வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக வாழ வேண்டும் .
மார்கழி 18 ஆம் நாள்
உந்துமதக் களிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய்
காந்தம் கமழும் குழலி கடை திறவாய்
வந்தெங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல் மேல் பல்கால் குயிலி னங்கள் கூவின காண்
ப ந்தார் விரலி உன் மைத்துனன் பேர்பாட
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்......
ஆண்டாள் திருவடி இணையடிகளே சரணம்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பெருமாள் கோயிலுக்குப் போனால் நேராக சுவாமி சன்னதிக்கு போகக்கூடாது. தாயாரை முதலில் சேவிக்க வேண்டும். வீட்டில் கூட அப்படித்தானே! அப்பாவிடம் கோரிக்கை வைத்தால் “எதற்கடா அதெல்லாம் என்று மீசையை முறுக்குவார். அதையே, அம்மாவிடம் சொல்லி அப்பாவிடம் கேட்கச்சொன்னால், அதே கோரிக்கை பத்தே நிமிடத்தில் நிறைவேறி விடும். இதுபோல் தான் நாராயணனிடம் ஒரு கோரிக்கை வைத்தால்…அந்த மாயன் அவ்வளவு எளிதில் ஏற்கமாட்டான். அதையே தாயாரிடம் சொல்லி வைத்துவிட்டால் அவனால் தப்பவே முடியாது. நரசிம்மரின் கோபத்தைக் கூட அடக்கியவள் அல்லவா அவள்! அதனால், கண்ணனின் மனைவி நப்பின்னையை எழுப்பி, கண்ணனை எழுப்புகிறார்கள் பாவை நோன்பிருக்கும் பெண்கள்.
lமேற்சொன்னது நான் இணையத்தில் படித்தது.
உந்து மதக்களிற்றான் பாசுரம் ஸ்ரீ ராமாஜுஜர்,நம் திருப்பாவை
ஜீயருக்குண்டானது.
ஆண்டாள் அழைத்தது நப்பின்னையை. மதக்களிறுகளை அடக்குபவன், அழகான பரந்த தோள் களை
உடைய நந்தகோபன் திரு மருமகளே , நங்காய்,
கோழிகளும் ,குயிலினங்களும் கூவி அழைக்கும் காலைப் பொழுது
விடிந்துவிட்டது.,
கிருஷ்ணனுடன் களி
த்திருக்கும் வேளையில்
உன் கூந்தல் மணம் , மலர்மணம், துளசி மணம்
எல்லாம் கமழ,
உன் மலர்க்கரத்தில் வளைகளில் ஓசை ஒலிக்க ,
அன்புடன்,மகிழ்ச்சியுடன் எங்களை வரவேற்பாய்.
என்பது பாசுரத்தின் பொருள்.
திருப்பாவை ஜீயர் என்றழைக்கப் பட்ட ஸ்ரீராமானுஜர்
பாவைப்பாடல்களை பாடியபடி உஞ்சவிருத்தி செய்யும் காலத்தில் அவரது ஆசான் பெரிய நம்பியின் வீட்டருகில் வரும்போது, அவர் மகள் அத்துழாய்
என்னும் சிறுமி
ஜீயரைக் காணும் ஆர்வத்தில் மல்லிகைப் பூச்சூடிய கூந்தலும்,
வளையல்களும் கங்காணமும் மோதும் ஓசையுடன், வீட்டுக் கதவைத் திறந்த ஒலி யும் ஒளியும் காட்சி அவரை மூர்ச்சை அடையச் செய்தது.
அவரின் திருப்பாவையின் லயிப்பில் நப்பின்னையே வந்த நினைப்பில்
மயங்கி விட்டார்.
இதைப் போன்று நெகிழ்வு நமக்கு நேருமா தெரியாது. ஆனால் பாசுரங்களை அனுபவிக்கலாம்.
நப்பின்னையையும் ,நம்பியையும், அவர்களை இணைத்துப்
பார்த்த ஸ்ரீ கோதைநாச்சியாரையும் கொண்டாடுவோம்.
எல்லோரும் வளமாக வாழ வேண்டும் .
மார்கழி 18 ஆம் நாள்
உந்துமதக் களிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய்
காந்தம் கமழும் குழலி கடை திறவாய்
வந்தெங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல் மேல் பல்கால் குயிலி னங்கள் கூவின காண்
ப ந்தார் விரலி உன் மைத்துனன் பேர்பாட
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்......
ஆண்டாள் திருவடி இணையடிகளே சரணம்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பெருமாள் கோயிலுக்குப் போனால் நேராக சுவாமி சன்னதிக்கு போகக்கூடாது. தாயாரை முதலில் சேவிக்க வேண்டும். வீட்டில் கூட அப்படித்தானே! அப்பாவிடம் கோரிக்கை வைத்தால் “எதற்கடா அதெல்லாம் என்று மீசையை முறுக்குவார். அதையே, அம்மாவிடம் சொல்லி அப்பாவிடம் கேட்கச்சொன்னால், அதே கோரிக்கை பத்தே நிமிடத்தில் நிறைவேறி விடும். இதுபோல் தான் நாராயணனிடம் ஒரு கோரிக்கை வைத்தால்…அந்த மாயன் அவ்வளவு எளிதில் ஏற்கமாட்டான். அதையே தாயாரிடம் சொல்லி வைத்துவிட்டால் அவனால் தப்பவே முடியாது. நரசிம்மரின் கோபத்தைக் கூட அடக்கியவள் அல்லவா அவள்! அதனால், கண்ணனின் மனைவி நப்பின்னையை எழுப்பி, கண்ணனை எழுப்புகிறார்கள் பாவை நோன்பிருக்கும் பெண்கள்.
lமேற்சொன்னது நான் இணையத்தில் படித்தது.
உந்து மதக்களிற்றான் பாசுரம் ஸ்ரீ ராமாஜுஜர்,நம் திருப்பாவை
ஜீயருக்குண்டானது.
ஆண்டாள் அழைத்தது நப்பின்னையை. மதக்களிறுகளை அடக்குபவன், அழகான பரந்த தோள் களை
உடைய நந்தகோபன் திரு மருமகளே , நங்காய்,
கோழிகளும் ,குயிலினங்களும் கூவி அழைக்கும் காலைப் பொழுது
விடிந்துவிட்டது.,
கிருஷ்ணனுடன் களி
த்திருக்கும் வேளையில்
உன் கூந்தல் மணம் , மலர்மணம், துளசி மணம்
எல்லாம் கமழ,
உன் மலர்க்கரத்தில் வளைகளில் ஓசை ஒலிக்க ,
அன்புடன்,மகிழ்ச்சியுடன் எங்களை வரவேற்பாய்.
என்பது பாசுரத்தின் பொருள்.
திருப்பாவை ஜீயர் என்றழைக்கப் பட்ட ஸ்ரீராமானுஜர்
பாவைப்பாடல்களை பாடியபடி உஞ்சவிருத்தி செய்யும் காலத்தில் அவரது ஆசான் பெரிய நம்பியின் வீட்டருகில் வரும்போது, அவர் மகள் அத்துழாய்
என்னும் சிறுமி
ஜீயரைக் காணும் ஆர்வத்தில் மல்லிகைப் பூச்சூடிய கூந்தலும்,
வளையல்களும் கங்காணமும் மோதும் ஓசையுடன், வீட்டுக் கதவைத் திறந்த ஒலி யும் ஒளியும் காட்சி அவரை மூர்ச்சை அடையச் செய்தது.
அவரின் திருப்பாவையின் லயிப்பில் நப்பின்னையே வந்த நினைப்பில்
மயங்கி விட்டார்.
இதைப் போன்று நெகிழ்வு நமக்கு நேருமா தெரியாது. ஆனால் பாசுரங்களை அனுபவிக்கலாம்.
நப்பின்னையையும் ,நம்பியையும், அவர்களை இணைத்துப்
பார்த்த ஸ்ரீ கோதைநாச்சியாரையும் கொண்டாடுவோம்.