30+
தமிழ்மணத்தில் பின்னூட்டங்களின் இற்றைப்படுத்துகை: உயரெல்லை 30 என்கிறார்கள்.
பின்னூட்டத் தமிழுக்குக் கட்டாய ஓய்வு தேவையா? சென்னைக் கச்சேரியைப் பின் தொடர்ந்து...
நான் வேலை பார்க்கும் நிறுவனத்தின் நிரலி, பல சமயம் மக்கர் செய்யும். கோபமாய் கத்தும் வாடிக்கையாளரிடம் workaround (Top 20 programmers excuses) சொல்லியேப் பழக்கப்பட்டவன். அப்படி எல்லைகளை தகர்த்தெறிந்து பறப்பது செர்ஜி பூப்காக்களின் வேலை என்பதற்கேற்ப, சில ஆலோசனைகள்.
- ஒரு நாளைக்கு ஒரு பின்னூட்டம் மட்டுமே அனுமதிக்கவும். ஃபெப்ரவரி மாதம் என்றால், மார்ச் மாதத்தில் கூட உங்களின் பதிவு முகப்பில் இருக்கும்.
- அப்படி முப்பதைத் தாண்டியவுடன், 'இது 31-ஆவது மறுமொழி' என்று புதிய பதிவில் புதிய கணக்கைத் ஆரம்பிக்கவும்.
- பத்தைத் தொடும் தருணத்தில், ஒன்பதாவது துலச்சலை தொகுத்து வெளியிட்டு விடவும். (எப்படி: Blogger - how to edit comments | Edit Comments). இதன் மூலம் கிட்டத்தட்ட 90 பின்னூட்டங்கள் வரை முப்பதுக்குள் குண்டுசட்டியாக்கி குதிரையோட்டலாம்.
- உங்களுக்கு இன்னாரின் பதிவுகள் பிடிக்காதா? அவர் பதிவை இட்டவுடன் முற்றுகையிடுங்கள். முப்பது பேர்களில், முப்பது பின்னூட்டங்கள் இடுங்கள். ஆளின் பதிவு அம்பேல். (அவர் வெளியிடாவிட்டால், 'பதிவரின் கயமைத்தனம்' என்னும் தலைப்பில் தனிப்பதிவு இடுங்கள்).
- முப்பதுக்கு முன் போய் கருத்து சொன்னால், 'எல்லாரும் படித்து விடுவார்கள்'. ஆனால், எருமை மாடு அமிழ்ந்து கிடக்கும் குட்டை மாதிரி பின்னூட்டங்கள் தேங்கிய பிறகு போய் பதில் போட்டால், 'not to publish' என்று வரும் தனி மடலுக்கு பதிலாக, தைரியமாய் சொந்தப் பெயரிலேயே எழுதிவிட்டு வரலாம்.
- co.mments மாதிரி சேவையளிக்கும் நிரலிகளுடன் தமிழ்மணம் டீல் போட்டுவிட்டது என்று பதிவெழுதலாம்.
- முதல் முப்பதே சோதாதானே... அப்புறம் எதற்கு முப்பத்தொன்று? : Weblog comments (suck (usually)).
- பத்து புள்ளிகள் தராவிட்டால், பதிவு நிறைவுறாது என்னும் திட்டத்துக்கு கால்கோள் இட்டு விடாதீர்கள். எனவே...
- Pearls Before Swine:

- Lio:

கொசுறு: -

சந்தோஷ் சொல்வது போல் 'பதிவர்களாய் பார்த்து திருந்தாவிட்டால் ஒண்ணும் செய்ய முடியாது' என்பதற்கேற்ப பின்னூட்டவாசிகள், இந்த 'முப்பதுக்குள் மட்டும்' தடையை, ஆப்பர்ச்சூனிடியாக மாற்ற வேண்டுகோள் விடுக்கிறேன்.
முந்தைய பதிவு: பின்னூட்ட சாதனையாளர்களின் சுபாவம்: பிசாசு மொழி
