Blog Archive

Showing posts with label love.. Show all posts
Showing posts with label love.. Show all posts

Friday, January 21, 2022

அதிசயம்ஒற்றுமை,அன்பு.

வல்லிசிம்ஹன்


எல்லோரும் என்றும் வளமாக வாழ வேண்டும்.
எது  விந்தை ...எது அதிசயம்.
இவை காலங்காலமாக 
நான்  ,நாம் ஆராய்ந்து வரும் உண்மை.
அன்பின் சகோதரி கமலா ஹரிஹரன் சொல்லி இருக்கும் கவிதை
போல பெற்றோர் பிள்ளைகள் 
உறவு மாறிக் கொண்டே தான் இருக்கிறது.

நான் சிறியவளாக இருக்கும்போது எனக்குக் கிடைத்த கூட்டுக் குடும்பம்
என் குழந்தைகளுக்குக் கிடைக்கவில்லை.
அவர்களுக்கு ஆதரவாக இருந்தது பெரும்பாலும் என் பெற்றோர்.

அதனால அங்கே ஆகர்ஷணை அதிகம்.

சிங்கத்தின் அம்மா மிக அருமையாக இருப்பார். இருந்தாலும்
12 பேரன் பேத்திகளுக்கு நடுவே
நம் குழந்தைகளுக்குக் கிடைக்கும் சலுகை
கொஞ்சம் மட்டுப் படும்:)

அதனாலயே அவர்கள் இன்னும் உரம் பெற்றார்கள்.
அதனால் நஷ்டம் ஒன்றும் இல்லை.

இப்போது நான் பாட்டியாக இருக்கும் போது
இளைய தலைமுறைகளின் சொற்களைக் கேட்டுக் 
கொள்கிறேன். அவர்களுக்கே உண்டான வேலை அழுத்தம், படிப்பு அழுத்தம்
எல்லா வற்றையும் பார்க்கும் போது இன்னும்
கொஞ்சம் பரிவுதான் காட்ட வேண்டி இருக்கிறது.

மிகவும் பிடித்த படங்கள் ஆனந்தம், பாண்டவர் பூமி,
எங்கள் குடும்பம் பெரிசு, மக்களைப் பெற்ற மகராசி 
இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

நாம்  நம் குடும்பத்தைக் கவனித்தது போலவே
இப்பொழுது நம் மக்கள் அவர்கள் குடும்பத்தை க்
கவனிக்கிறார்கள்.

நம்மைக் கண்காணிக்க வீட்டில் மாமியார்,பாட்டி எல்லோரும் இருந்தார்கள்.
இப்போது இவர்களுக்கு அந்தத் தொந்தரவும் இல்லை.:)

சம்சாரம் மின்சாரம் படத்தில் வரும் அழும் லக்ஷ்மி மாதிரி
இருக்க இப்போது யாரும் தயாரில்லை.

பெற்றோர்களே முதலில் அவர்களைத் தனிக் குடித்தனம்
வைக்கவே ஆசைப் படுகிறார்கள்.:)

எப்படியோ எல்லோரும் அவரவர் கணவனையும், பெண்டாட்டியையும்
,குழந்தைகளையும் நல்லபடியாகக்
கவனித்துக் கொண்டால் போதும் என்று நினைக்கிறார்கள்.
இருக்கலாம் தான். நமக்கும் வயது 80க்கு மேல் ஆகும்போது?

யாராவது வேண்டாமா. தனி வீட்டில் குடி இருக்கும் மூன்று
பெண்களை எனக்குத் தெரியும். 80க்கு மேல் வயதானவர்கள்தான்.

நலம் வாழப் பிரார்த்தனைகள்.