Blog Archive

Showing posts with label Gaya. Show all posts
Showing posts with label Gaya. Show all posts

Tuesday, July 03, 2018

1399, வாராணசி வந்துவிட்டோம்.காசிப்பயணத்தின் நடுப்படி

Image எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

 சுகமான பேச்சு, சீட்டு விளையாடுதல், அப்போது வந்திருந்த
 சிலபடங்களின் பாடல்களைக் கேட்டல்
என்று  பொழுது இரவை எட்டியது. அவர்களைப் பார்க்க வெங்கட் ராமனே வந்துவிட்டார்.

அம்மாவுக்கு என்ன உடம்பு,
என்று விசாரித்துவிட்டு அதெல்லாம் பத்தியமா உங்களுக்குச் செய்து கொடுக்கிறேன்
அம்மா. என்றதும் நால்வருக்கும் மிக மகிழ்ச்சி.
இரவுக்குப் புளிக்காத தயிர்சாதமும், சூடான் பாலும் ,வாழைப் பழமும் அவரிடம் கேட்டுக் கொண்டார்கள்.
அவர் கையில் இரண்டு பயத்தலாடு வைத்துக் கொடுத்தார் வஞ்சுமா,
தாங்கள் கொண்டு வந்திருந்த கமலா ஆரஞ்ச் பழங்களை லக்ஷ்மிமா
தட்டில் வைத்து அவரிடம் கொடுத்தார்.
இது நல்ல வேடிக்கை என்றபடி வாங்கிக் கொண்டார் வெங்கடராமன்.

இரவு பார்ப்பதாகச் சொல்லிவிட்டுச் சென்றார்.
கை மஹா சுத்தம். அவர் சமைத்துச் சாப்பிடக் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று மெச்சிக் கொண்டார் வாசு.

அடுத்த நாள் வாராணசியில் இறங்கியதும் விடுதியில் குளித்துவிட்டு
 என்ன செய்யலாம் என்று திட்டம் இட ஆரம்பித்தனர்.
 அவர்களுக்கு முக்கிய இடம் கயாவும், அங்கு செய்ய வேண்டிய ஸ்ராத்தமும்.
அக்ஷய வடம், கங்கை ஸ்னானம், பிறகு முடிந்தால் வஞ்சுமாவின் சௌகர்யத்தைப் பொறுத்து
விமானப் பயணமாக ரிஷிகேஷ் செல்ல தீர்மானம்.
லக்ஷ்மி நாராயணன் தம்பதிகளும் இதே முனைப்பில் இருந்தனர்..
 அவர்களுக்கு தில்லியில் உறவினர்கள்  இருந்ததால்
வாராணசியில் இருந்து தில்லிக்குப் பயணிக்கப் போவதாகச் சொன்னார்கள்.

முன்னோர்களுக்குத் திதி கொடுப்பதே முக்கியம், பிறகு கோயில்கள்
என்றூ தீர்மானமானது.
 வஞ்சும்மாவிடம் ஓகே தானே என்று கேட்டுக் கொண்டார் வாசு.
முடிந்ததைச் செய்யலாம். எனக்கு முடியவில்லை என்று தோன்றினால் உங்களிடம்
 சொல்கிறேன் என்று சிரித்தபடி பதில் அளித்தார் அவர்.
எனக்காக விட்டுக் கொடுக்காதே. என்று அன்போடு சொன்ன கணவனிடம், நான் அப்படியெல்லாம்
செய்வதாக இல்லை. கவலை வேண்டாம் என்று அத்துடன் முடித்துக் கொண்டனர்.

நாராயணனும் லக்ஷ்மியும் இவர்களைக் கனிவுடன் பார்த்தபடி இருந்தனர்.
அப்படியே தங்கள் திருமணம் 1943இல் கீழனத்தம் கிராமத்தில் நடந்த கதையை
நகைச்சுவையாகச் சொல்ல ஆரம்பித்தார்.
மாப்பிள்ளை அழைப்பின் போது சாரட் வண்டி குடை சாய்ந்ததையும் தான் தப்பி
இறங்கியதையும் சொல்லும்போது எல்லோருக்கும் சிரிப்புத் தாங்க முடியவில்லை.

எங்க கீழ நத்தம் குதிரை மக்கர் பண்ணாது. இவர்கள் வீட்டில் திருனெல்வேலிக் குதிரை வேண்டும் என்றதால் அங்கிருந்து  வரவழைத்தோம்.
அதுக்கு அப்பப் பார்த்து ஜீரணம் சரியில்லாமல்
வலுவில்லாமல் இருந்தது. ஆள் ஏறியதும் மிரண்டு விட்டது பாவம் என்று
சிரிப்புக்கு நடுவில் லக்ஷ்மிமா சொன்னார்.

உங்க கல்யாணம் எப்படி என்றதும் , வஞ்சுமாவும் வாசுவும்
சிரித்துக் கொண்டார்கள். அது ரொம்ப சுவாரஸ்யம்.
இவள் வந்து என்னைத்தான் செய்துப்பேன்னு எங்க பாட்டிகிட்ட சொல்லிவிட்டாள்.
என்றாரே பார்க்கணும்.
அடக் கடவுளே, அப்படியே மாற்றிச் சொல்கிறார் என்று அவர் தோளில்
செல்லமாகத் தட்டினார்.
 என்னை இவர் எங்க தாத்தாவின் சதாபிஷேகத்திலேயே
பார்த்து வைத்துவிட்டார்.
 சொந்தமாக வேற போய்விட்டது. ஐந்து வருஷம் கழித்து அம்மாவிடம் சொல்லி
எங்கள் சந்திப்பு நடந்தது. கும்பகோணத்தில் திருமணம் என்றதும்,
லக்ஷ்மிக்கு ஆச்சர்யம்.
அதெப்படி உங்களுக்கு என்ன வயசு என்று வஞ்சுவிடம் கேட்க, எனக்கு 13 வயசு இருக்கும் . இவருக்கு 20 என்றார்.

love at first sight என்று கேள்வி கேட்டார்  நாராயணன்.
யெஸ் சார் என்று விளையாட்டாக சல்யூட் வைத்துக் கொண்டார்.வாசு.
நெகிழ்ந்துவிட்டனர் லக்ஷ்மியும் நாராயணனும்.

எட்டு மணிக்குச் சரியாக தள்ளு வண்டியில் வைத்த சாப்பாடு வந்ததும். பேச்சு
நிறுத்தி உணவை உண்டனர். நடுவில்  ஸம்சாரம் என்பது வீணை பாடலைத் தட்டிவிட்டு
 மகிழ்ச்சியாகக் கேட்டுக் கொண்டே சாப்பிட்டு முடித்தனர்.

பத்து மணி வாக்கில் அண்ணமாச்சார்யாரின் கீதங்களை
எம் எஸ் அம்மாவின் குரலில் கேட்டபடி உறங்கச் சென்றனர்.
Image
Image
Image