?
விளக்கேத்தும் பொழுதானா, இளநெஞ்சு படும்பாடு, கேளைய்யா!

(குழலூதும்)

குரல்: சித்ரா
வரிகள்: கங்கை அமரன் (can some one dbl chk?)
இசை: MSV (பாட்டுக்கு), இளையராஜா (பின்னணிக்கு)


இப்போ Role Change!
2) ராஜா இசையமைக்க, MSV பின்னணி!
** பாவன குரு பவன புரா! Same MSV style in the beginning/end, whereas Non conservative style of Raja throughout the lines; Tabla beats, for a carnatic song!


பாவன குரு - பவன புராதி - ஈசம் ஆச்ரயே!

ஜீவன தர சங்காசம், 
கிருஷ்ணம் கோ லோகேசம்!
பாவித நாரத கிரீசம், 

திரி புவனா வனவேசம்!!
(பாவன குரு)

பூஜித விதி புரந்தரம், 
ராஜித முரளீதரம்!
விரஜ லலா (ஆ)னந்த கரம், 

அஜித முதாரம்!! - கிருஷ்ணா

ஸ்மர சத சுபகா (ஆ)காரம், 

நிரவதி கருணா பூரம்!
ராதா வதன-ச கோரம், 

லலிதா சோதரம் பரம்!!
(பாவன குரு)
Image
(இந்தப் பாட்டின் Melody சூப்பரா இருக்குப்பா, Tabla-வுல வாசிப்பு!
பாட்டின் பொருள் யாராச்சும் சொன்னீங்கனா புண்ணியமாப் போகும்! அனுபவிச்சிக் கேட்கலாம்....)

குரல்: சித்ரா
வரிகள்: லலிதா தாசர்
இசை: இளையராஜா (பாட்டுக்கு), MSV (பின்னணிக்கு),

ராகம்: ஹம்சானந்தி
தாளம்: ரூபகம்


படத்தில் மோகன், ராதா & Juvenile Fantasy = "my அமலா"!:)

இசைக் கல்லூரியில் பர்தா போட்டுக் கொண்டு "பாவன குரு"-ன்னு பாடும் போது, பர்தாவுக்குள் அந்தக் கண்கள் சூப்பர் தான்!

என்றாலும்...
படத்திலும், மனத்திலும் எப்போதும் நிக்குறது
அமலா! அமலா! அமலா! :-)
Image

Wednesday, March 28, 2012

குமரன் பிறந்தநாள்! - தமிழில்...அதரம் மதுரம் வதனம் மதுரம்!

நேற்று ((Mar 28)...
பதிவுலக ஆன்மீக சூப்பர் ஸ்டார் என ஒளிர் - குமரன் அண்ணாவின் பிறந்த நாள்!

குமரன், மற்றும் அவர் செல்ல மகளுக்கும்...
...நான்-முருகவன் சார்பாகவும்,
அனைவர் சார்பாகவும்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

இனிய பிறந்தநாளிலே - இனிய பரிசாக - இனியவை எட்டு!



சுத்தாத்வைத மகாகுரு, வல்லபாச்சார்யர் எழுதிய மதுராஷ்டகம் - அதரம் மதுரம்
- அதைத் தமிழ் வடிவமாக்கித் தருகிறேன் = இனியவை எட்டு

எம்.எஸ்.அம்மாவின் குரலில் இங்கே, கேட்டுக் கொண்டே வாசியுங்கள்!
மெட்டு மாறாமல் வருகிறதா என்றும் பார்த்துச் சொல்லவும்; நன்றி!

ஸ்ரீ-ஹரீ-ஓம்

(1) அதரம் மதுரம் வதனம் மதுரம் - நயனம் மதுரம் ஹஸிதம் மதுரம்
ஹ்ருதயம் மதுரம் கமனம் மதுரம் -  மதுராதிபதே ரகிலம் மதுரம்
இதழும் இனிதே! முகமும் இனிதே! -- கண்கள் இனிதே! சிரிப்பும் இனிதே!
இதயம் இனிதே! நடையும் இனிதே! -- மதுரை மைந்தா! எல்லாம் இனிதே!
Image
(2) வசனம் மதுரம் சரிதம் மதுரம் - வஸனம் மதுரம் லலிதம் மதுரம்
சலிதம் மதுரம் ப்ரமிதம் மதுரம் - மதுராதிபதே ரகிலம் மதுரம்
சொல்லும் இனிதே! குணமும் இனிதே! -- உடைகள் இனிதே! உடலும் இனிதே!
இயக்கம் இனிதே! உலவல் இனிதே! -- மதுரை மைந்தா! எல்லாம் இனிதே!
-----------------------
Image
(3) வேணூர் மதுரோ ரேணூர் மதுர:  - பாணிர் மதுர: பாதௌ மதுரௌ
ந்ருத்யம் மதுரம் ஸக்யம் மதுரம் - மதுராதிபதே ரகிலம் மதுரம்
குழலும் இனிதே! கால் தூசி இனிதே! -- கைகள் இனிதே! பாதம் இனிதே!
நடனம் இனிதே! நட்பும் இனிதே! -- மதுரை மைந்தா! எல்லாம் இனிதே!

(4) கீதம் மதுரம் பீதம் மதுரம் - புக்தம் மதுரம் ஸுப்தம் மதுரம்
ரூபம் மதுரம் திலகம் மதுரம் - மதுராதிபதே ரகிலம் மதுரம்
பாடல் இனிதே! பட்டாடை இனிதே! -- உண்ணல் இனிதே! உறக்கம் இனிதே!
உருவம் இனிதே! திலகம் இனிதே! -- மதுரை மைந்தா! எல்லாம் இனிதே!
-----------------------
Image
(5) கரணம் மதுரம் தரணம் மதுரம் - ஹரணம் மதுரம் ஸ்மரணம் மதுரம்
வமிதம் மதுரம் சமிதம் மதுரம் - மதுராதிபதே ரகிலம் மதுரம்
சேட்டை இனிதே! வெற்றி இனிதே! -- கள்ளம் இனிதே! உள்ளம் இனிதே!
எச்சில் இனிதே! வெட்கம் இனிதே! -- மதுரை மைந்தா! எல்லாம் இனிதே!

(6) குஞ்ஜா மதுரா மாலா மதுரா - யமுனா மதுரா வீசீ மதுரா
ஸலிலம் மதுரம் கமலம் மதுரம் - மதுராதிபதே ரகிலம் மதுரம்
மணிகள் இனிதே! மாலை இனிதே! -- யமுனை இனிதே! அலைகள் இனிதே!
தண்ணீர் இனிதே! தாமரை இனிதே! -- மதுரை மைந்தா! எல்லாம் இனிதே!
-----------------------
Image
(7) கோபீ மதுரா லீலா மதுரா - யுக்தம் மதுரம் சிஷ்டம் மதுரம்
த்ருஷ்டம் மதுரம் சிஷ்டம் மதுரம் - மதுராதிபதே ரகிலம் மதுரம்
ஆய்ச்சி இனிதே! ஆட்டம் இனிதே! -- கூடல் இனிதே! குணமும் இனிதே!
பார்வை இனிதே! பாவனை இனிதே! -- மதுரை மைந்தா! எல்லாம் இனிதே!

(8) கோபா மதுரா காவோ மதுரா - யஷ்டிர் மதுரா ஸ்ருஷ்டிர் மதுரா
தலிதம் மதுரம் பலிதம் மதுரம் - மதுராதிபதே ரகிலம் மதுரம்
ஆயர் இனிதே! ஆக்கள் இனிதே! -- செண்டை இனிதே! பிறவி இனிதே!
வீழல் இனிதே! ஆழல் இனிதே! -- மதுரை மைந்தா! எல்லாம் இனிதே!

இதி ஸ்ரீமத் வல்லபாச்சார்ய விரசித மதுராஷ்டகம் சம்பூர்ணம்
இங்ஙனம் வல்லபர் விளம்பிய இனியவை எட்டும் இனிதாய் நிறைவே!
-----------------------
Image

பிற கலைஞர்களின் இசையில்:

Cinema:
*வாணி ஜெயராம் - கன்னடப் படத்தில் (மலைய மாருதா)

Classical:
*விஜய் யேசுதாஸ்
*யேசுதாஸ்

*மும்பை ஜெயஸ்ரீ
*அனுராதா பட்வால்

*Fusion
*குஜராத்தி-பஜன்

Saturday, December 11, 2010

MS ஊஞ்சல் பாட்டு! டோலாயாம் சல டோலாயாம்!

கண்ணன் பாட்டில் இது 197-ஆம் இடுகை!
இன்னும் சில நாளில்...மார்கழியில்...200! :)
மொத்த பேரும், குழுவாக என்ன செய்யலாம்-ன்னு யோசனை சொல்லுங்க!



Image
வழக்கமா, இந்தக் கேஆரெஸ் பய, சினிமாப் பாட்டைத் தான் கண்ணன் பாட்டில் போடுவான்! மீண்டும் கோகிலா படத்தில், கமல் பாடும் போது, "கண்ணா"-ன்னு ஒத்தைச் சொல் வந்துறக் கூடாது! அதையும் கண்ணன் பாட்டில் கொண்டாந்து போடும் அவன், இன்னிக்கி நம்ம திராச ஐயாவைப் பார்த்து திருந்திட்டான்! :)

திராச ஐயா தான், நல்ல மரபிசைப் பாடல்களை, கர்நாடக இசைப் பாடல்களை வலையேற்றுபவர்! அவர் வழியில், இன்னிக்கி கொஞ்சம் போல் திருந்தி...
இதோ எம்.எஸ் அம்மா அவர்கள் பாடிய ஊஞ்சல் பாட்டு ஒன்னைப் பார்க்கலாம்!

எம்.எஸ்-க்கு என்றே சில பாடல்கள் அமைந்து விடும்!
வேறு யார் பாடினாலும், அதிலும் எம்.எஸ் சாயல் தான் இருக்கும்!
அப்படியான பாடல்களில் இது ஒன்று!
Image
திருவேங்கடமுடையானுக்கு என்றே தன்னை அர்ப்பணித்து வாழ்ந்த அன்னமய்யா!
பெருமாள் ஊஞ்சலில் வேகமாக ஆடுவதை,
அப்படியே வார்த்தைகளில் வேகமாக நகர்த்திக் காட்டுகிறார்!

கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் என்ற பாரதியின் வாக்கு...
கூடவே, தமிழில், மெட்டு மாறாமால், தர முயன்றுள்ளேன்!
பாடிப் பார்த்து, பொருளும் இசையும் பொருந்தி வருகிறதா-ன்னு சொல்லுங்க!

ஊஞ்சல் போய் வருவது போலவே, பாடலும் போய்ப் போய் வருகிறது! டோலாயாம் சல டோலாயாம்! ஆடு பொன்னூஞ்சல்!


Image
இங்கே, எம்.எஸ் குரலில் பாடலைக் கேட்டுக் கொண்டே வாசிக்கவும்!

ராகம்: கமாஸ்
தாளம்: ஆதி
குரல்: எம்.எஸ்.சுப்புலட்சுமி
வரி: அன்னமாச்சார்யர்

டோலாயாம் சல டோலாயாம் ஹரே டோலாயாம்
பொன்னூஞ்சல் ஆடு பொன்னூஞ்சல், அரி பொன்னூஞ்சல்

மீன கூர்ம வராக
மிருக பதி அவதார
தானவ அறே குண செளரே
தரணீ தர மரு ஜனக
(டோலாயாம் சல டோலாயாம்)

மீனும் ஆமை கேழலாய்
ஆளரி அவ தாரமாய்
பர...கால குண...வீர
பாரைத் தாங்கும் மாரன் எந்தை
(பொன்னூஞ்சல் ஆடு பொன்னூஞ்சல்)

வாமன ராமா ராமா
வர கிருஷ்ண அவதார
சியாமளாங்க ரங்க ரங்க
சாமஜ வரத முர ஹரண
(டோலாயாம் சல டோலாயாம்)

குறள் பல ராமா ராமா
குன்றம் எடுத்த வா-கண்ணா
கருத்த மேனி பொருத்த ரங்க
ஆனைக்கு அருளி, முரனை முடித்து
(பொன்னூஞ்சல் ஆடு பொன்னூஞ்சல்)

தாருண புத்த கல்கி
தச வித அவதார
ஷீர பாணே கோ சமானே
ஸ்ரீவேங்கட கிரி கூட நிலைய
(டோலாயாம் சல டோலாயாம்)

சீருடை புத்த கல்கீ
ஐந்தும் ஐந்தும் அவதார!
ஐம்-படைகள் ஏந்தும் மால்-திரு
வேங் கடம் தனில் வாழும் பெருமாள்!
(பொன்னூஞ்சல் ஆடு பொன்னூஞ்சல்)


Image
பாட்டை நாதசுரத்தில் கேட்கலீன்னா எப்படி? இதோ
நாதசுரம் - ஷேக் சின்ன மெளலானா

அப்படியே, இதர கலைஞர்களின் குரலில்...
* சுதா ரகுநாதன்
* மும்பை சகோதரிகள்
* சைந்தவி

எல்லாத்துக்கும் மேலா, எம்.எஸ் - B&W Video!
அப்பவே ரொம்ப அழகா இருக்காங்க! :)
ஊஞ்சல் வேகமாப் போவதை, கையால் அசைத்துக் காட்டிச் சிரிக்கிறாங்க! 0:22 இல் பாருங்க!

Friday, July 16, 2010

விடியற்காலை எம்.எஸ்: ஸ்ரீமன் நாராயண! ஸ்ரீமன் நாராயண!

கண்ணன் பாட்டில பதிவிட்டு ரொம்ப நாளாயிரிச்சி போல! முருகனருள் மோகத்திலேயே இருந்தா எப்படி? :) பொறந்த வீட்டையும் கொஞ்சம் பார்க்கணும்-ல்ல? :))Imageஇதோ...மிகவும் பிரபலமான பாட்டு, பிரபலமான பாடகர், பிரபலமான கவிஞர்!
இது ஒரு வைகறைப் பாட்டு! விடியற்காலைப் பாட்டு!
அதுவும் எம்.எஸ்.அம்மா குரலில் கேட்டால்...நள்ளிரவு கேட்டாலும் சிற்றஞ் சிறுகாலே தான்! எனக்கு மிகவும் பிடித்த எளிமையான பாட்டு!

மெட்டு மாறாமல், தமிழிலும் மொழியாக்கி உள்ளேன்!
வாய் விட்டுப் பாடி/படித்துப் பார்த்து, பொருந்தி வருதா-ன்னு சொல்லுங்க!
எங்கே...உரக்கச் சொல்லுங்க பார்ப்போம்...

ஸ்ரீமன் நாராயண சரணெள சரணம் ப்ரபத்யே!
ஸ்ரீமதே நாராயணாய நம:


மேற்சொன்ன த்வய மந்திரத்தை, அன்னமய்யா இசை வடிவில் எழுதி வச்சாப் போலவே இருக்கும் பாட்டு!
பாடல்: ஸ்ரீமன் நாராயண! ஸ்ரீமன் நாராயண!
குரல்: எம்.எஸ்.சுப்புலட்சுமி
வரிகள்: அன்னமாச்சார்யர்
Image




ஸ்ரீமன் நாராயண! ஸ்ரீமன் நாராயண!
ஸ்ரீமன் நாராயண நீ ஸ்ரீபாதமே சரணம்!


திருநாரணன் திரு! திருநாரணன் திரு!
திருநாரணன் திரு! திருவடிகளே சரணம்!


Image
கமலா சதீ, முக கமல, கமல ஹித!
கமல ப்ரியா, கமலேக்ஷனா!
கமலாசன ஹித, கருட கமன ஸ்ரீ!
கமல நாப நீ பத கமலமே சரணம்!

(ஸ்ரீமன் நாராயண)

தாமரை யாள் அவன், தாமரை முகம்-அகம்!
தாமரை வேள், செந் தாமரைக் கண்ணா!
தாமரை யில் உறை, கருடனின் மேல் நிறை
தாமரை உந்தி, உந்தன் மலரடிகளே சரணம்!

(திருநாரணன் திரு)

Imageபரம யோகிஜன பாகதேயஸ்ரீ
பரம புருஷா பராத்பரா!
பர மாத்மா பரமாணு ரூபஸ்ரீ
திருவேங்கடகிரி தேவா சரணம்!
(ஸ்ரீமன் நாராயண)

பரமான அன்பருக்கு வரமான வரதனே
பரமான பரமே, பரம் பொருளே!
பரமானே, பரம அணுவில் அணுவே
திருவேங்கடம் உடையானே சரணம்!

(திருநாரணன் திரு)

திருநாரணன் திரு! திருநாரணன் திரு!
திருநாரணன் திரு! திருவடிகளே சரணம்!

மூலம்: வடமொழி
(தெலுங்கில் அன்னமய்யா நிறைய கவிதைகள் செய்திருந்தாலும், அவரின் வடமொழிக் கீர்த்தனைகளும் மிகவும் ஆழ்ந்தவை! அதில் இது மிகவும் பிரபலமானது)
தலம்: திருமலை-திருப்பதி
ராகம்: பெளளி
தாளம்: ஆதி


இசைக் கருவிகளில்:

நாதசுரம் - MPN சேதுராமன்
வயலின் - குன்னக்குடி
வீணை - காயத்ரி
புல்லாங்குழல்-சிக்கல் சகோதரிகள்

இசையரசி எம்.எஸ் இந்தப் பாடலின் ஆத்மா என்றாலும்...
இதர கலைஞர்களின், அவர்களுக்கே உரிய குரலில்/நடையில்...

எம்.எல்.வசந்தகுமாரி:


சுதா ரகுநாதன்:


நடனம்:


குழந்தை நடனம்:


வீட்டு மாடி நடனம்:


சிறுவன் - ஆதித் மூர்த்தி

Thursday, March 18, 2010

பி.சுசீலா - ஜெயதேவர் அஷ்டபதி - காதலா? காமமா?

பிருந்தாவனம்! யமுனைத் துறை!
புன்னை மரத்து நிழல் கீழே, நினைவென்னும் காதல் மடி மேலே, தலை வைத்து மெல்லியதொரு தூக்கம்! கலங்காது கை கோர்த்து சேரும்...கண்ணோரம் ஆனந்த ஈரம்...

அப்போது, இசையரசி பி.சுசீலாம்மா பாடிக் கொண்டே, தலையைத் தடவிக் கொடுத்தால் எப்படி இருக்கும்?
அந்த உறக்கத்தின் கிறக்கத்தில் உதித்தது தான்.....இந்தப் பதிவு! இப்போது என் துக்கங்கள்-தூக்கங்கள் எல்லாமும் அப்படியே!!



Image
ஜெயதேவர்-ன்னா ஒரு சிலருக்கு தெரிஞ்சிருக்கும்-ன்னு நினைக்கிறேன்! (1200 CE)
அஷ்டபதி-ஜெயதேவர்-ன்னு சொன்னாக்கா, இன்னும் சில பேருக்குத் தெரிஞ்சிருக்கலாம்!
ஒரிஸ்ஸா மாநிலக் கவிஞரான, அவர் எழுதிய காதல் காவியம் தான்.....அஷ்டபதி என்கிற கீத-கோவிந்தம்!

பேரில் என்னமோ கீத கோவிந்தம்-ன்னு "கோவிந்தம்" இருக்கு!
ஆனால் படிக்கறப்போ "வேற மாதிரி" இருக்கே!
இது பக்திக் காவியமா? காதல் காவியமா? காமக் காவியமா? :)

எனக்குத் தெரியாது! எனக்குத் தெரியாது! காதலே காமம் ஆகி, காமமே காதலாகி விட்டால்...எனக்கு எதுவும் தெரியாது! :)

சரி, அது என்ன அஷ்ட-பதி?
கல்யாணம் ஆகும் போது, தீவலம் செய்து, 7 அடி எடுத்து வைப்பதை, சப்த-பதி-ன்னு சொல்லுவாய்ங்க!
இது கல்யாணம் ஆவதற்கும் முன்னாடியே (Pre Marital) என்பதால், ஒரு "அடி" கூடவா? அதான் அஷ்ட-பதியா?? :)

மொத்தம் 12 சர்க்கம், 24 பாடல்கள்!
ஒவ்வொரு பாட்டும் 8 பத்திகள், பதிகள்! அதுவே அஷ்ட பதி!

அஷ்டபதி என்பது சிருங்கார ரசம் சொட்டச் சொட்ட ஒரு நாட்டிய நாடகம்!
புன்னை இலைகளால் ஒரு படுக்கை தயார் செய்யும் கண்ணன்...
அவன் அருகில் வரும் வேளையில், அவனை ஒதுக்கி, கீழே தள்ளிவிடும் ராதை!
கண்ணன் உடம்பிலும் அடி, உள்ளத்திலும் அடியா?? ஹைய்யோ! திடீரென்று, என்னவாயிற்று இந்த ராதைக்கு?
Image

* ராதையின் அகங்காரம், ராதையின் திமிர்,
* ராதையின் கோபம், ராதையின் தாபம்,
* ராதையின் ஊடல், ராதையின் தேடல்,
* ராதையின் சாதல், ராதையின் காதல்,
* ராதையின் பேதை, ராதையின் மேதை,
இவை எல்லாமே நாடகத்தில் போட்டி போட்டுக் கொண்டு நடிக்கின்றன!

அதனால் தான், பின்னாளில்...
கண்ணனின் வாழ்வு கூட்டத்தில் கலக்க, ராதையின் வாழ்வு தனிமையில் கலந்து போனது!
கண்ணன் தனக்கா? உலகத்துக்கா? என்று வந்த போது...
தன் முகம் காட்ட மறுத்தாள்! முகவரியை மறைத்தாள்!

வியாசரும், சுகப் பிரம்மும் கூட, அவளை, அவர்கள் காவியத்தில் எழுதத் திணறி...முடியாமலயே போனது!
இன்றும் கூட, ராதை என்பவள் இருந்தாளா? = மகாபாரதத்திலும் ஸ்ரீமத் பாகவதத்திலும்...தேடினாலும் கிடைக்காது!

அவள் இருந்தாளா? = அவளுக்கும் அவனுக்கும் மட்டுமே தெரியும்! எனக்கும் தெரியும்!
கண்ணனின் சோலையில் அவள் சுகந்த பரிமள வாசத்தை...காண முடியாது! முகர மட்டுமே முடியும்! முகர...முகர...முருகா!

* என் பால் நோக்காயே ஆகிலும்...உன் பற்றல்லால் பற்றில்லேன்!!
அவள் "பரிசுத்தமான காமம்"! = அதுவே "கீத கோவிந்தம்"!!!


திரைப் பாடலைக் கேட்டுக் கொண்டே, பதிவை வாசியுங்க!


அல்லது...கேட்க/தரவிறக்க மட்டும் இதோ!
பதிவின் இறுதியில் இதர கலைஞர்களின் குரலில், இதே பாடல்!



வடமொழியில் உள்ள வரிகளை, கிட்டத்தட்ட அதே மெட்டில் தமிழாக்கி உள்ளேன்!
தமிழில் சரியாப் பொருந்தி வருதா?-ன்னும் பார்த்துச் சொல்லுங்க!


படம்: தெனாலி ராமகிருஷ்ணா (தெலுங்கு)
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் - பி.ராமமூர்த்தி
(மயக்கும்) குரல்: சுசீலாம்மா
கலைஞர்கள்: ஜமுனா, பானுமதி, என்.டி.ஆர், நாகேஸ்வர ராவ்

சந்தன சர்ச்சித நீல கலேவர
பீத வசன வனமாலி
கேலி சலத் மணி குண்டல மண்டித
கண்ட யுக ஸ்மித ஷாலி
ஹரி ரிஹ முக்த வதூ நிகரே
விலாசினி விலசதி கேலிபரே

சந்தனம் சிந்திடு்ம் நீல மேனி தனில்
பொன்பட்(டு) உடை வனமாலை!
தந்தன தந்தன குண்டலம் ஆடிட
மோகனப் புன்னகை லீலை!!
கண்ணனின் கன்னியர் நாணமும் ஆசையும்
கண்டு கொண்டே விளை யாடினரே!
Image
காபி விலாச விலோல விலோசன
கேலன ஜனித மனோஜம்
த்யாயதி முக்த வதூ அதிகம் - மது
சூதன வதன சரோஜம்!
(ஹரி ரிஹ...கேலி பரே)

அவளொரு தாரகை, அவள்விழி முந்திட,
அவன் மனம் முந்திய நேரம்!
அவன்முகத் தாமரை, அவள்முகம் விரிந்திட,
மதுசூ தனன் இதழ் ஈரம்!
Image
ஸ்லிஷ்யதி காமபி சும்பதி காமபி
காமபி ரம்யதி ராமம்
பஷ்யதி சஸ்மித சாருதராம் அப
ராமனு கச்சதி வாமம்!
(ஹரி ரிஹ...கேலி பரே)

துழவினள் இதழை, துடித்தனள் உடலை,
துவண்டனள் அவனிடம் பேதை!
நகைத்தனன் அவனும், பகைத்தனள் அவளும்,
இருப்பினும் கூடினள் கோதை!
(கண்ணனின் கன்னியர்...விளையா டினரே)

ஸ்ரீஜய தேவ பணிதம நேமம்
அத்புத கேசவ கேளி ரகஸ்யம்
பிருந்தாவன விபினே லலிதம் வித
நோது சுபாமி யஷாஸ்யம்!

இதுஜெய தேவர் அருளிய தாஸ்யம்
பிருந்தா வன விளை யாடல் ரகஸ்யம்
அற்புத மோகன கீத கோவிந்தம்!
அருளிடும் அவன்திரு் பாதர விந்தம்!!

ராகம்: காமவர்த்தினி
தாளம்: ஆதி
மொழி: வடமொழி
வரிகள்: ஜயதேவர்
காவியம்: அஷ்டபதி
Image


சுசீலாம்மா தனியாகப் பாடுவது: (Dont miss the veeNai interlude at the beginning)


சுசீலாம்மாவின் முன்பு, பூஜா என்ற பெண் முயற்சி செய்கிறார்!


கர்நாடக இசையில்:
* Priya Sisters

சற்றே மெல்லிசையில்:
* உன்னி கிருஷ்ணன்

பரதேசி என்னும் தெலுங்குப் படத்தில்:
* மனோ,சங்கீதா,சுபா (Just opening lines for a cinema song)

ஒரிய மொழி இசையில்:
* In Oriya Style, Prafulla Mohanty & Bhubaneshwari Mishra (The 1st one min is intro)
* Chorus, Nirmala Mishra & Rakhal Mohanty

சுசீலாம்மாவை நினைவிருத்தி...தமிழில் யாரேனும் எனக்குப் பாடித் தருகிறீர்களா?
உறக்கத்தின் கிறக்கத்தில் உறங்கச் செல்கிறேன்.....சிற்றஞ் சிறுகாலே 4:45!

Image


குறிப்பு:
முற்றிலும் தமிழ்ப் பாட்டான கண்ணன் பாட்டிலே,
* கன்னடம் - கிருஷ்ணா நீ பேகனே,
* மலையாளம் - வழிகாட்டுக வழிகாட்டுக,
* தெலுங்கு - ஷீராப்தி கன்யககு,
* செளராஷ்டிரம் - பகவத் நமமூஸ்
* வடமொழி் - பாவன குரு/அமர ஜீவிதம்/அஷ்டபதி,
* இந்தி் - பஸோ மொரே...மேம் நந்தலாலா
* ஆங்கிலம் - The Child in Us (Enigma)
என்பன போன்றவை, எப்போதாவது ஒன்னு ரெண்டு வரும்!

Thursday, October 22, 2009

ப்ரஸன்ன வதனாம்...!

Image

வானம் கழுவியது போல் விரிந்திருந்தது. கீழ்த் திசையின் முடுக்குகளில் இருந்து வெண்ணொளிக் கீற்றுகள் விசிறியடிக்கத் தொடங்கின. நீரலைகள் நிரம்பித் தள்ளாடும் பெரும் ஒரு நீளப் புடவையாய் மினுக்கியது யமுனா நதி.அதன் மேனியெங்கும் விடியல் இன்னும் பூக்கத் தொடங்கியிராத விண்ணின் நீலக் கரைசல் பிம்பங்கள் மிதந்தன. நிலவொன்று தனியே தன் பாட்டுக்கு ஊஞ்சலாய்த் தொங்கியது. பின்னும், நிரம்பிய நட்சத்திரங்கள் மினுக்கிக் கொண்டே இருந்த காற்றில் குளிர் கலந்திருந்தது.

மரங்களின், கிளைகளின், இலைகளின், நரம்புகளின் மேல் இரவு தடவிக் கொண்டிருந்த தாலாட்டின் மயக்கத்தில் உறங்கிக் கிடந்த பனிப் படலங்கள் சோம்பல் முறித்தன. விளிம்புகளில் நிறைந்திருந்த ஈரங்கள் சுருண்டு, உருண்டு ஒன்று சேர்ந்து, ஒற்றைத் துளியாகி, சூரியனின் பெரும் உறிஞ்சலுக்கு ஏங்கத் தொடங்கின.

சின்னச் சின்னக் குருவிகளும், பறவைகளும், புள்ளினங்களும் பெரும் உற்சாகத்தோடு வாரித் தெறித்த அரிசிமணிகளாய் வானில் ஏகிச் சீழ்க்கையடித்துப் பறந்தன. பனித்துளி சுமக்கும் பூக்களின் அடியில் ஒட்டியிருந்த பூச்சிகள் 'கீச்சு..கீச்சென' கூறிக் கொண்டே சுற்றத் தொடங்கின. எறும்புகள் தமக்குள் ஏதோ சொல்லிக் கொண்டே வரிசை தவறாமல் எங்கோ விரைந்தன. புறாக்கள் தத்தம் சிம்மாசன இறக்கைகளை விரித்து, அலகால் விட்டு விட்டுக் கோதின. 'ட்ரூச்சு...ட்ரூச்சு..' என எழுப்பிக் கொண்டு மைனாக்கள் நதி மேல் பறந்தன. காக்கைகள் மெல்ல குதித்து, நடந்து, கரையோர அலைகளில் தலை முழுக்கிச் சிலிர்த்தன.

துளிக் கண்கள் திறந்து பார்த்த கூட்டிலிருந்த குஞ்சுகள், இன்னும் தாயின் மென் சூட்டுக்குள் பதுங்கிக் கொண்டன. தனித்த குயில் மட்டும் தன் கண்ணாடிக் குரலில் மெதுவாகக் கூவத் துவங்கியதும், கூடவே மற்றொரு மதுரக் குழல் இசையும் சேர்ந்திசைக்கத் தொடங்கியது.

அந்த சுகந்த குழல் நாதம் எழும்பிய புல்லாங்குழல் பொன்னால் செய்யப்பட்டிருந்தது. அதன் ஒவ்வொரு துளையின் கீழும் ஒரு முத்துப் பரல் ஆடியது. அதன் முனையில் ஒரு வைரமாலை பூட்டப்பட்டிருந்தது. அதனைத் தடவித் தடவி மென்மையான பூவிசை கொடுத்த விரல்கள் யாருடையவை..? அந்த விரல்கள் விளைந்திருந்த கைகளில் தங்கச் சாந்தைப் பூசியது யார்..? அந்த விரல்களின் ஒவ்வொரு கோடுகளும் பதிந்த பின் குழல் பொன்னானதா இல்லை குழலின் குரலைத் தடவி அவன் உள்ளங்கைகள் மின்னுகின்றனவா..? யாரவன்..?

முதலில் ஒரு மயில் இறகுக் கொத்து தெரிகின்றது. அதன் நீலக் கண் ஏன் இத்தனை உல்லாசமாய்க் காற்றில் ஆடுகின்றது..? அதன் ஒவ்வொரு பிசிறுகளும் அத்தனை தன்மையாய் தன் சின்னஞ்சிறு இழைகளும் குற்குறுக்க, எத்தனை கம்பீரமாய் அமர்ந்திருக்கின்றது. பன்னிரு கை இறைவன் ஏறும் மயில் ஒன்று தன் பசுந்தோகை விரித்தாடி பரிசளித்தது போல் அல்லவா இருக்கின்றது..? அது தன் ஒற்றைக் காலால் நிற்கின்ற மகுடம் மட்டும் என்னவாம்..?

மரகதமும், மஞ்சள் பொன் வண்ணமும், செம்பவளமும், ரூபமும், இடையில் பாயும் வெள்ளி நரம்புகளும், தொட்டுத் தொட்டுக் கோர்த்த மணிமாலைகளும் கொண்ட இந்த க்ரீடம், இரவிலும் ஜ்வலிக்கும் சந்திரகாந்தக் கல்லால் செய்யப்பட்டதா..?

இந்த சிகை அலங்காரம் தான் எத்தகையது..? பிரபஞ்சத்தின் ஒளி புக முடியாத ஆழ்ந்த கரு மடிப்புகள் போல் அல்லவா சுருண்டிருக்கின்றன..?

இந்த இரு செவி அழகைத் தான் என்னவென்று சொல்வேன்..? மழை வந்து முடிந்த பின் மலை மடிப்புகளின் எல்லாம் ஏதோ புத்துணர்ச்சித் துகள்கள் படர்ந்திருக்குமே...! அது போல் அல்லவா குளிர்ந்திருக்கின்றன. அந்த தோடுகள்...!! அவை செய்த பாக்கியம் தான் என்ன..! இந்த காந்த இசையைக் கேட்பதற்கேற்ப ஆடி ஆடி மயக்கம் கொண்டு கிளர்கின்றன அல்லவா..?

இது என்ன...!! இரு பெரும் களிறுகள் மதர்த்துப் போய் ஒன்றையொன்று எதிர்த்துக் கிளர்ந்து நிற்கின்றனவே..! ஓ..!! அவை இவன் புருவங்களா..!!

காலையில் கதிரவன் வரும் முன் வெள்ளிக் கரங்கள் திசையெங்கும் பாயும். அது போல் இவன் இமைகளில் துளித் துளி முடிக் குட்டிகள் முளைத்திருக்கின்றனவே..!! மேலும், கீழும் இமைகள் ஒன்றையொன்று கவ்வும் போது, அந்த கண்களை அல்லவா மறைத்து விடுகின்றன.!

கண்கள்..!! அவன் கண்கள்...!!!

கட்டித் தேனை கெட்டி செய்து ஒட்டி வைத்து செய்தவையோ..? இல்லை, மொட்டு வைத்த மொத்தப் பூக்களையும் கொட்டி வைத்து நெய்தவையோ..? இல்லை, எட்டி நிற்கும் பட்டுப் பூச்சிகளை நட்டு வைத்து நார் எடுத்துப் பெய்தவையோ..? கன்னல் கரும்பு கொய்து, மின்னல் வெப்பம் பாய்ச்சி, முன்னம் செய்த மதுரசமோ..? இல்லை, பன்னீர்த் துளி கரைத்து, தாழம்பூ நறுக்கி, சுகந்தம் பரவிய பரவசமோ..?

வெண்ணெய் பூசிய கன்னங்களோ அவை இல்லை, கோபியர் கொடுத்த முத்தங்களால் கனிந்த அன்னம் கள்ளோ..?

அந்த நாசியை ஏது சொல்குவேன்..?

செவ்விதழ்களை என்ன சொல்வேன்..? அந்தி மாலை நிறம் என்றா..? ஆதவன் தெறிக்கும் சுவை என்றா..? அழகு தளும்பித் தளும்பி உருக்கும் அதரங்களை என்ன சொல்வேன்..?



prasanna vadanaaM saubhaagyadaaM bhaagyadaaM
hastaabhyaaM abhayapradaaM maNigaNair-
naanaavidhair-bhuushhitaaM

(who is of smiling face, bestower of all fortunes,
whose hands are ready to rescue anyone from fear,
who is adorned by various ornaments with precious stones)

Puer natus est nobis,
et filius datus est nobis:
cujus emperium super humerum...

For to us a child is born,
to us a son is given:
and the government will be upon his shoulder..
Some day you came
And I knew you were the one
You were the rain, you were the sun
But I needed both, cause I needed you
You were the one
I was dreaming of all my life
When it is dark you are my light
But don't forget
Who's always our guide
It is the child in us

*

ப்ரசன்ன வதனாம் செளபாக்யதாம் பாக்யதாம்
ஹஸ்தாப்யாம் அபயப்ரதாம் மணிகநைர்
நானாவிதைர் பூஷிதாம்

(புன்னகைக்கின்ற முகம் யாருடையதோ,
யார் அதிர்ஷ்டத்தை வாரி வழங்குபவரோ,
யாருடைய கரங்கள் எந்த பயத்திலிருந்தும்
நம்மைக் காக்கத் தயாராக இருப்பதுவோ,
யார் உயர்ந்த ஆபரணங்களை அணிந்தவரோ...)

நமக்கு ஒரு குழந்தை பிறந்தான்;
மகனாக கொடுக்கப்பட்டான்.
சாம்ராஜ்யம் அவன் தோள்களில் கொடுக்கப்படும்.

ஒரு நாள் நீ வந்தாய்.
நீதான் அவன் என்று அறிந்தேன்.
மழையும் நீயே! மாகதிரும் நீயே!
எனக்கு இரண்டும் வேண்டும்,
ஏனெனில் எனக்கு நீ வேண்டும்.

நீதான் அவன்.

என் வாழ்நாள் முழுதும்
கனா கண்டு கொண்டிருந்தேன்.
இருளாக இருக்கும் போது,
நீயே என் வெளிச்சமாக வருவாய்.

ஆனால், மறந்து விடாதே!
நம் வழிகாட்டி எப்போதும் யாரெனில்
நமக்குள்ளிருக்கும் குழந்தையே..!!

***

ப்ரஸன்ன வதனாம் - எந்தப் பாடலில் வரும் வரி என்று நினைவுக்கு வந்து விட்டதா..? :)

***

ஆல்பம் :: எனிக்மா.
பாடல் :: The Child in Us(நமக்குள்ளிருக்கும் குழந்தை.)
இசை :: Michael Cretu

Thursday, August 13, 2009

Rock இசையில்....கிருஷ்ணா முகுந்தா முராரே!

கிருஷ்ணா முகுந்தா முராரே! - கந்தா கடம்பா கதிர்வேலா-ன்னு மாத்திப் பாடி கலாட்டா பண்ணிய கல்லூரிக் காலங்கள் எல்லாம் உண்டு! தேவா கூட இப்படி மாத்திப் பாடி மண்ணாங்கட்டித்தனமா ஒரு பாட்டு போட்டிருக்காரு! :)

MK தியாகராஜ பாகவதர்-ன்னாலே, அலறி அடிச்சிக்கிட்டு ஓடும் இளைய தலைமுறை கூட அவரின் ஒரே ஒரு பாட்டை மட்டும் விரும்பிக் கேட்கும்! கும்மியும் அடிக்கும்! :)
அதை ரீ-மிக்ஸ் எல்லாம் பண்ணாம, கொஞ்சம் Rock இசையில் கிண்டலாப் போட்டா? Rock-முத்து-Rocku! கண்ணா Rock-கொடியைச் சூட்டு :)
Image
கண்ணன் பிறந்த நாள், இரவுப் பதிவுகளின் தொடர்ச்சியாக, இன்று கண்ணன் பாட்டு வலைப்பூவில்.....
The Ever Green கிருஷ்ணா முகுந்தா முராரே! = பாடலுக்கு இசை: ஜிரா! :))

அட நம்ம பதிவர் ஜிரா இல்லீங்க! இவரு வேற ஜிரா! ஜி.ராமநாதன்! :))
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கண்ணா! Happy Birthday!
ஊரு ஃபுல்லா Swine Flu ஏவி விட்டிருக்கான் கம்சன்! பார்த்து! ஜாக்கிரதையா இரு! தண்ணி காய்ச்சிக் குடி! முகமூடி போட்டுக்கிட்டு புல்லாங்குழல் வாசி! :)
Image



நம்ம துளசி டீச்சருக்குப் புடிச்ச பாட்டாம்-ல?
மொதல்ல ராக் மீஜிக்-ல கேட்டுக்கிட்டே பதிவைப் படிங்க! :)
KrishnaMukundaMura...

Image

1944-இல் வந்த படம் ஹரிதாஸ்! ப்ளாக் & வொயிட் அலர்ஜி இல்லாதவங்க, அந்தச் சூப்பர் ஹிட் படத்தை இன்னிக்கும் பார்க்கலாம்! :)
அதிலும் தேவதாசியா நடக்கும் டி.ஆர்.ராஜகுமாரி அவர்களின் வில்லித்தனமான ரோலுக்காகவே பார்க்கலாம்! நீலாம்பரி ரம்யா கிருஷ்ணன் எல்லாம் பிச்சை வாங்கணும்! :)

அப்போது வந்த படங்கள் எல்லாம் நாலு மணி நேரம் ஓடும்! ஆனா அப்பவே ஹரிதாஸ் பண்ணுச்சி புரட்சி! ரெண்டே மணி நேரம் தான்! நம்ப முடியல-ல்ல? ஆனா ரெண்டே மணி நேரத்தில் மொத்தம் 18 பாட்டு! :))))) ஆனா படம் செம ஹிட்டு! ரெண்டு தீபாவளி வரைக்கும் படம் ஓடிச்சி!

புராணப் படமாவும் இல்லாம, பக்திப் படமாவும் இல்லாம, ஒரு சமூகப் படமா எடுத்திருக்காங்க!
Image
ஓவராப் பெண்ணாசை வீக்னஸ் உள்ள வாலிபன், அதே சமயம் வாய்த் துடுக்கும் எக்கச்சக்கம்! அவன் எப்படியெல்லாம் சிக்கல்-ல மாட்டிப்பான்? ஆண்-பெண் உறவுகளை வெளிப்படையாப் பேசத் தயங்கிய அந்தக் காலத்தில் வந்த நல்ல சமூகப் படம்!

ஒரு தேவதாசியின் மாயையில் விழுந்த ஹரிதாஸ், சொத்தை இழந்து, மனைவியை இழந்து, ஆனாலும் வயசான அம்மா அப்பாவை முதியோர் இல்லத்தில் வைக்காம, தானே எப்படி வச்சிக் காப்பாத்தறான் என்பது தான் கதை!

முதல் பாதி அருணகிரிநாதரின் இளவயது வீக்னெஸ்களைப் போல் சொல்லி, இரண்டாம் பாதியில் பாண்டுரங்கன் கதையில் வருவது போன்ற சில காட்சிகள்! பெற்றோருக்காக கண்ணனையே செங்கல் வீசி உட்கார வைச்ச புண்டரீகன் கதை போல முடியும்!



Image


கேட்க மட்டுமான ஒலிச்சுட்டி!
(பாடலின் ஓப்பனிங் ம்யூசிக்கைக் கட்டாயம் கேளுங்க - அருமையான புல்லாங்குழல்!)

கிருஷ்ணா முகுந்தா முராரே - ஜெய
கிருஷ்ணா முகுந்தா முராரே - ஜெய
(கிருஷ்ணா முகுந்தா முராரே)

கருணா சாகர கமலா நாயக
கருணா சாகர கமலா நாயக
கனகாம்பர தாரி கோபாலா

(கிருஷ்ணா முகுந்தா முராரே)
(கருணையின் கடலே, திருமகள் தலைவா - பொன் ஆடை சூடி, கோபாலா)

காளிய மர்த்தன கம்சனி தூஷண
காளிய மர்த்தன கம்சனி தூஷண
கமலாதள நயனா கோபாலா

(கிருஷ்ணா முகுந்தா முராரே)
(காளிங்க ஆட்டம், கம்சனின் ஓட்டம் - தாமரை தளக் கண்ணா, கோபாலா)

குடில குண்டலம் குவலய தள நீலம்
மதுர முரளீர் அவ லோலம்
கோடி மதன லாவண்யம்
கோபி புண்யம் பஜாமி கோபாலம்

(வளைந்த காதணி, குவளையின் நீலம்
இனிய குழலோ மயக்கும் நாதம்
கோடி மன்மத அழகு மோகம்
கோபியர் வரமே, பஜனை செய்வோம் கோபாலம்)

கோபி ஜன மனமோகன வியாபக
கோபி ஜன மனமோகன வியாபக
கோபி ஜன மனமோகன வியாபக
குவலய தள நீலா கோபாலா...
குவலய தள நீலா கோபாலா...
குவலய தள நீலா கோபாலா...

(கிருஷ்ணா முகுந்தா முராரே)
(கோபியர் மனத்தின் மோகனன் நீயே!
குவளை நிறக் கண்ணா - கோபாலா)

குரல்: எம்.கே.டி (தியாகராஜ பாகவதர்)
இசை: ஜி.ராமநாதன்
வரிகள்: பாபநாசம் சிவன்
படம்: ஹரிதாஸ் (1944) - 768 நாட்கள் ஓடியது.
ராகம்: நவ்ரோஜ்


பாட்டு-ல தமிழ்ச் சொற்கள் இல்லீன்னாக் கூட, இந்தப் பாடல் ஒரு பெரிய ஹிட் என்பதால் இங்கிட்டு கொடுத்தேன்! ஆனால் இதை எழுதிய பாபநாசம் சிவன் அவர்கள் சிறந்த தமிழ் மேதை!

தமிழிசைப் பாடல்கள் செய்து கொடுத்து, தமிழ்த் தியாகராஜர் என்ற சிறப்பு பெற்ற தமிழ்க் கவிஞர்! அவரு சினிமாவில் பாப்புலர் ட்யூனுக்கும் என்ன அருமையா பாடல் பண்ணிக் கொடுத்திருக்கார் பாருங்க! அதுவும் நவ்ரோஜ் ராகத்துல!

இதைக் குத்துப்பாட்டு-ன்னு கூட ஒரு வகையில் சொல்லலாம்!
இந்தப் பாட்டு வந்த காலத்தில், குத்துப்பாட்டுக்கு இலக்கணம் கூட இருந்திருக்காது! ஆனா குத்துக்கு உரிய அதே துள்ளல், ஸ்பீடு, ஆட்டம்-னு எல்லா இலக்கணமும் இந்தப் பாட்டுக்கும் இருக்கு! அதான் Rock Version-ல கேட்டீங்க-ல்ல? மயங்காத மனமும் உண்டோ?
Image
Dandiya, Garba, கோலாட்டத்துக்கு மட்டும் இந்தப் பாட்டை வச்சாக்கா எப்படி இருக்கும்?...ஆகா! ஆடிப் பாருங்க! ஜெய கிருஷ்ணா முகுந்தா முராரே!

Tuesday, March 10, 2009

கோவிந்தா ஹரி கோவிந்தா வேங்கடரமணா கோவிந்தா



ஏடு கொண்டல வாடா...வேங்கட ரமணா...கோவிந்தா கோவிந்தா....

ஸ்ரீ நிவாசா கோவிந்தா
ஸ்ரீ வேங்கடேசா கோவிந்தா
பக்த வத்சல கோவிந்தா
பாகவத ப்ரிய கோவிந்தா
(கோவிந்தா ஹரி கோவிந்தா...வேங்கடரமணா கோவிந்தா)

நித்ய நிர்மல கோவிந்தா
நீலமேக சியாமா கோவிந்தா
புராண புருஷ கோவிந்தா
புண்டரீகாட்சா கோவிந்தா
(கோவிந்தா ஹரி கோவிந்தா...வேங்கடரமணா கோவிந்தா)

நந்த நந்தன கோவிந்தா
நவநீத சோரா கோவிந்தா
பசுபாலக ஸ்ரீ கோவிந்தா
(கோவிந்தா ஹரி கோவிந்தா...வேங்கடரமணா கோவிந்தா)

துஷ்ட சம்ஹாரா கோவிந்தா
துரித நிவாரண கோவிந்தா
சிஷ்ட பரி பாலக கோவிந்தா
கஷ்ட நிவாரண கோவிந்தா
(கோவிந்தா ஹரி கோவிந்தா...வேங்கடரமணா கோவிந்தா)

வஜ்ர மகுட தாரா கோவிந்தா
வராக மூர்த்தி கோவிந்தா
கோபி ஜன லோல கோவிந்தா
கோவர்த்தன உத்தர கோவிந்தா
(கோவிந்தா ஹரி கோவிந்தா...வேங்கடரமணா கோவிந்தா)

தசரத நந்தன கோவிந்தா
தசமுக மர்த்தன கோவிந்தா
பட்சி வாகன கோவிந்தா
பாண்டவ ப்ரியா கோவிந்தா
(கோவிந்தா ஹரி கோவிந்தா...வேங்கடரமணா கோவிந்தா)

மச்ச கூர்ம கோவிந்தா
மதுசூதன ஹரி கோவிந்தா
வராக நரசிம்ம கோவிந்தா
வாமன பரசுராம கோவிந்தா
(கோவிந்தா ஹரி கோவிந்தா...வேங்கடரமணா கோவிந்தா)

பலராமா அனுஜ கோவிந்தா
பெளத்த கல்கி தர கோவிந்தா
வேணுகான ப்ரியா கோவிந்தா
வேங்கட ரமணா கோவிந்தா
(கோவிந்தா ஹரி கோவிந்தா...வேங்கடரமணா கோவிந்தா)

சீதா நாயக கோவிந்தா
ஸ்ரீதா பரி பாலக கோவிந்தா
தரித்ர ஜன போஷக கோவிந்தா
தர்ம சம்ஸ்தாபக கோவிந்தா
(கோவிந்தா ஹரி கோவிந்தா...வேங்கடரமணா கோவிந்தா)

அனாத ரட்சக கோவிந்தா
ஆபத் பாந்தவ கோவிந்தா
சரணாகத வத்சல கோவிந்தா
கருணா சாகர கோவிந்தா
(கோவிந்தா ஹரி கோவிந்தா...வேங்கடரமணா கோவிந்தா)

கமலா தளாக்ஷ கோவிந்தா
கமிதா பலதாத கோவிந்தா
பாப விநாசக கோவிந்தா
பாஹி முராரே கோவிந்தா
(கோவிந்தா ஹரி கோவிந்தா...வேங்கடரமணா கோவிந்தா)

ஸ்ரீ முத்ராங்கித கோவிந்தா
ஸ்ரீ வத்சாங்கித கோவிந்தா
தரணீ நாயக கோவிந்தா
தினகர தேஜா கோவிந்தா
(கோவிந்தா ஹரி கோவிந்தா...வேங்கடரமணா கோவிந்தா)

பத்மாவதிப் ப்ரிய கோவிந்தா
ப்ரசன்ன மூர்த்தி கோவிந்தா
அபய ஹஸ்த ப்ரதர்சன கோவிந்தா
(கோவிந்தா ஹரி கோவிந்தா...வேங்கடரமணா கோவிந்தா)

சங்க சக்ர தர கோவிந்தா
சாரங்க கதா தர கோவிந்தா
விரஜா தீரஸ்த கோவிந்தா
விரோதி மர்த்தன கோவிந்தா
(கோவிந்தா ஹரி கோவிந்தா...வேங்கடரமணா கோவிந்தா)

சகஸ்ர நாமா கோவிந்தா
சரசிஜ நயனா கோவிந்தா
லட்சுமி வல்லப கோவிந்தா
லட்சுமணக்ரஜா கோவிந்தா
(கோவிந்தா ஹரி கோவிந்தா...வேங்கடரமணா கோவிந்தா)

கஸ்தூரி திலகா கோவிந்தா
காஞ்சனா அம்பரதர கோவிந்தா
கருட வாகனா கோவிந்தா
கான லோலா கோவிந்தா
(கோவிந்தா ஹரி கோவிந்தா...வேங்கடரமணா கோவிந்தா)

வானர சேவித கோவிந்தா
வாராதி பந்தன கோவிந்தா
ஏக சொருபா கோவிந்தா
சப்த கிரீசா கோவிந்தா
(கோவிந்தா ஹரி கோவிந்தா...வேங்கடரமணா கோவிந்தா)

ஸ்ரீ ராம கிருஷ்ணா கோவிந்தா
ரகுகுல நந்தன கோவிந்தா
ப்ரத்யட்ச தேவா கோவிந்தா
பரம தயாகர கோவிந்தா
(கோவிந்தா ஹரி கோவிந்தா...வேங்கடரமணா கோவிந்தா)

வஜ்ர கவச தர கோவிந்தா
வைபவ மூர்த்தி கோவிந்தா
ரத்ன கிரீட கோவிந்தா
வசுதேவ தனயா கோவிந்தா
(கோவிந்தா ஹரி கோவிந்தா...வேங்கடரமணா கோவிந்தா)

பரம்மாண்ட ரூபா கோவிந்தா
பக்த ரட்சக கோவிந்தா
நித்ய கல்யாண கோவிந்தா
நீரஜ நாபா கோவிந்தா
(கோவிந்தா ஹரி கோவிந்தா...வேங்கடரமணா கோவிந்தா)

ஆனந்த ரூபா கோவிந்தா
ஆத்யந்த தரகித கோவிந்தா
இக பர தயகா கோவிந்தா
இபராஜ ரட்சகா கோவிந்தா
(கோவிந்தா ஹரி கோவிந்தா...வேங்கடரமணா கோவிந்தா)

சேஷ சாயினே கோவிந்தா
சேஷாத்ரி நிலையா கோவிந்தா
ஸ்ரீ நிவாசா கோவிந்தா
ஸ்ரீ வேங்கடேசா கோவிந்தா
(கோவிந்தா ஹரி கோவிந்தா...வேங்கடரமணா கோவிந்தா)

Wednesday, January 07, 2009

அமரஜீவிதம் சுவாமி அமுதவாசகம்

ஓம் ஓம் ஓம் ஓம்

அமரஜீவிதம் சுவாமி அமுதவாசகம்
பதிதபாவனம் சுவாமி பக்தசாதகம்
(அமரஜீவிதம்)

முரளிமோஹனம் சுவாமி அசுரமர்த்தனம்
கீதபோதகம் ஸ்ரீ கிருஷ்ணமந்திரம்
(அமரஜீவிதம்)

நளினதைவதம் சுவாமி மதனரூபகம்
நாகநர்த்தனம் சுவாமி மானவஸ்திரம்
பஞ்சசேவகம் சுவாமி பாஞ்சசன்னியம்
கீதபோதகம் ஸ்ரீ கிருஷ்ணமந்திரம்
(அமரஜீவிதம்)

சந்த்யபங்கஜம் சுவாமி அம்யபுஷ்பகம்
ஸர்வரக்ஷகம் சுவாமி தர்மதத்துவம்
ராகபந்தகம் சுவாமி ராசலீலகம்
கீதபோதகம் ஸ்ரீ கிருஷ்ணமந்திரம்
(அமரஜீவிதம்)




அகில உலக ஆன்மிக சுப்ரீம் ஸ்டார் நம்மை உடையவர் இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் நவீன உடையவர் நண்பர் இரவிசங்கரோட கட்டளைப்படி இந்தப் பாடலை வைகுண்ட ஏகாதசித் திருநாளாகிய இன்று இங்கே இட்டுவிட்டேன். பாடலின் பொருள் முழுவதுமாகப் புரியவில்லை. அதனால் எழுத்துப்பிழைகளும் சொற்பிழைகளும் இருக்கலாம்; அப்படித் தென்பட்டால் திருத்துங்கள். நானும் திருந்தி இடுகையிலும் திருத்திவிடுகிறேன்.

என்றும் அழியாத, புகழில் குறைவு படாத வாழ்க்கையைக் கொண்டவன் அமரஜீவிதன். ஆசை, வெறுப்பு, கொடையின்மை, மயக்கம், கருவம், பொறாமை போன்ற குணங்களால் இறந்தவர் போலிருப்பவர்களையும் உயிர்ப்பிக்கும் வாய்மொழிகளைக் கொண்டவன் அமுதவாசகன். இவ்வகைக் குணங்களால் ஈனத்தன்மை அடைந்தவர்களைப் புனிதமாக்குபவன் பதிதபாவனன். அவன் மேல் அன்பு வைத்தவர்களுக்கு உதவி செய்பவன் பக்தசாதகன்.

வேணுகானம் என்னும் புல்லாங்குழலிசையால் மயக்குபவன் முரளிமோஹனன். அசுரத்தன்மைகளை அடக்கி ஒடுக்குபவன் அசுரமர்த்தனன். கீதையெனும் பாடலைப் போதித்தவன் கீதபோதகன். அவனுடைய திருநாமம் கிருஷ்ண என்னும் மந்திரம்.

மென்மையானவன் நளின தைவதன். மன்மதனைப் போன்ற அழகு உருவம் கொண்டவன் மதனரூபகன். காளிங்கன் என்னும் நாகத்தின் மேல் நடனமாடியவன் நாகநர்த்தனன். கோவிந்தா என்று கூவியழைத்தவளுக்கு அவள் மானம் காக்கத் துணிகளைத் தந்தவன் மானவஸ்திரன். பாண்டவர்கள் என்னும் ஐவரால் தொழப்பட்டவன் பஞ்சசேவகன். பஞ்சஜனன் என்ற சங்கு வடிவ அசுரனை வென்று அவனைத் தன் திருக்கர்த்தில் தாங்கியவன் பாஞ்சசன்னியன்.

எல்லாரையும் எல்லாவற்றையும் காப்பவன் ஸர்வரக்ஷகன். தருமம், இவன் என்று வந்தால் இவனையே தருமத்திற்கு முன்னர் கொள்ள வேண்டும் படி தருமமே வடிவம் ஆனவன் தருமதத்துவன். அன்பினால் கட்டுப்படுபவன் ராகபந்தகன். ஆசைபட்டவர்களோடெல்லாம் கூடிக் குடக்கூத்தாடுபவன் ராசலீலகன்.

Monday, August 25, 2008

கண்ணன் பிறந்த இரவு-3: சொக்க வைக்கும் தாலாட்டு-மணி நூபுர தாரி!

மூன்றாம் இரவில், முத்தாய்ப்பான இரவில், குழந்தையை மட்டுமல்லாது, நம்மையே சொக்க வைக்கும் ஒரு அருமையான தாலாட்டைக் கேட்கலாம்! இது தமிழில் இல்லை! அதனால் என்ன? நேற்று இரண்டு இரவுகளும் தமிழ்த் தாலாட்டைக் கேட்டோம் அல்லவா? இன்று சற்று வித்தியாசமாக! நாட்டியத் தாலாட்டு! நடனம் ஆடிக் கொண்டே தாலாட்டு!

இந்தப் பாடலை எழுதியது "அலை பாயுதே" புகழ் - ஊத்துக்காடு வேங்கடகவி! பல அருமையான தமிழிசைப் பாடல்களைத் தந்துள்ளார்! கொஞ்சம் போல வடமொழிப் பாடல்களும் எழுதி உள்ளார்!

இந்தப் பாட்டுக்கு மெளலி அண்ணா/குமரன்/கவி அக்கா யாராச்சும் பொருள் சொன்னாங்கனா, மிகவும் மகிழ்வேன்!



மன்னார்குடி இராஜகோபால ஸ்வாமி (மன்னார்சாமி) மேல் பாடிய பாட்டு இது!
மன்னார்குடி 108 திவ்ய தேசங்களுள் ஒன்றல்ல எனினும் இது ஒரு அபிமான ஸ்தலம்!

Image
மன்னார்குடி இராஜகோபாலனை இன்னிக்கி எல்லாம் வைச்ச கண்ணு வாங்காம பார்த்துக்கிட்டு இருக்கலாம்! அம்புட்டு அழகு! சொக்கத் தங்கம்! அவன் கையில் குழலும், காலடியில் பசுவும், தங்க விக்ரகமாய் மின்னும்!
நீங்களே பாருங்க! படங்களைக் கிளிக்கிப் பெரிதாக்கிப் பாருங்க!

குழந்தை இல்லாதவர்கள், எம்பெருமான் கண்ணனை, இராஜகோபாலனை, இங்கு மடியேந்தப் பண்ணுவார்கள்!
தட்சிணத் துவாரகை என்று பெயர் பெற்ற தலம்! மணவாள மாமுனிகள் மங்களாசாசனம் செய்துள்ளார்!

ஊத்துக்காடு கவியின் பல பாடல்கள், மன்னார்குடி இராஜகோபாலனைச் சுற்றியே இருக்கும்!
* பாடலை நாட்டியப் பாணியில் இங்கே கேட்கலாம்!
* பம்பாய் சகோதரிகள் பாட, இங்கே கேட்கலாம்!

அருணா சாய்ராம்:



மணி நூபுர தாரி ராஜ கோபால
மணி நூபுர தாரி
கங்கண கிங்கிணி கண
(மணி நூபுர தாரி)

(மணி=மாணிக்கம்; நூபுரம்=சிலம்பு, கொலுசு; மணி நூபுர தாரி = மாணிக்க மணிச் சதங்கைகள், கங்கண-கிங்கிணி-கண என்று ஒலிக்க, இராஜ கோபாலக் குழந்தை ஓடி வருகிறான்!)

மணி கோமேதக லோகிதக நீல
மரகத வால வாயுஜ ஜால
மகுட விராஜித சிகுர மனோகர
முடிர சமகர களேபர கிங்கிணி கண

(மணி நூபுர தாரி)

மாணிக்கம், கோமேதகம், செம்பவழம், நீலம், பச்சை மரகதம் என்று பல அணிமணிகள் குழந்தைக்கு! தலையில் மகுடம் அலங்கரிக்க, அழகான கூந்தல் மேகம் போல் பரவ, குழந்தை ஓடி வரும் களேபரத்தில், கங்கண-கிங்கிணி-கண என்று ஒலிக்கிறதே!

மலயஜ ரஞ்சன யக்ஷ கர்த்தம
வர்ணக மிஷ்ரத அனுபோத
திலக மகைக சுகந்த விலேபன
திரிபுவன ப்ரகடித ப்ரதாப

ஜலதர நீல சமத்யுதி பால
ஸ்வாமி ஸ்ரீ ராஜ கோபால


லலாம கலோல லலித லலாட
மாலாத மால சுவர்ண கபோல
லாலித கோப கோபீ ஜன லோல
காளிங்க லீல கருணா லவால! - லல!
(மணி நூபுர தாரி)

ராகம்: நீலாம்பரி
தாளம்: ஆதி
வரிகள்: ஊத்துக்காடு வேங்கடகவி
Image

செட்டியார் திருக்கோலத்தில், கையில் தராசுடன், இராஜகோபாலன்

Wednesday, June 11, 2008

96. எம்.எஸ்.வி-இளையராஜாவைச் சேர்த்து வைத்த கண்ணன் பாட்டு!

"மெல்லத் திறந்தது கதவு-ன்னு ஒரு படம் வந்துச்சி! அதுல யாரு மீஜீக் போட்டாங்க-ன்னு சொல்லுங்க பார்ப்போம்!
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி - இசை ஞானி இளையராஜா ரெண்டு பேரும் சேர்ந்து!"

"ஆகா...இப்படி ஒரு உலக அதிசயம் நம்ம தமிழ் சினிமாவிலா?"

"ஆமா! ஆமா!"

"அட, என்ன தான் குரு-சிஷ்யன் உறவு ரெண்டு பேருக்கும் இருந்துச்சி என்றாலும், இவிங்கள இப்படிச் சேர்த்து வச்சது யாருப்பா?"
Image
"சாட்சாத், நம்ம கண்ணபிரான் தான்!"

"யாரு? கேயாரெஸ் கேயாரெஸ்-ன்னு கூப்புடறாங்களே? அந்தக் கண்ணனா?"

"அடச்சே! அவன் பொடிப் பையன்! படம் வந்தப்போ அவனுக்குப் பத்து வயசு கூட இருக்காது! நான் சொல்லுறது ஒரிஜினல் கண்ணன், பரந்தாமன்! கிருஷ்ண பரமாத்மா!
சண்டை வேணாம்-னு தூது எல்லாம் போவாரே! ஆனாப் போயிட்டு வந்து சண்டையைச் சூப்பரா போடுவாரே! அவரு!"

"அடங்கொக்கமக்கா! கண்ணனா சேர்த்து வச்சாரு? எத வச்சி சொல்லுற நீயி?"

"மெல்லிசை மன்னரு, "குழலூதும் கண்ணனுக்குக் குயில் பாடும் பாட்டு கேக்குதா"-ன்னு இசை அமைக்க...
இளையாராஜா, "பாவன குரு-பவன-புராதி ஈசம் ஆச்ரயே"-ன்னு இன்னொரு கண்ணன் பாட்டுக்கு அதே படத்தில் இசை அமைச்சாரு!"

"சூப்பரு! கண்ணன் லீலையே லீலை! மேல தகவலைச் சொல்லு மக்கா!"

"சரி, கொஞ்சம் இதன் பின்னணி என்னான்னு சொல்லுறேன்! மத்த கதை எல்லாம் எம்.எஸ்.வி-யின் சிஷ்யப் பிள்ளையான எங்க ஜிரா வந்து சொல்லுவாரு!"



இளையராஜாவின் கொடி பறக்க ஆரம்பித்து விட்டது, அப்போது!
வெகுஜனக் கலைஞர்-னா அது ராஜா தான்! புதுசு புதுசா இசை கொடுப்பாரு!
கிராமத்து இசையும் கொடுப்பாரு! அதே சமயத்தில் தமிழ் சினிமா இது வரை பார்த்திராத மெட்டுகளையும் அள்ளித் தருவாரு!

இளையராஜா வீட்டு இட்லி சட்டி கூட இசை அமைக்கும்!
தோசைத் தட்டு கூடத் தோடி பாடும்! - அப்படி, இப்படி-ன்னு ஒரே புகழ்மாலை தான்!

எந்த ஒரு மகோன்னதமான இசை அமைப்பாளருக்கும், ஆறுமுகத்தால், முதலில் ஏறுமுகம், பின்னர் இறங்குமுகம்-னு இருக்கும்-ல? எல்லாமே அவன் திருவிளையாடல் தானே? மெல்லிசை மன்னருக்கு அப்போது இறங்கு முகம்!
அவரால் சூப்பர் ஹிட்களைத் தொடர்ச்சியாகத் தர முடியாத காலகட்டம்! MSV இசை out-of-date என்றெல்லாம் பேசப்பட்ட காலகட்டம்!

ராஜா-ராஜாதி ராஜன் இந்த ராஜா! ராஜா-தூக்காதே வேறு எங்கும் கூஜா!
இப்படி எல்லாம் ஒரு இசை அமைப்பாளரைப் பாடல் வரிகளில் கொஞ்சம் ஓவராகவே கொண்டாடி, கட்-அவுட் வைத்த கதையைத் தமிழ் சினிமா எப்போதும் கண்டதில்லை!

இத்தனைக்கும் ராஜா, எம்.எஸ்.வி மீது மதிப்பு வைத்திருப்பவர் தான்! ஆனால் தொழில்-னு வந்துட்டா குருவாவது? சிஷ்யராவது?? என்கிற நிலைமை!

பஞ்சு அருணாச்சலம் மூலமாகக் கச்சேரியைத் துவங்கிய ராஜா, எம்.எஸ்.வி-யின் ஆஸ்தான இயக்குனர்களை எல்லாம் கூட வலை வீசிப் பிடித்து விட்டார்!
ஸ்ரீதர், கே.பாலாஜி என்று பழைய ஆட்களும் கூட கட்சி மாறிய நேரம்! போதாக்குறைக்கு, எம்.எஸ்.வி சொந்தப் படம் எடுத்து அதனால் பணப் பிரச்சனை!

அப்போது ராஜா, தன் படங்களின் பின்னணி இசைக்கு மட்டும் எம்.எஸ்.வி அவர்களை இசை அமைக்கச் சொல்லி நிலைமையை ஓரளவு சரி செய்ய உதவியதாகச் சொல்லுவார்கள்! ஆனால் இப்படிச் செய்யப்பட்ட இசையமைப்பு பரவலாக வெளிப்படுத்தப் படவில்லை!
Image
அந்தச் சமயத்தில் வந்த படம் தான் "மெல்லத் திறந்தது கதவு"!
ராஜா-விஸ்வநாதன் ஒற்றுமைக்காக - மெல்லத் திறந்தது கதவு!

இளையராஜாவும்-எம்.எஸ்.வியும் இணைந்து இசை அமைக்கிறார்கள் என்று பயங்கரமாக விளம்பரப் படுத்தப் பட்டது!


முதல் பாட்டே கண்ணன் பாட்டு! - கண்ணன் எம்பெருமானே ஒற்றுமைக்கு வழி வகுத்தான்!
* குழலூதும் கண்ணனுக்குக் குயில் பாடும் பாட்டுக் கேட்குதா?
அதுக்குப் பின்னாடியே இன்னொரு கண்ணன் பாட்டு! ஆனா மீனிங் தான் புரியலை!
* பாவன குரு-பவன-புராதி ஈசம் ஆச்ரயே

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி பாடல்களுக்கு இசை அமைப்பாரு!
பாடல்களின் பின்னணிக்கு, துவக்கம் மற்றும் Interlude-களுக்கு இசைஞானி இளையராஜா இசை அமைப்பாரு!
இப்படி ஒரு ஜென்ட்டில் மேன் அக்ரீமென்ட்டு போட்டுகிட்டாங்க!
பாடல்கள் அத்தனையும் இனிமை! படத்தில் மற்ற பாடல்களும் ஹிட் தான்!

* தில் தில் தில் மனதில் - SPB/சுசீலாம்மா
* வா வெண்ணிலா உன்னைத் தானே - SPB/ஜானகி
* ஊரு சனம் தூங்கிருச்சி - ஜானகி
* சக்கர கட்டிக்கு சிக்குற குட்டிக்கு - சசிரேகா & குழுவினர்
* இன்னும் ரெண்டு பாட்டு...யாராச்சும் கொமென்ட்டுல சொல்லுங்க!

கண்ணன் பாட்டுல, இன்னிக்கி அந்த ஒற்றுமைப் பாட்டு(க்கள்)!
இன்னிக்கி 96th பதிவு! 100க்கு என்ன பண்ணலாம் மக்கா?


முதலில் MSV இசையமைக்க, ராஜா பின்னணி!
* குழலூதும் கண்ணனுக்கு! - இங்கு கேட்கலாம்!

குழலூதும் கண்ணனுக்குக் குயில் பாடும் பாட்டுக் கேட்குதா?
குக்கூ குக்கூ குக்கூ!
என் குரலோடு மச்சான் உங்க குழலோசை போட்டி போடுதா?
குக்கூ குக்கூ குக்கூ!

இலையோடு பூவும், தலையாட்டும் பாரு!
இலையோடு பூவும் காயும், தலையாட்டும் பாரு பாரு!
(குழலூதும்)

மலைக்காத்து வீசுற போது, மல்லிகைப் பூ பாடாதா?
மழைமேகம் கூடுற போது, வண்ண மயில் ஆடாதா?
என் மேனி தேனரும்பு! என் பாட்டு பூங்கரும்பு!!
மச்சான் நான் மெட்டெடுப்பேன்! உன்னைத் தான் கட்டிவைப்பேன்!
சுகமாகத் தாளம் தட்டிப் பாடட்டுமா?
உனக்காச்சு எனக்காச்சு, சரிஜோடி நாமாச்சு,கேளைய்யா!

(குழலூதும்)
Image
கண்ணா உன் வாலிப நெஞ்சை என் பாட்டு உசுப்புறதா?
கற்கண்டு சக்கரை எல்லாம் இப்பத் தான் கசக்குறதா?
வந்தாச்சு சித்திரை தான்! போயாச்சு நித்திரை தான்!
பூவான பெண்ணைத் தொட்டா, ராவானா ஏங்குது தான்!
மெதுவாகத் தூது சொல்லிப் பாடட்டுமா?
விளக்கேத்தும் பொழுதானா, இளநெஞ்சு படும்பாடு, கேளைய்யா!

(குழலூதும்)

குரல்: சித்ரா
வரிகள்: ???
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் (பாட்டுக்கு), இளையராஜா (பின்னணிக்கு)
படம்: மெல்லத் திறந்தது கதவு


இப்போ ரோல் சேஞ்ச்!
ராஜா இசையமைக்க, MSV பின்னணி!

** பாவன குரு பவன புரா! - இங்கே கேட்கலாம்!


பாவன குரு-பவன-புராதி ஈசம் ஆச்ரயே!
ஜீவன தர சங்காசம், கிருஷ்ணம் கோலோகேசம்!
பாவித நாரத கிரீசம், திரிபுவனா வனாவேசம்!!
(பாவன குரு-பவன-புராதி)

பூஜித விதி புரந்தரம், ராஜித முரளீதரம்!
விரஜ லலா (ஆ)னந்த கரம், அஜித முதாரம்!! - கிருஷ்ணா
ஸ்மர சத சுபகா (ஆ)காரம், நிரவதி கருணா பூரம்!
ராதா வதன-ச கோரம், லலிதா சோதரம் பரம்!!

(பாவன குரு-பவன-புராதி)
Image
(இந்தப் பாட்டின் மெலடி சூப்பரா இருக்குப்பா, தப்லா-வுல வாசிப்பு!
பாட்டின் பொருள் யாராச்சும் சொன்னீங்கனா புண்ணியமாப் போகும்! அனுபவிச்சிக் கேட்கலாம்....)


குரல்: சித்ரா (தானே ???)
வரிகள்: லலிதா தாசர்
இசை: இளையராஜா (பாட்டுக்கு), எம்.எஸ்.விஸ்வநாதன் (பின்னணிக்கு),
படம்: மெல்லத் திறந்தது கதவு
ராகம்: ஹம்சானந்தி
தாளம்: ரூபகம்


படத்தில் மோகன், ராதா, நம்ம அமலா!
இசைக் கல்லூரியில் பர்தா போட்டுக் கொண்டு "பாவன குரு பவன புரா"-ன்னு பாடும் போது, பர்தாவுக்குள் அந்தக் கண்கள் சூப்பர் தான்!
என்றாலும்...படத்திலும், மனத்திலும் எப்போதும் நிக்குறது
அமலா! அமலா! அமலா! :-)
Image

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP